Posts

Showing posts from October, 2022

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  சகோதரர் சகோதரிகளே  நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்.கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! பிலிப்பியர் 2(2-5). சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள

Image
  மகனே,உன் தந்தையின் முதுமையில் அவனை ஆதரி.அவன் வாழ்நாளில் அவனை மனம் நோகச்செய்யாதே.அவன் அறிவு குறைந்ததாயின் மன்னித்துக்கொள்.உன் விவேகத்தை முன்னிட்டு அவனை நிந்தியாதே.ஏனென்றால் தந்தைக்குக் காண்பிக்கப்படும் இரக்கம் ஒருபோதும் மறக்கப்பட மாட்டாது. சீராக் ஆகமம் 3(14-16) சேசுவுக்கே புகழ்!  தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  எந்த மனிதனும் தன்னுடைய தீய வாழ்வில் அமைதி காணமுடியாது. எசேக்கியேல் 7-13 சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  தீய சொல் எதுவும் உங்கள் வாயினின்று வராதிருக்கட்டும். கேட்போருக்கு அருட்பயன் விளையுமாறு தேவைக்கு ஏற்றபடி ஞான வளர்ச்சி தரக்கூடிய நல்ல வார்த்தைகளை சொல்லுங்கள். எபேசியர் 4(29-30) சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  உணரும் உள்ளம் படைத்தவர்களே, செவிசாயுங்கள்; கொடுமை செய்தல் என்பதே கடவுளிடம் கிடையாது. தீமை என்பதே எல்லாம் வல்லவரிடம் இருக்க முடியாது. ஏனெனில் ஒருவன் செயலுக்கேற்பவே அவர் பலனளிக்கிறார், அவன் நெறிகளுக்குத் தக்கபடியே அவனுக்கு எதுவும் நேருகிறது. கொடுமை எதுவும் கடவுள் செய்யமாட்டார், இது உண்மை; எல்லாம் வல்லவர் நியாயத்தை மீறி நடக்கமாட்டார்.  யோபு 34(10-12) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  சிங்கம் இரைக்காக எப்போதும் பதுங்கியிருக்கின்றது‌ அதுபோல,பாவங்களும் அக்கிரமங்களைச் செய்பவர்களுக்காகக் காத்திருக்கின்றன. சீராக் 27-11 சேசுவுக்கே புகழ்!  தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  இந்நாட்களில் பசாசை நம்புபவர்கள் வெகு சிலரே, இது பசாசுக்கு மிகவும் சாதகமானது. முத்.பேராயர் புல்டன் ஷீன். Very few people believe in the devil these days, which suits the devil very well. Bishop Fulton Sheen. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  குறைக்கவும் கூட்டவும் முடியாத கடவுளுடைய மகத்துவங்களை கண்டுபிடிப்பவர் ஒருவரும் இல்லை.மனிதன் எல்லாவற்றையும் தான் கண்டுபிடித்துவிட்டதாக நினைக்கும் போது தான், கண்டுபிடிக்கத் தொடங்குகிறான்.அவன் தீர்மானம் செய்த பின் சந்தேகத்தினால் வருந்துவான். சீராக்ஆகமம் 18(5-6) சேசுவுக்கே புகழ்!  தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திவ்விய நற்கருணை ஆண்டவருக்கு உரிய பக்தி மரியாதையை செயலில் வெளிப்படுத்தும் விசுவாசிகள்

  திவ்விய நற்கருணை ஆண்டவரை பாசத்துடன் இறைமக்களுக்கு ஊட்டிவிட்டு, எந்த அவமரியாதையும் ஆண்டவருக்கு நேர்ந்துவிடாமல் தடுப்பவர்கள், திவ்விய நற்கருணை பாதுக்காவலர்கள் நம் பரிசுத்த குருக்கள். நித்திய ஸ்துதிக்குரிய பாடும்போதும்,நடுப்பூசையில் எழுந்தேற்றத்தின் போதுமட்டும் முழங்காலில் நிற்காமல்,தன்னை படைத்தவர் தன்னிடமே திருஉடலாக, ஆன்ம உணவாக வரும்போதும் முழங்காலில் நின்று நாவில் தன் ஆண்டவரைப் பெற்றுக்கொள்ளும், திவ்விய நற்கருணை மீது விசுவாசமுள்ள இறைமக்கள்.(காண்க video 👆).  "மனிதனின் மகத்துவமும் பிரபுத்துவமும், அவனுடைய படைப்பாளரின் மீதான அவனது அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடாக, கடவுளுக்கு முன்பாக மண்டியிடுவதில் அடங்கியுள்ளது. இயேசுவே தந்தையின் முன்னிலையில் முழங்காலில் பிரார்த்தனை செய்தார்."  ராபர்ட் கார்டினல் சாரா. மண்ணுல மோட்சம் திவ்விய நற்கருணை. ஒரு நாள் நமக்கு மோட்சம் தரப்பபோகிறவரை உட்கொள்ளும்போது உட்சபட்ச தாழச்சியும்,பக்தியும் மரியாதையும் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு கத்தோலிக்கர்களின் கடமை. திவ்விய நற்கருணை ஆண்டவரை அவமரியாதை செய்ய பசாசு😈 வைக்கும் கண்ணிகளையும் கண்டறிந்து விலகுவதும் ஒவ்...

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு, வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவர்களாய் இராமல் கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள். மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள். அடிமையாயினும் உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுவர். இது உங்களுக்குத் தெரியும் அன்றோ! எபேசியர் 6(6-9). சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  இன்பம் துய்க்கும் போது நீ பட்டிருந்த துன்பத்தை மறவாதே.வறுமையால் வருந்தும் போது,நீ சுவைத்த இன்பத்தை மறவாதே.ஏனென்றால்,காலை முதல் மாலை வரையிலும் காலம் மாறிவரும்;இவைகளெல்லாம் கடவுள் முன்னிலையில் நடத்தப்படுகின்றன. சீராக்ஆகமம் 19(25-27) சேசுவுக்கே புகழ்!   தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது. எபேசியர்5(8-9). சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  நன்மைசெய்வதில் மனம் தளாரதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால்! தக்க காலத்தில் அறுவடை செய்வோம்.ஆகையால் இன்னும் காலம் இருக்கும் போதே எல்லாருக்கும் சிறப்பாக விசுவாசத்தால் நம் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு நன்மை செய்வோமாக. கலாத்தியர் 6-(9-10) சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவர் நேர்மையாளருக்கு துணை செய்யக் காத்திருக்கின்றார்; மாசற்றோருக்குக் கேடயமாய் இருக்கின்றார்.நேர்மையாளரின் பாதைகளை அவர் பாதுகாக்கின்றார்; தம் அடியாரின் வழிகளைக் காவல் செய்கின்றார்.எனவே, நீ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் நலமார்ந்த நெறிகள் அனைத்தையும் தெரிந்துகொள்வாய். நீதிமொழிகள்2(7-9) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தவறுகளை  எதிர்த்துப் போராடுங்கள், அதேசமயம் நல்ல நகைச்சுவையோடும் , பொறுமையோடும் இரக்கததோடும் அன்புடனும் போராடுங்கள். கடுமையான தன்மையோடு தவறுகளை எதிர்ப்பதால் உங்கள் சொந்த ஆன்மாவே சேதமடைகின்றன மேலும் போராடுவதற்க்கான நற்காரணத்தையும் கெடுத்துவிடுகின்றன.       அர்ச் ஜான் கான்டியஸ் Fight all error, but do it with good humor, patience, kindness, and love. Harshness will damage your own soul and spoil the best cause."  - St. John Cantius. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவரில் நம்பிக்கை வைக்கிறவர்கள் உண்மையை கண்டுபிடிப்பார்கள். விசுவாசம் கொண்டவர்கள் அவரோடு அன்பில் நிலைத்திருப்பார்கள், ஏனெனில் அருளும் இரக்கமும் அவரால் தேரந்துக்கொள்ளபட்டவர்களுக்கே உரியவை.இறைபற்றில்லாதவர்கள் தங்கள் எண்ணத்திற்கு ஏற்றபடி தண்டிக்கபப்டுவார்கள். ஞான ஆகமம் 3(9-10). சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உண்மையான நண்பன் தன் நண்பனுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறான். தனது நண்பனுடை ஆன்மா இரட்சிப்பைப் பற்றி கவலைப்படுகிறான்.  தவறான வழிகளில் இருந்து மீட்டு உண்மையான பாதையில் பயணிக்க வைத்து  விலைமதிப்பற்ற நட்பைத்தருகிறான் .மிகசிறந்த நண்பர்கள், கடவுளின் புனிதர்கள்.  – அர்ச்.நிகோலாய் வெலிமிரோவிக் A true friend prays to God for his friend. A true friend cares about the salvation of a friend’s soul. To draw a friend back from false ways and set him on the true path – that is precious friendship. The Saints of God are man’s greatest friends. – St. Nikolai Velimirovic. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ மாதாவின் செய்திகள்

Image
  பல வருடங்கள் விவாதத்தால் சாதிப்பதைவிட ஒரு நாளின் மிக உருக்கமான செபத்தால் அதிகமாக சாதிக்க முடியும்.விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் கவனத்தோடும் விடாமுயற்சியோடும் செபியுங்கள். திருவழிபாட்டின் மணி செபங்களை செபமாலையை நன்றாக செபியுங்கள். தேவாமாதவின் செய்தி 04/10/1984. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன் மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!⒫  எபேசியர்3(17-18). சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இருள் சூழ்ந்த நேரத்தில், ஜெபமாலையைப் செபிப்பது, தேவ மாதாவின்  கரங்களைப் பிடிப்பது போன்றது. ஒவ்வொரு நாளும் ஜெபமாலை ஜெபிக்கவும். தேவமாதாவின் கரங்களைப்பிடித்துக் கொள்ளவும்,அவர்கள் உங்களை பார்த்துக்கொள்வார்கள். அர்ச.பியோ. In times of darkness, holding the Rosary is like holding your Blessed Mother’s hand. Pray the Rosary every day. Abandon yourself in the hands of Mary. She will take care of you.”  St.Pio சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொளளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  மகனே,தீ நெறியில் புகுந்து தீமைகளை விதைக்காதே;ஏனென்றால் விதைத்ததைவிட ஏழு மடங்கு தீமை அறுப்பாய். சீராக் ஆகமம் 7-3 சேசுவுக்கே புகழ்!  தேவமாதவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பேய்கள் ஆன்மாவைப் பின்தொடர்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளன. மாமரி என்ற திருநாமத்தால் தங்கள் இரையை கைவிட்டு ஓடுகின்றன. அர்ச்.பிரிஜித்தம்மாள் The demons are very anxious in their pursuit of souls,yet, they quickly,abandon their prey merely at the name of mary. St.Bridget. சேசவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
ஜெபமாலை விண்ணையும் மண்ணையும் இணைக்கும் ஒரு நீண்ட சங்கிலி. அதன் ஒரு முனை நம் கைகளிலும், மறுமுனை தேவாமாதவின் கரங்களிலும் உள்ளது. ஜெபமாலை எல்லாம் வல்ல இறைவனின் பாதங்களில் தூபம் போல் எழுகிறது. தேவமாதா, உடனடியாக பதிலளிக்கிறார், மனித இதயங்களுக்கு புது வாழ்வைப் பெற்றுத்தருகிறார்.  -அர்ச்.குழந்தை தெரசம்மாள். The Rosary is a long chain that links heaven and earth. One end of it is in our hands and the other end is in the hands of the Holy Virgin…The Rosary prayer rises like incense to the feet of the Almighty. Mary responds at once like a beneficial dew, bringing new life to human hearts.” - St. Therese of Lisieux. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  தந்தை தன் அருமை மகனை கண்டிப்பதுபோல், ஆண்டவர் தாம் யாரிடம் அன்புகொண்டிருக்கின்றாரோ அவர்களைக் கண்டிக்கின்றார். நீதிமொழிகள் 3:12. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள

Image
  இயேசு அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.⒫ அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’. பின்பு, ""என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு"" எனச் சொல்வேன்’ என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.” லூக்கா 12(15-21). சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்க...

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  உன் செயலை சாந்த குணத்தோடு செய்வாயாகில் மனிதரால் அதிக மேன்மையாய் நேசிக்கப்படுவாய்.எவ்வளவுக்கு நீ பெரியவனாய் இருக்கிறாயோ அவ்வளவுக்கு அனைத்திலும் உன்னைத் தாழ்த்து.அப்போது கடவுள் முன் இரக்கத்தைக் காண்பாய்.ஏனென்றால் கடவுள் ஒருவரே மிக வல்லமையுள்ளவர்.அவர் தாழ்ச்சியுள்ளவர்களால் மாட்சிப்படுத்தப்படுகிறார். சீராக் 3(19-21) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  என் ஆண்டவரே ! உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். திருப்பாடல்கள் 17-8. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பெருமை என்பது செல்வம் போல் மாறுவேடமிட்ட ஆன்மாவின் வறுமை, உண்மையான இருள்,  கற்பனையான ஒளியாக இருக்கும்.  -அர்ச் ஜான் கிளைமாகஸ். Pride is the utter poverty of soul disguised as riches, imaginary light where in fact there is darkness.  - St John Climacus. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக்கா 12(4-5) சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஜெபமாலைப் புதுமைகள் :

Image
  இரண்டு மேதைகளின் அனுபவங்கள் முதல் புதுமை (ஒரு விஞ்ஞானியின் அனுபவம்) : 1890ஆம் ஆண்டு பாரிஸ் நகருக்கு சென்று கொண்டிருந்த இரயிலில் ஒரு முதியவரோடு ஒரு கல்லூரி மாணவன் பயணம் செய்தான். அவன் என்ன கூறினான் கொஞ்சம் அறிந்து கொள்வோமா? எதிரில் அமர்ந்திருந்த முதியவர் கையில் செபமாலை வைத்து செபித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவன்  “மன்னியுங்கள் ஐயா! கிழவர்களுக்கே உரிய பத்தாம் பசலித்தன பக்தி முயற்சியை தாங்கள் இன்னுமா நம்புகிறீர்கள்?” என்று கேட்டான் அந்த இளைஞன்.. முதியவர் “நிச்சயமாக நம்புகிறேன். நீ அதை நம்பவில்லையா? இளைஞன் “ஐயா உங்கள் முகவரியைக் கொடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு சில புத்தகங்களை நான் உங்களுக்கு அனுப்பிவைக்கலாம்” என்றான் அதிகம் படித்த கல்லூரி மாணவன்.. முதியவர் தன் முகவரி அட்டையை நீட்டினார். அதில் லூயி பாஸ்டர், விஞ்ஞான ஆய்வகம், பாரிஸ் என்று எமுதப்பட்டிருந்தது. இளைஞனின் முகம் வெளிறியது. அடுத்த ஸ்டேஷனிலேயே இளைஞன் இறங்கி வண்டி மாறினான். ஆனால் அந்த முதியவரோ –நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர். Bio-Therapeutics என்ற சிகிச்சை முறையை உண்டாக்கியவர் என்றெல்லாம் ...

இறைவனின் இறைவார்தைகள்

Image
  மகனே காலம் அறிந்து தீமையை விலக்கு.உன் உயிரை இழப்பதானாலும் உண்மையை சொல்ல நாணாதே பாவத்திற்க்குக் கூட்டிப் போகும் வழி ஒன்று;மகிமைக்கும் கடவுள் அருளுக்கும் அழைத்து போகும் வழி வேறொன்று.உன் இதய நன்மைக்கு விரோதமான யாதொன்றையும் ஏற்றுக்கொள்ளாதே.உன் ஆன்மாவிற்கு இடையூறான பொய்யைச் சொல்லாதே.  சீராக் ஆகமம் 4(23-26) சேசுவுக்கே புகழ்!  தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  தெய்வ பயமுள்ளவர்கள் கடவுளுக்கு விருப்பமானவைகளைத் தேடுவார்கள்.அவரை நேசிப்பவர்கள் அவர் கட்டளையால் நிறைவு அடைவார்கள்.தெய்வபயமுள்ளவரகள் தங்கள் இதயங்களை ஆயத்தப்படுத்துவார்கள்; கடவுள் திருமுன் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்துவார்கள். சீராக் ஆகமம் 3(19-21) சேசுவுக்கே புகழ்!   தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  பெய்யும் மழைநீரை உள்ளிழுத்துக் குடியானவர்களுக்கு பயன்தரும் முறையில் பயிரை முளைப்பிக்கும் நிலம் கடவுளுடைய ஆசி பெறும்.மாறாக முட்செடிகளையும் முட்புதர்களையும் முளைப்பித்தால் அந்நிலம் பயனற்றது.அது பெறுவது சாபமே.தீக்கிரையாவது அதன் முடிவு. எபிரேயர் 6-8 சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  மக்களே,எல்லா மனிதரையும் பாருங்கள்;ஆண்டவரை நம்பின எவனும் கலங்கின தில்லையென்று கணடறியுங்கள்.அவருடைய கட்டளைகளில் நிலைநின்றவன் எவன் கைவிடப்பட்டான்?அவரை மன்றாடினவன் எவன் புறக்கணிக்கப்பட்டான்? சீராக் ஆகமம் 2(11-13) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  கலக்க நேரத்தில் ஆத்திரப்பட்டு யாதொன்றும் செய்யாதே.ஆண்டவருடைய இரக்கத்தின் காலம் வரைக்கும் காத்திரு.அவரோடு ஒன்றித்துக் கடைசியில் உன் வாழ்க்கை பலன் கொடுக்கும்படி பொறுமையாய் இரு.பொன்னும் வெள்ளியும் நெருப்பினால் சுத்தமானது போல,மனிதரும் தாழ்ச்சி என்னும் உலையில் தகுதியானவர்கள் ஆகிறார்கள். சீராக் ஆகமம் 2(3-5) சேசுவுக்கே புகழ்!   தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இறைவனின் இறைவார்தைகள்

Image
  நாம் படுகின்ற வேதனைகள் நாம் செய்துள்ள பாவங்களை விட குறைவு என்றும், கடவுள் தம் ஊழியர்களைத் கண்டிக்கிறது போல் நம்மைத்  தண்டிப்பது நம்மை அழிப்பதற்கு அன்று நம்மை திருத்துவதற்கே என்று நம்புவோம். யூதித் ஆகமம் 8-27. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Abortion is a Murder

  Abortion is not our rights severe sin. I want the general public to know that the doctors know that this is a person, this is a baby. That this is not some kind of blob of tissue . . ."  -Dr. Anthony Levatino, former abortionist. கருக்கலைப்பு நமது உரிமை அல்ல.கொடுமையான பாவம். இது ஒரு நபர், இது ஒரு குழந்தை என்று மருத்துவர்களுக்குத் தெரியும் என்பதை பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது ஒரு வகையான திசுக்கள் அல்ல. . ."  -டாக்டர்.  அந்தோனி லெவாடினோ, முன்னாள் கருக்கலைப்பு நிபுணர்

இறைவனின் இறைவார்தைகள்

Image
  தெய்வ பயம் மகிமையும் மகத்துவமும் களிப்பும் மகிழ்ச்சியின் முடியுமாய் இருக்கின்றது.தெய்வ பயம் இதயத்தை மகிழ்விக்கும்.அகமகிழ்ச்சியையும் அக்களிப்பையும் நீடிய ஆயுளையும் கொடுக்கும்.ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் தன் இறுதி காலத்திலும் பேறுபெற்றவன் ஆவான்.மரண நாளிலும் ஆசீர்வதிக்கப்படுவான். சீராக்ஆகமம் 1(11-13) சேசுவுக்கே புகழ்!  தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திவ்விய நற்கருணை ஆண்டவருக்கு உரிய மரியாதை செய்யும் விசுவாசிகள்

  திவ்விய நற்கருணை ஆண்டவரை பாசத்துடன் இறைமக்களுக்கு ஊட்டிவிட்டு, எந்த அவமரியாதையும் ஆண்டவருக்கு நேர்ந்துவிடாமல் தடுப்பவர்கள், திவ்விய நற்கருணை பாதுக்காவலர்கள் நம் பரிசுத்த குருக்கள் (காண்க video 👆). நித்திய ஸ்துதிக்குரிய பாடும்போதும்,நடுப்பூசையில் எழுந்தேற்றத்தின் போதுமட்டும் முழங்காலில் நிற்காமல்,தன்னை படைத்தவர் தன்னிடமே திருஉடலாக, ஆன்ம உணவாக வரும்போதும் முழங்காலில் நின்று நாவில் தன் ஆண்டவரைப் பெற்றுக்கொள்ளும், திவ்விய நற்கருணை மீது விசுவாசமுள்ள இறைமக்கள்(காண்க video 👆).  "மனிதனின் மகத்துவமும் பிரபுத்துவமும், அவனுடைய படைப்பாளரின் மீதான அவனது அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடாக, கடவுளுக்கு முன்பாக மண்டியிடுவதில் அடங்கியுள்ளது. இயேசுவே தந்தையின் முன்னிலையில் முழங்காலில் பிரார்த்தனை செய்தார்."  ராபர்ட் கார்டினல் சாரா. மண்ணுல மோட்சம் திவ்விய நற்கருணை. ஒரு நாள் நமக்கு மோட்சம் தரப்பபோகிறவரை உட்கொள்ளும்போது உட்சபட்ச தாழச்சியும்,பக்தியும் மரியாதையும் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு கத்தோலிக்கர்களின் கடமை. திவ்விய நற்கருணை ஆண்டவரை அவமரியாதை செய்ய பசாசு😈 வைக்கும் கண்ணிகளையும் கண்டறிந்த...

செபமாலை வணக்கம் மாதம் - 7

Image
அக்டோபர் 7  கர்த்தர் கற்பித்த ஜெபம்.  பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே :  உமது சர்வ வல்லமையால் பரலோக பூலோகத்தை நிரப்புகிறவரே, எங்கும் நிறைந்திருக்கிறவரே, உமது மகிமையினால் அர்சிஷ்டவர்களிடத்திலும், உமது நீதியினால் நரகவாசிகளிடத்திலும் , உம்முடைய வரப்பிரசாதத்தினால் நல்லவர்களிடமும் , உமது சகிப்புத் தன்மையால் பாவிகளிடத்திலும் இருக்கிறீர் . நாங்கள் உம்மிடம் தங்கி இருந்து உம்மையே நினைக்கவும் , உம்முடைய உண்மையான மக்கள் வாழ வேண்டிய முறையில் நாங்கள் வாழவும் , நாங்கள் உம்மையே நோக்கி நாடவும் ,எங்கள் சத்துவத்தை எல்லாம் கூட்டி உம்மையே நாங்கள் தேடவும் , எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும் . நீர் மனுக்குலத்தின் தந்தை . ஏனெனில் எல்லாவற்றையும் உருவாக்கிக் காப்பாற்றுகிறீர் . விசேஷமாய் எங்களை இரட்சித்தீர். பாவிகளுக்கு நீர் இரக்கமுள்ள தந்தை . நீதிமான்களின் நண்பரான தந்தை . மோட்சவாசிகளுக்கு மகிமையுள்ள தகப்பன்.  உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக :  " கர்த்தரின் நாமம் பரிசுத்தமும் பயங்கரமானதுமென்றார் தாவீது அரசர் . " பக்தி சுவாலகர் , ஞானாதிக்கர்களுடைய வாழ்த்துக்களினால் மோட்சம் முழங்குகிற...

இறைவனின் இறைவார்தைகள்

Image
  இம்மக்கள் உதட்டினால்  என்னைப் போற்றுகின்றனர்.  இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு  வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக்  கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர்.  இவர்கள் என்னை வழிபடுவது வீண்’ என்கிறார்.மத்தேயு 15(8-9). சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  " உங்கள் முன் இல்லாத ஒருவரைப்பற்றி பேசும்போது அவர் உங்கள் முன் இருந்தால் எப்படிப் பேசுவீர்களோ அப்படியே பேச வேண்டும் " - புனித பாசி மரிய மதலேனாள்  சேசுவுக்கே புகழ்!  தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
எங்கே தர்மமும் ஞானமும் இருக்கிறதோ, அங்கே பயமும் அறியாமையும் இருப்பதில்லை. அர்ச் பிரான்சிஸ் அசிசி. Where there is charity and wisdom, there is neither fear nor ignorance. "  - Saint Francis of Assisi. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: “தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். லூக்கா11-17. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபமாலை வணக்கம் மாதாம் - 6

Image
  ஜெபமாலை வணக்கம் மாதம் அக்டோபர் 6 கர்த்தர் கற்பித்த ஜெபம். நமதாண்டவர் கற்றுக்கொடுத்த ஜெபம் எவ்வளவு மேலானது ! அதை ஆக்கியவர் மனிதரல்லர் ; சம்மனசுமல்லர்; மனிதர்களுக்கும் சம்மனசுக்களுக்கும் அரசர், நமதாண்டவராகிய சேசுநாதர் ! அச்செபத்தின் அமைப்பில் உள்ள ஒழுங்கு முறையும் , உருக்கமான வன்மையும் , தெளிவும் நம் தேவ ஆசிரியரின் ஞானத்தை விளக்குகிறது . சிறு செபமானாலும் அநேக காரியங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது . படிக்காத பாமரருக்கும் அது விளங்கும் . கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களும் விசுவாச இரகசியங்களில் புதுப்புது எண்ணங்களை அறிய வருவார்கள். இம்மந்திரத்தில் சர்வேசுரனுக்கு நாம் செலுத்த வேண்டிய எல்லாக் கடமைகளும் , எல்லா புண்ணியங்களும் நமது எல்லா ஆத்தும சரீர தேவைகளுக்கு மன்றாட்டும் பொதிந்து கிடக்கின்றன . இச்செபம் புதிய ஏற்பாட்டின் சுருக்கம் என்றார் தெர்த்துல்லியன். எல்லாப் புனிதர்களுடைய சகல ஆசைகளுக்கும் மேற்பட்டது இம்மந்திரத்தின் வேண்டுகோள் என்று ' கிறிஸ்து நாதர் அனுசார'த்தின் ஆசிரியர் குறிப்பிடுகிறார் . சங்கீதங்களிலும் உன்னத கானத்திலும் உள்ள இரசமானவைகளின் சுருக்கம் என்பதும் அதில் நமக்குத் தேவ...

இறைவனின் இறைவார்தைகள்

Image
  அன்பே கடவுள்; அன்பில் நிலைத்திருப்பவன் கடவுளுக்குள் நிலைத்திருக்கிறான். கடவுளும் அவனுள் நிலைத்திருக்கிறார். 1 அருளப்பர் 4:16 சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  துன்பமே உலகில் மிகப் பெரிய பொக்கிஷம்; அது ஆன்மாவை பரிசுத்தப்படுத்துகிறது. உண்மையான நண்பன் யார் என்பதையும் அறிந்து கொள்ளமுடிகின்றது. ஆர்ச் .ஃபாஸ்டினம்மாள் Suffering is the greatest treasure on earth; it purifies the soul. In suffering, we learn who our true friend is.’ St. Faustina Kowalska. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  ஜெபமாலைக்கு விசுவாசமாக இருக்கும் எந்த ஒரு சாதாரண மனமும் இதுவரை கவலைகள் , அச்சங்களால் வெல்லப்பட்டதில்லை.   பேராயர் புல்டன் ஷீன். No normal mind yet has ever been overcome by worries or fears who was faithful to the Rosary.  Bishop Fulton sheen. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபமாலை வணக்கம் மாதம் -5

Image
  ஜெபமாலை வணக்கம் மாதம்  அக்டோபர் 5  விசுவாச மந்திரம்.  பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடிய பின் செபமாலையின் பாடுபட்ட சுரூபத்தைப் பிடித்துக் கொண்டு விசுவாச மந்திரத்தைச் சொல்லுகிறோம் . புண்ணிய ஜீவியத்தின் தொடக்கம் , ஞான சீவியத்தின் ஆரம்பம் , விசுவாசம், திருச்சபையில் ஞானஸ்நானத்தினால் மக்களாகும்போது, முதன் முதல் நமக்கு அளிக்கப்படும் கொடை விசுவாசம் .  விசுவாசம் இன்றி நாம் சர்வேசுரனுக்கு பிரியப்பட முடியாது. விசுவாசம் பூர்த்தியாகும்படி வேதம் சொல்லுகிறதென்ன ? நீதிக்காக உள்ளத்தில் விசுவசிக்கிறோம், ஈடேற்றத்திற்காக வாயினால் அவ்விசுவாசத்தை அறிக்கை செய்கிறோம் . வாய்ச் செபத்தை அவமதிக்கும் போலி ஞானிகள் இதைக் கவனிப்பார்களா ?  இவ்விதம் விசுவாசம் எல்லாவற்றிக்கும் அடிப்படையாக இருப்பதினால் செபமாலையைத் தொடங்கும்போதே விசுவாச மந்திரத்தைச் சொல்வது எவ்வளவு பொருத்தம் ! சர்வேசுரன் அருகில் வருகிறவன் சர்வேசுரன் இருக்கிறார் என்றும் , அவரைத் தேடுகிறவர்களுக்கு சன்மானம் அளிக்கிறார் என்றும் விசுவசிப்பது அவசியம் என்கிறது வேதம் .  ஆதலினால் பரிசுத்த தமத்திருத்துவக் கடவுள் இருக்கிறார் என்ற...

இறைவனின் இறைவார்தைகள்

Image
  இனி நாம் குழந்தைகளைப்போல் இருக்கக் கூடாது. மனிதருடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் தவறுக்கு வழி நடத்தும் ஏமாற்று வழிகளையும் நம்பி, அவர்களுடைய போதனைகள் என்னும் காற்றால் அடித்துச்செல்லப்பட்டு அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படக்கூடாது. * எபேசியர் 4:14. * சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

செபமாலை வணக்கம் மாதம் - 4

Image
  ஜெபமாலை வணக்கம் மாதம் அக்டோபர் 4 செபமாலை சொல்லும் விதம். பரிசுத்த ஆவியின் உதவியை நாடியபின் செபமாலை சொல்லத் துவங்குவது நல்லது. முதன் முதல் விசுவாச மந்திரம் ; கிறிஸ்தவ வாழ்க்கைக்கு விசுவாசந்தானே அஸ்திவாரம் ; கர்த்தர் கற்பித்த ஜெபம் , மூன்று முறை அருள் நிறைந்த மரியாயே என்னும் ஜெபம் , பின் பத்து பத்தாய் ஐந்து முறை அருள் நிறைந்த மரியாயே என்னும் ஜெபம் , ஒவ்வொரு பத்துக்குப் பின் 'பிதாவுக்கும் சுதனுக்கும் ' என்ற திரித்துவ தோத்திரம் சொல்லுகிறோம் . ஒவ்வொரு பத்துக்கு முன்னரும் ஒரு தேவ இரகசியத்தைச் சொல்லி அதைப் பற்றிச் சிறிது நேரம் , இரண்டொரு வினாடியாவது யோசிக்க வேண்டும். சில நாடுகளில் 53 மணிக்குப் பின் கிருபை தாயாபத்து செபத்தை சொல்லுகிறார்கள்.  ஜெபமாலை தியானிப்பதற்கு மணிகள் உதவுகின்றன என்று பார்த்தோம். அதோடு அவை நம் கவனத்தையும் கவர்கின்றன . நாம் சுத்த அரூபிகளான சம்மனசுகள் அல்லோம் . நாம் ஆத்துமமும் சரீரமும் சேர்ந்தவர்கள், அவை இரண்டும் ஒத்துழைக்கின்றன . இரண்டொரு சிறு வெளிச் செயல்கள் புத்திக்கு வேகத்தைக் கொடுக்கின்றன . ஒரு பெரியவர் , பெரிய சிந்தனையாளர் , பெரிய அறிஞர் . அவரைப் போய்ப் பார்க...

இறைவனின் இறைவார்தைகள்

Image
  தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார். தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார். திருப்பாடல்கள் 145(18-20) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுள் நம்மை பல்வேறு துன்பங்களால் சோதிக்க அனுமதிப்பது, அவருடைய திட்டங்களுக்கு நாம் இணங்குவதற்காவும், அவரை நேசிப்பவர்களை வெளிப்படுத்துவதற்குமே. அர்ச்.எப்ராயிம். In accourdance with his plan, god allows us to be tested by variuos sorrows so that those who love him will be revealed. St.Ephraim. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.