Posts

Showing posts from August, 2021

பக்தியோடு பூசைக்காண்பதால் பெற்றுக் கொள்ளப்படும் வரப்பிரசாதங்களும் பலன்களும்-4

Image
  49.பூசை பரிசுத்தமான விசுவாசத்தின் ஒப்பற்ற செயல்பாடாக இருக்கிறது.இது பெரும் சம்பாவனையைப் பெற்றுத்தரும். 50.திவ்விய நற்கருணை முன்னும்,திரு இரத்தம் நிறைந்த திரு கிண்ணம் முன்னும் நாம் பணிந்து வணங்கும்போது ,ஒர் உன்னதமான ஆராதனை முயற்சியை செய்கிறோம்‌. 51.திவ்விய நற்கருணையை வணக்கத்தோடு உற்றுநோக்கும் ஒவ்வொரு முறைக்கும் ,மோடசத்தில் ஒரு சம்பாவனையை பெற்றுக்கொள்கிறோம். 52.நாம் பூசைக்காணும் ஒவ்வொரு முறையும் மிக்கடுமையான தவ முயற்சிகளைவிட அதிகமான பரிகாரத்தை நமது பாவங்களுக்குரிய பரிகாரத்தை செலுத்தலாம். 53.சாவானப்பாவத்தோடு நாம் பூசைக்கண்டால் மனந்திரும்பும் வரத்தை கடவுள் தருகிறார். 54.தேவ இஷ்டபிரசாத நிலையில் பூசையில் பங்கெடுத்தால் வரப்பிரசாதத்தில் இன்னும் அதிகரிக்கும் வரத்தை தருகிறார். 55.திவ்விய பலிப்பூசையில் நாம் கிறிஸ்துநாதரின் திருச்சரீரத்தை புசித்து திரு இரத்தத்தை பானம் செய்கிறோம். 56.தேவதிரவிய அனுமானமாகிய திரையின் கீழ் மறைந்திருக்கும் கிறிஸ்துநாதரை நமது கண்களால் காணவும் அவரால் காணப்படவும் சலுகைப் பெறுகிறோம். 57.குவானவரின் ஆசீர்வாதத்தை பெறுகிறோம்.அது மோட்சத்தில் கிறிஸ்துநாதரால் உறுதிப்படுத்...

பக்தியோடு பூசைக்காண்பதால் பெற்றுக் கொள்ளப்படும் வரப்பிரசாதங்களும் பலன்களும்.

Image
 25.கிறிஸ்துநாதர் பேறுபலன்களில் ஒரு பகுதியை நமது கணக்கில் வைக்கிறார்.நமது பாவங்களுக்கு பரிகாரமாக பிதாவாகிய சர்வேசுரனுக்கு அவற்றைச் செலுத்தலாம். 26.நமக்காக கிறாஸ்துநாதர் தம்மையே அன்னைத்திலும் அதிக பயனுள்ள சமாதானப் பலியாக ஒப்புக்கொடுக்கிறார்.சிலுவையின் மீது நமது எதிரிகளுக்காக பரிந்து பேசியது போல நமக்காகவும் அவர் ஏக்கத்தோடு பரிந்துப்பேசுகிறார். 27.அவரது விலைமதியாத திரு இரத்தம் அவரது புனித இரத்த நாளங்களிலிருந்து வெளிப்பட்ட இரத்தத்துளிகளுக்கு ஒப்பான கணக்கற்ற வார்த்தைகளில் நமக்காக பரிந்து பேசி ஜெபிக்கிறது. 28.அவரது திருச்சரீரம் தாங்கிய ஆராதனைக்குரிய ஒவ்வொரு காயமும் நமக்காக இரக்கத்தை மன்றாடும் குரலாக இருக்கிறது. 29.இந்தப் பரிகாரப்பலியின் நிமித்தமாக பூசையின் போது நாம் முன்வைக்கும் விண்ணப்பங்கள் மற்ற சமயங்களில் வழங்கப்படுவதை விட அதிச்சீக்கிரமாக நமக்கு வழங்கப்படும். 30.பூசையில் பங்குப் பெற்று ஜெபிப்பதைப்போல அதிக நன்றாக வேறு ஒரு போதும் நம்மால் ஜெபிக்க முடியாது. 31.ஏனெனில் கிறிஸ்துநாதர் தமது  செபங்களை நமது செபங்களோடு இணைத்து அவற்றை தம் பரலோக பிதாவிற்கு ஒப்புக்கொடுக்கிறார் என்பதாலேயே...

பக்தியோடு பூசைக்காண்பதால் பெற்றுக் கொள்ளப்படும் வரப்பிரசாதங்களும் பலன்களும்.-2

Image
  13.கடவுளுக்கு இந்த திவ்விய பலி பூசையை ஒப்புக்கொடுப்பதன் மூலம் அவருக்கு நாம் தர தவறிய மகிமைக்கு உரிய பரிகாரம் செய்கிறோம். 14.நமக்காக கிறிஸ்து நாதர் பிதாவாகிய சர்வேசுரனுக்கு தம்மையே புகழ்ச்சி பலியாக ஒப்புக்கொடுத்து,அவரது திருநாமத்தை துதிக்க தவறிய நமது பாவங்களுக்காக பரிகாரம் செய்கிறார். 15.கிறிஸ்துநாதர் ஒப்புக்கொடுக்கும் இந்த திவ்விய பலியை நாம் கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம் சம்மனசுகள் செலுத்துவதை விட அதிகமான ஸ்துதி புகழ்ச்சியை நாம் செலுத்துகிறோம். 16.நமக்காக கிறிஸ்துநாதர் உத்தமமான நன்றியறிந்த  தோத்திர பலியாகத் தம்மையே ஒப்புக்கொடுத்து நாம் நன்றி செலுத்த தவறியப் பாவங்களுக்கு பரிகாரம் செய்கிறார். 17.கிறிஸ்துநாதரின் இந்த நன்றியறிதலை   கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம் அவர் நம்மீது பொழிந்துள்ள நன்மைகள் அனைத்திற்கும் நாம் போதுமான அளவு நன்றி செலுத்துகிறோம். 18.நமக்காக கிறிஸ்துநாதர் சர்வ வல்லபமுள்ள பலிப்பொருளாக தம்மை பலிக்கொடுப்பதன் மூலம் நாம் நோகச் செய்த கடவுளோடு நம்மை மீண்டும் ஐக்கியப்படுத்துகிறார். 19.நமது அற்ப பாவங்களை விட்டுவிடுவதாக உறுதியான பிரதிக்கினை செய்யும் பட...

பக்தியோடு பூசைக்காண்பதால் பெற்றுக் கொள்ளப்படும் வரப்பிரசாதங்களும் பலன்களும்.

Image
 1.நமது இரட்சணியத்திற்காக, பிதாவாகிய சர்வேசுரன் தம் நேசத்திற்க்குரிய திருச்சுதனை பரலோகத்திலிருந்து பூமிக்கு அனுப்புகிறார். 2.நமது இரட்சணியத்திற்காக, பரிசுத்த ஆவாயானவர் அப்பத்தையும்,திராட்சை இரசத்தையும் கிறிஸ்து நாதருடையை  மெய்யான திருசரீரமாகவும்,இரத்தமாகவும்   மாற்றுகிறார். 3.நமக்காக, தேவச்சுதன் பரோலகத்திலிருந்து இறங்கி வந்து பரிசுத்த அப்ப வடிவத்தின் கீழ் தன்னை மறைத்துக் கொள்கிறார். 4.திவ்விய நற்கருணையின் சிறு துண்டிலும் கூட தாம் பிரசன்னமாயிருக்கும் அளவுக்கு தம்மை தாழத்திக்கொள்கிறார். 5.நமது இரட்சணியத்திறக்காக அவர் இரட்சணியத்தின் மனிதவதார இரகசியத்தைப் புதுப்பிக்கிறார். 6.நமது இரட்சணியத்திறக்காக திவ்வியபலிப்பூசை   நிறைவேற்றப்படும் போதெல்லாம் அவர் பரம இரகசியாமான முறையில் பூமியில் மீண்டும் பிறக்கிறார். 7.நமது இரட்சணியத்திற்க்காக, தாம் பூமியிலிருந்தபோது நிகழ்த்திய அதே வழிபாட்டுச் செயல்களை அவர் பீடத்தின் மீது நிகழ்த்துகிறார். 8.நமது இரட்சணியத்திறக்காக அவரது பாடுகளில் நாம் பங்குபெறும்படியாக  அவர் தமது கசப்பான பாடுகளை புதுப்பிக்கிறார். 9.நமது இரட்சணியத்திறக்க...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 ஒரு குருவானவர் ஒரேயொரு பூசை வைப்பதன் மூலம் கடவுளுக்கு தரும் மகிமையை,முழுத் திருச்சபையும் அவருக்கு தர முடியாது.அவ்வளவு அதிகமான வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ளவும் முடியாது.இதன் காரணமாக சேசு கிறிஸ்துநாதரை திவ்விய பலியாக தாம் ஒப்புக்கொடுக்கிற ஒரேயொரு பூசை நிறைவேற்றுவதன் மூலம் எவ்வளவு பெரிய மகிமையை ஆண்டவருக்கு தருகிறார் என்றால் சகல மனிதர்களும் கடவுளுக்காக மரித்து,தங்கள் அனைத்து உயிர்களையும் பலியாக ஒப்புக்கொடுத்தாலும் அத்தகைய மகிமையை ஆண்டவருக்கு தர முடியாது. அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். பரிசுத்த குருத்துவத்தின் மகத்துவத்தை தெரிந்துக்கொள்வோம்.பூசையின் அளவற்ற மேன்மையை முழுமையாய் புரிந்துக் கொள்வோம். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நீ பார்வையில் சுத்தமாக இருந்தால் ,செயல்களிலும் நினைவுகளிலும் சுத்தமாக இருப்பாய்.பரிசுத்தமாக இருக்க ஒரே வழி *கண்ணடக்கம்*.அதாவது நல்லதல்லாத காரியங்களை பாரக்கவிடாதபடி கண்களை காப்பதாம். அர்ச்.இஞ்ஞாசியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சேசுகிறிஸ்து நாதருடைய மெய்யான சரீரத்தின்  மீது குருக்களுக்குள்ள  அதிகாரத்தைப் பொறுத்தவரை, அவர்கள் தேவ வசீகர வார்த்தைகளை உச்சரிக்கும் போது,அவர்களுக்கு கீழ்ப்படிந்து தேவதிரவிய அனுமானப் பொருட்களின் தோற்றத்தின் கீழ் அவர்களுடைய கரங்களுக்குள் வருவது அவதரித்த வாரத்தையானவர் தம்முடைய கடமையாகவே ஆக்கிக் கொண்டிருக்கிறார். அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். பரிசுத்த குருத்துவத்தின் மகத்துவத்தை தெரிந்துக்கொள்வோம்.பூசையின் அளவற்ற மேன்மையை முழுமையாய் புரிந்துக் கொள்வோம். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒரு பரிசுத்த துறவிக்கு குருப்பட்டம் வழங்கிய பிறகு,தேவாலய வாசல் வரைக்கும் சென்றவர்,தமக்குப்  பின்னால் வந்துக்கொண்டிருந்த புதிய குருவிற்கு வழிவிடும் படி ஒதுங்கி நின்றார்.அப்படி நின்றதன் காரணம் பின்வருமாறு. இந்த புதியக்குருவின் காவல்தூதரை காணும் பாக்கியத்தை கடவுள் எனக்கு தந்தார்.இவர் குருப்பட்டம் பெறும் வரை அவருடைய காவல்தூதர் அவருக்கு முன்னாலோ அல்லது வலது பக்கத்திலேதான் எப்போதும் இருந்தார்.ஆனால் அவர் குருப்பட்டம் வாங்கிய வினாடியிலிருந்து சம்மனசானவர் அவரது இடப்புறத்தில் நடந்து வருகிறார்.குருவனாவர் முன் செல்ல மறுக்கிறார்.அவரோடு ஒரு பரிசுத்தப்போட்டியில் ஈடுபடும்படியாக  நானும் இந்த நல்ல குருவுக்குப் பின்னால் வரும்படி வாசலிலே நின்றுவிட்டேன். அர்ச்.பிரான்ஸிஸ் சலேசியார். பரிசுத்த குருத்துவத்தின் மகத்துவத்தை தெரிந்துக்கொள்வோம்.பூசையின் அளவற்ற மேன்மையை முழுமையாய் புரிந்துக் கொள்வோம். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுள் விரும்பாத எதுவும் நமக்கு நடக்காது, அவர் விரும்புவது எல்லாம் நமக்கு எவ்வளவு மோசமாகத் தோன்றினாலும், முடிவில் அது எப்போதும் சிறந்ததாக இருக்கும் ...  அர்ச்.தாமஸ் மோர், இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கெட்டவர்களுக்கு சமாதானமில்லை. பாவியானவன் எவ்வளவு உலக இன்பங்களை அனுபவித்தாலும் அவனது பரிதாபமான இருதயம் முட்களும்,கசப்பும் நிரம்பியதாகவே நிலைத்திருக்கும்.ஆகவே செல்வங்களும்,இன்பங்களும்,கேளிக்கைகளும் அவனைச் சூழந்திருந்தாலும்,எப்போதும் அமைதியற்றவனாகவும்,சிறு பிரச்சனைக்கும் வெறிநாயைப்போல கோபவெறி கொள்பவனாகவுமே நீ அவனைக் கண்பாய்.கடவுளை நேசிப்பவனோ தனக்கு விரோதமான காரியங்கள் நிகழும்போது தேவ சித்தத்திடம் தன்னைக் கையளித்து சமாதானத்தைக் கண்டடைகிறான். அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மனிதர்களில் அதித மகிழ்ச்சியானவர்களாகிய குருக்கள். பக்தியுள்ள குருக்கள் திவ்வியபலிபூசை நிறைவேற்றும் போது சொல்லமுடியாத ஆழ்ந்த திருப்த்தியையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறார்கள். 1.கடவுளுடனேயே நேரடியான நெருங்கிய தனிப்பட்ட தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.அவரை கரங்களில் ஏந்துகிறார்கள்.அவரை நெருங்கி பாரத்துக்கொண்டிருக்கிறார்கள்.அவருடன் உரையாடுகிறார்கள்.அவரும் வாக்குக்கெட்டாத நேசத்தோடு அவர்களுடைய இருதயங்களை ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். 2.சகல சம்மனசுகளும், அரச்சிஷ்டவர்களும் மோட்ச்சத்தில் அவருக்கு தருவதை விட மேலான மகிமையை,அவரே ஆசிக்ககூடிய அனைத்திலும் மேலான மகிழ்ச்சியையும் மகிமையையும் குருக்கள் அவருக்கு தந்துக்கொண்டிருக்கிறார்கள். 3.குருக்கள் தங்கள் மீதும்,தங்கள் நாட்டின் மீதும்,உலகத்தின் மீதும் எண்ணற்ற ஆசீர்வாதங்களை கொண்டு வருகிறார்கள். 4.குருக்கள் தங்கள் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டிருக்கிற   பரிசுத்த சம்மனசுகளின் படையணிகளால் சூழப்பட்டுள்ளார்கள். 5.இறுதியாக உத்திரிக்கும் ஸ்தலத்தில் வேதனையுறும் ஆன்மாக்களுக்கு உதவி செய்து ஆறுதல் அளிக்கிறார்கள். திவ்விய பலிபூசையின் அதிசய...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  திவ்விய பலி பூசையின் நற்பயன் விளைவிக்கும் தன்மையை மட்டும் கத்தோலிக்கர்கள் புரிந்துக் கொள்வார்கள் என்றால் அதில் கலந்துக்கொள்ளப் படை எடுத்துவரும் மக்கள் கூட்டங்களுக்கு உலகிலுள்ள அனைத்து தேவாலயங்களும் போதாதவையாக இருக்கும். திவ்விய பலிபூசையின் அதிசயங்கள். இயேசுவுக்கே புகழ் !  அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 ஒருவனுக்கு வலிமைமிக்க எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால் அவனால் நிம்மதியாய் உண்ணவோ,உறங்கவோ முடியாது;அதேப்போல பாவத்தால் கடவுளையே தன் எதிரியாக்கிக் கொண்டிருப்பவன் சமாதானத்தில் இளைப்பாற முடியுமா?பரிதாபத்திற்க்குரியப் பாவிகள் தங்கள் பாவங்களால் இன்பம் காணலாம் என்று எண்ணுகிறார்கள்,ஆனால் கசப்பையும் மனவுறுத்தலையுமே அடைகிறார்கள். அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திவ்விய பலி பூசையின் அதிசயங்கள்

Image
படைப்பு முழுவதும்,வானங்களும், பூமியும்,சூரியனும்,நிலவும், நட்சத்திரங்களும்,மலைகளும்,பெருங்கடல்களும்,சகல மனிதர்களும்,சம்மனசுகளும் கடவுளோடு ஒப்பிடும்போது ஒன்றுமில்லாமையாக இருப்பது போலவே ,எந்த நற்செயல்களும் அவை எவ்வளவு பரிசுத்தமானவையாக இருந்தாலும் ஒரே ஒரு பூசைக்கு அவை நிகரானவை அல்ல.பூசை என்பது கடவுளேயன்றி வேறெதுவுமில்லை. திவ்விய பலிபூசையின் அதிசயங்கள். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 நாம் ஜெபிக்கும் போது நாம் கேட்ட  தேவ வரத்தை ஆண்டவர் கொடுக்காவிட்டாலும் அதைவிட அதிகப்பலனுள்ள தேவக்கொடையை நமக்கு அருள்வார்.சர்வேசுரன் ஒன்று நாம் கேட்பதை தருவார் அல்லது நமக்கு அதிக நன்மை பயக்கக் கூடியதை அருள்வார். அர்ச.பெர்னார்டு. இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கிறீஸ்தவர்களே, பொய்த் தேவர்களை நாங்கள் ஆராதிப்பதாக எங்களைக் குற்றஞ்சாட்டுகிறீர்கள், ஆனால் குறைந்த பட்சம் அவர்கள் தெய்வங்கள் என்றாவது நாங்கள் நம்புகிறோம், அவர்களுக்கு சங்கை செய்கிறோம்; ஆனால் நீங்களோ , மெய்யங்கடவுள் என்று நீங்களே அழைக்கிற அவரை நிந்தித்துத் தள்ளுகிறீர்களே.. பூரண இரக்கமும், நன்மைத்தனமும் உள்ளவராகிய சர்வேசுரன் கிறிஸ்தவர்களின் பலிபீடங்களின் மீது வருகிறார் என்பதை வெது வெதுப்பும் அசட்டைத்தனமும் உள்ளவர்களாகிய கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பதில்லையா என்று தம் காலத்தைச் சேர்ந்த அஞ்ஞானிகளும், புறஜாதியாரும் அவர்களிடம் கேட்டதாக  அர்ச். அகுஸ்தீனார் கூறியது. திவ்விய பலிபைசையின் மகிமைகள். இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ''கிறீஸ்துநாதர் யாருடைய கரங்களில் மீண்டும் ஒருமுறை மனிதனாக ஆகிறாரோ, அந்த குருவானவரின் உத்தம் மகத்துவம் எவ்வளவு பக்திக் குரியது!'' அர்ச். அகுஸ்தீனார். பூசை சேசுக்கிறிஸ்துநாதரின் பிறப்பாக இருக்கிறது. பூசை நிறைவேற்றப்படும் ஒவ்வொரு முறையும், தாம் பெத்லகேமில் பிறந்தது போல், அவர் மெய்யாகவே திவ்விய பலிபீடத்தின்மீது பிறக்கிறார்.* திவ்ய பலி பூசையின் அதிசயங்கள். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ''சர்வேசுரன் முதல் முறையாக தேவ கன்னிகையின் மாசற்ற திருவுதரத்தில் மனிதனான போது தாம் செய்தவாறே, பீடத்தின் மீது தாம் இறங்கி வரும் போதும் செய்கிறார். அவருடைய பலிபீடப் பிறப்பு, மகா பரிசுத்த கன்னித்தாயாரிடம் அவருடைய அதிசயமான கன்னிமைப் பிறப்பிற்கு எந்த விதத்திலும் தாழ்ந்ததல்ல!'' அர்ச். பொன வெந்தூர். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பிரபல மனிதனுடைய நண்பர்களுடன் பேசும் ஒருவன் அந்த மனிதனைப் பற்றி குறைச்சலான காரியங்களை பேசுவானா?நிச்சயம் பேசமாட்டான்.அதேபோல் நீங்கள் கடவுளுடைய நண்பர்கள் என்று வெளியில்  தெரிந்தால் யாரும் உங்கள் முன்பாக கடவுளைப் பற்றிக் குறைப்பேசமாட்டார்கள்.உன் நிமித்தம் கடவுளுக்கு அவமரியாதை ஏற்படாது. அர்ச்.அவிலா தெரசம்மாள். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
அப்பம் எப்படி சேசுக் கிறீஸ்துநாதருடைய திருச் சரீரமாக மாற்றப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள யாராவது விரும்பினால், நான் அவனுக்கு பதில் சொல்வேன். திவ்விய இஸ்பிரீத்து சாந்து வானவர் மகா பரிசுத்த கன்னிகைக்குத் தாம் செய்தது போலவே குருவானவரின் மீதும் நிழலிட்டு, அவரில் செயல்படுகிறார்! அர்ச். தமாஸீன் அருளப்பர். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தாழ்ச்சி -Humility

Image
 தாழ்ச்சியுள்ள ஆத்துமம் எப்போதும் தன் சொந்த நற்செயல்களைத் தானே புகழ்ந்து கொண்டு அதன் மூலம் தன் புண்ணியங்களை ஒன்றுமற்றதாக ஆக்குவதை தவிர்க்கிறது. ஆயர் புல்டன் சீன். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 எங்கள் மன்றாட்டு உம்மிடம் வராதபடி.உம்மை மேகத்தால் மறைத்துக்கொண்டீர். புலம்பல் 3-44 ஆத்துமத்திற்கு பயனளிக்காத ஆயிரக்கணக்கான அலுவல்களில் ஈடுப்பட்டிருக்கிற ஒருவன் அவனுடைய செபங்களுக்கு முன்னால் ஒரு மேகத்தை நிறுத்திவைக்கின்றான்.அது அவனுடைய செபங்கள் தேவவரப்பிரசாதஙக்ளுடைய பத்திராசனத்திற்குள் நுழைவதை தடுக்கிறது. அர்ச். அல்போன்ஸ் லிகோரியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 அன்பும்,தெய்வபயமும் ஒன்றையொன்று நிறைவு செய்யுமே தவிர வேறுப்படுத்தாது நேர்மையான தெய்வ பயத்துடன் இருங்கள்.அது தீமைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும். அர்ச்.அவிலா தெரசம்மாள் இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்