உலகின் இறுதிக்காலங்கள் -7
ஓ என் இறுதிக்கால அரச்சிஷ்டவர்கள்! அஞ்ஞானத்தின் கலாபனைகளைக்கு மத்தியில் தொடக்க கால அரச்சிஷ்டவர்களின் வாழ்வு வீரத்துவமிக்கதாக இருந்த்து என்றால்,என் கடைசி கால அர்ச்சிஷ்டவர்கள் வாழ்வு அதைவிட மூன்று மடங்கு,ஏழு மடங்கு,ஏழுக்கு ஏழு மடங்கு வீரத்துவமுள்ளதாக இருக்கும்.இருளானது எல்லாப் பக்கங்களிலிருந்தும் தங்களை மூழ்கடிக்கும்போதும்,பொய்மையானது தன்னை வழிபடும் படியும்,விசுவசிக்கும்படியும் தங்களை கட்டாயப்படுத்த முயலும் போதும் விசுவாசத்தின் மஜ்ஜையினால் போஷிக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த வாதைகளை எதிர்க்கொள்வதற்கு சிங்கங்களின் இருதயங்களையும்,சூரியனாகிய என்னை காண்பதற்கும்,சத்தியமாகிய என்னிடம் பறந்து வருவதற்கும் கழுகுகளின் கண்களையும்,இறக்கைகளையும் கொண்டிருப்பார்கள். உலகின் இறுதிக்காலங்கள் இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !