Posts

Showing posts from November, 2022

இறைவனின் இறைவார்த்தைகள

Image
  மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!உயர் குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! திருப்பாடல்118(8-9) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களின் புதுமைகள்.

Image
   *ஏழைகள் தாங்கள் படுகிற துன்ப துயரங்களை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காக ஒப்புக்கொடுப்பது மிகச் சிறந்த புண்ணியம்*   1250 ஆம் ஆண்டில் புனித துறுதோன்  என்கிறவர் ஒரு மடத்தில் துறவியாக இருந்தார்.மிகுந்த புண்ணிய ஆத்துமாவான அவர், மரணம் அடைந்த பிறகு  அம்மடத்தின் அதிபர் ஒருநாள் தியானத்தில் இருக்கிறபோது அவருக்குத் தோன்றினார். இரவு நேரம் பார்த்த அக்காட்சியில்  துறவியின் ஆத்துமத்தைச் சுற்றி எரிகிற நெருப்புச் சுவாலையோடு அத்துறவி மடத்தின் அதிபரிடம், "நீர் என் பேரில் இரக்கம் வையும்” என்று கதறி மன்றாடினார். மடத்தின் அதிபர், அவர் படும் வேதனையைக் கண்டு மிகவும் இரக்கம் கொண்டவராய், "நீர் அனுபவிக்கிற வேதனை சீக்கிரம் முடியும்படிக்கு நானும், பலவகைப் புண்ணியங்களைச் செய்து உமக்கு உதவுவோம் என்று உறுதியளித்தார். அதற்கு அந்தத் துறவியோ அளவில்லாத தயையுடைய இறைவனின் சித்தப்படி என் வேதனை சீக்கிரமாய் முடிவதற்கு ஒரு பிச்சைக்காரப் பெண்ணின் உதவி எனக்குத் தேவைப்படுகிறது.   அவள் யாரெனில், இந்த நகருக்கு வெளியே ஒரு சின்னக் குடிசையில் இருக்கிறாள் என்று அவர் குறிப்பிட்ட பெண் வ...

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே எசாயா 65-8 சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  அன்புக்குரியவர்களே ! நீங்கள் பழி வாங்காதீர்கள் ,அதை இறைவனின் சினத்திற்கு விட்டுவிடுங்கள்.ஏனெனில் பழிவாங்குவது ஆண்டவரின் உரிமை.ஆண்டவரே பதிலுக்கு பதில் செய்வேன் என்கிறார்.நீயோ உன் பகைவன் பசியாக இருந்தால் ,அவன் பசியை ஆற்று.தாகமாய் இருந்தால் அவன் தாகத்தை தணி.தீமை உனை வெல்ல விடாதே.நன்மையால் தீமையை வெல்க. உரோமையர் 12(19-21) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தரிக்கும் ஆன்மாக்களின் புதுமைகள்

Image
   கீழ்ப்படிந்து செய்தபுண்ணியங்களால் உண்டான நற்பயன். இத்தாலி நாட்டில் புனித தோமினிக் சபை மடத்தில் எமிலி என்கிற கன்னியாஸ்திரீ மடத்தின் தாயாராய் இருந்தார்.  அவர் தனக்குக் கீழிருந்த கன்னியாஸ்திரீகளைப் பார்த்து அவர்கள் மரித்தபிறகு உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகாதபடி தங்களைக் காத்துக்கொள்ள தான் சொல்கிறபடி கேட்டு நடக்க வேண்டும் என்று அறிவுரை கூறியிருந்தார்.  அம்மடத்திலுள்ள சபை ஒழுங்குப்படி இரவு, பகல் மற்றும் உணவு உண்ணும் நேரம் தவிர, மற்ற நேரத்தில் தாகமாய் இருக்கிறவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டுமானால் மடத்துத் தாயாரின் அனுமதி பெற்றாக வேண்டும் என்றொரு உத்தரவு இருந்தது. அந்த உத்தரவின்படியே அம்மடத்திலுள்ள சில கன்னியாஸ்திரீகள் தங்களுக்குத் தாகம் ஏற்பட்டு தண்ணீர் குடிக்க வேண்டிய சமயத்தில், மடத்துத் தாயாரிடம் உத்தரவு கேட்கும்போது, மடத்துத் தாயாரோ, இயேசுநாதர் சிலுவையில் அறையப் பட்டிருந்தபோது அவர் துன்புற்று, அனுபவித்த தாகத்தின் பொருட்டு நீங்களும் தண்ணீர் குடிக்காமல்,உங்களுக்கு ஏற்பட்ட தாகத்தைப் பொறுமையோடு அடக்கி வந்தால்,அது ஒரு நல்ல புண்ணியச் செயல் என்று கூறி அவர்கள் தண்ணீர்குட...

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் என்னிடம் திரும்பி வந்து அமைதியுற்றால் விடுதலை பெறுவீர்கள்: அமைதியிலும் நம்பிக்கையிலுமே நீங்கள் வலிமை பெறுவீர்கள்; நீங்களோ ஏற்க மறுத்தீர்கள். எசாயா30-15. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  யாராவது பாவ வழியிலேயே இருப்பதாகத் தெரிந்தால்,எல்லாருக்கும் அச்சம் உண்டாகும்படி வெளிப்படையாய்க் கடிந்துக்கொள்ளும்.கடவுள் முன்னிலையிலும்,இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வானதூதர் முன்னிலையிலும் உம்மை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.ஒருதலை பட்சமாக எதுவும் செய்யாமல் நடுநிலமையோடு இவற்றைக் கடைப்பிடியும். 1தீமோத்தேயு 5(20-21) சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  கடவுளுக்கு அஞ்சி நடப்பவனை விட பெரியவன் எவனும் இல்லை. சீராக் 10-27 சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தரிக்கும் ஆன்மாக்களின் உதவிகள்

Image
  உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கு திருப்பலி, செப,தவ,தான தர்மம்,பரிகாரம் செய்து உதவி செய்பவர்களை, உற்றார் உறவினர்கள் கைவிட்டாலும் செப உதவிப்பெற்ற உத்தரிக்கும் ஆன்மாக்கள் கைவிடுவதில்லை. உத்தரிக்கும் ஸ்தலம் -16 : உத்தரிக்கும் ஸ்தல புதுமை..( நீண்ட புதுமையாக இருந்தாலும் சுவாரசியமாக இருக்கும் படியுங்கள்) பிரான்சு தேசத்தில் ஒரு ஏழை ஊழியக்காரி பெண் உத்தரிக்கிற ஆன்மாக்களைப் பற்றிய பிரசங்கம் கேட்டதிலிருந்து இவர்களைப் பற்றி நீங்காத நினைவுடனே இருந்தாள். அநித்திய கொடிய வாதைகளில் இவ்வான்மாக்கள் படும் அகோர துன்பத்தையும், உலகில் இவர்களது நண்பர்களால் எளிதில் மறக்கப்பட்டு, புறக்கணிக்கப்படுவதையும் கேள்வியுற்று பெரிதும் மன்ம் நொந்தாள். பிரசங்கம் செய்தவர் மற்ற காரியங்களைவிட உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுதலைபெறும் தருவாயில் இருக்கும் பல ஆன்மாக்கள் ஒரு பலி பூசை ஒப்புக்கொடுத்தால் உத்தரிப்பு கடன் முடிந்து விடுதலைபெறும் நிலையில் இருப்பதாகவும், ஆனால் அந்த ஒரு திருப்பலி ஒப்புக்கொடுக்க மறுக்கப்பட்டோ, நிறுத்தி வைக்கப்பட்டோ, புறக்கணிக்கப்பட்டோ இருப்பதால் பல வருடங்களாக அகோர நெருப்பில் இவ்வான்மாக்கள் துன்பப்படு...

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவர் மேல் நம்பிக்கை கொள்ளும் எவனும் அவர் குற்றமற்றவராய் இருப்பது போலத் தன்னையும் குற்றமற்றவனாய்க் காத்துக்கொள்வான். அவருள் நிலைத்திருக்கிற எவனும் பாவத்திலே வாழ்வதில்லை ; பாவத்திலே வாழும் எவனும் அவரை அறிந்த்துமில்லை. பாவம் செய்பவன் பசாசை சார்ந்தவன்.ஏனெனில் பசாசு 😈 ஆதிமுதலே பாவம் செய்துகொண்டு வருகிறது. 1அருளப்பர் 3-(3/6/8) பாவம் ஒரு போதும் ஆண்டவரிடமிருந்து வருவதில்லை. சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கருக்கலைப்பு திட்டமிடப்பட்ட கொலை

  19/11/22 சனிக்கிழமை அன்று கல்லூரியில் படிக்கும் சுமார் 100 மாணவர்கள் கருக்கலைப்பு செய்வதை எதிரத்து,  வடக்கு வர்ஜீனியாவில் உள்ள கருக்கலைப்பு மருத்துவமனைக்கு வெளியே முழங்காலில் நின்று செபமாலை செபித்தனர். 100 Students of Christendom college pray the Rosary on their knees outside an abortion clinic in Northern Virginia on Saturday.  ஏன் ?  கர்ப்பத்தை மருந்தினால் கலைப்பதென்பது மிகக் கொடியது பாவம்,ஒரு மனிதனை கொல்வது பெரிய பாவமென்னும்போது ஒரு பாவமும் அறியாத சின்னஞ்சிறு சிசுவை அதன் தாயே கொல்வது என்பது மிகவும் கொடிய பாவம் செயல்.அரசாங்கம் அனுமதிப்பதால் சர்வசாதாரணமாக குற்ற உணர்வின்றி சிசு கொலை செய்தாலும் இறைவன் முன் குற்றவாளிகளே ,தண்டனைகுறியவர்களே! கிறிஸ்தவர்களே ஞானஸ்நானம் பெறுவதற்க்கு முன் அதை கருவிலேயே அழிப்பதால் சிசு ஆன்மாவின் விண்க நுழைவை தடைசெய்கிறீர்கள் இது மன்னிக்கமுடியாத பெரும்பாவமாகும். இப்படிப்பட்ட கொடிய மன்னிக்க முடியாத பாவம் செய்பவர்கள் அஞ்சுவதோடு, இத்தகைய பாவத்துக்கு உதவியாக இருக்கும் மருத்துவர்களும் அஞ்ச வேண்டும் .சிலர் கருக்கலைப்புக்கு மருந்து கொடுப்பார்கள் ச...

விஞ்ஞானிகளின் பொன்மொழிகள்

Image
  If you study science deep enough and long enough,it will force you to belive in god. Willian kelvin, நீங்கள் அறிவியலை நீண்ட காலமாக,தேவையான அளவு, ஆழ்ந்து படித்தால், அதுவே உங்களை கடவுளை நம்ப வைக்கும். வில்லியம் கெல்வின். சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க !  அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விஞ்ஞானிகளின் பொன்மொழிகள்

Image
  "சிறிதளவு அறிவியல் கடவுளிடமிருந்து ஒருவரை தூரமாக்கிவிடுகிறது, ஆனால்   நன்கு கற்றரிந்த அறிவியல்  கடவுளிடம் நெருங்கிச்செல்ல உதவுகின்றது. நான் இயற்கையை எந்த அளவு அதிகமாக அறிந்துக்கொள்கின்றேனோ,அதைவிட அதிகமாக படைத்தவரின் வேலையைப் பார்த்து வியக்கிறேன்."  -லூயிஸ் பாஸ்டர் நுண்ணுயிரிய ல் மற்றும்   நோயெதிர்ப்பு அறிவியலின்  தந்தை "A bit of science distances one from God, but much science nears on to Him . The more I study nature, the more I stand amazed at the work of the Creator."  -Louis Pasteur founder of micro biology and immunology. சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அன்பு தியாகத்தினாலேயே வாழ்கிறது,கொடுப்பதாலேயே   வளர்க்கப்படுகிறது. தியாகம் இல்லாமல் அன்பு இல்லை என்பதை நினைவில் கொள்வோம். அர்ச்.மேக்ஸ்மில்லியன் கோல்ஃப். Let us remember that love lives through sacrifice and is nourished by giving. Without sacrifice there is no love. St.Maximillian kolbe. சேசுவுககே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  உங்கள் உள்ளத்தில் மனக்கசப்பும், பொறாமையும் ,கட்சி மனப்பான்மையும் இருந்தால்,அதைப் பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம்.உண்மையை எதிரத்து பொய்பேச வேண்டாம். பொறாமையும் கட்சி மனப்பான்மையும் எங்குள்ளதோ அங்கே குழப்பமும் எல்லாத்தீச்செயல்களும் இருக்கும். விண்ணினின்று வரும் ஞானமோ தீய எண்ணத்துடன் கலவாது.இதுவே அதன் தலையான பண்பு.மேலும் சமாதானத்தை நாடும் ;பொறுமையை கடைபிடிக்கும்,இணக்தத்தை விரும்பும்,இரக்கமும் நற்செயல்களும் பெருகப்செய்யும்; நடுநிலை தவறாது கள்ளமறியாது. யாகப்பர் 4(14-17) சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  என்னால் பெரிய காரியங்களைச் செய்ய முடியாது. ஆனால் நான் செய்யும் எல்லாமே, சிறிய காரியம் கூட, கடவுளின் மகிமைக்காக இருக்க வேண்டும் என்று  விரும்புகிறேன். புனித டொமினிக் சாவியோ. I can’t do big things. But I want all I do, even the smallest thing, to be for the greater glory of God.” – St. Dominic Savio. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  இரங்கும் உள்ளம்,பரிவு,தாழ்ச்சி,சாந்தம், பொறுமை, ஆகிய பண்புகளை அணிந்துக்கொள்ளுங்கள்.ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளுங்கள்.ஒருவர் மீது ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னித்துவிடுங்கள். இவையெல்லாவற்றிக்கும் மேலாக அன்பை அணிந்துக்கொள்ளுங்கள். கொலோசியர் 2(13-14). சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  செல்வமுடையவனாய் இருந்தாலும் சரி,உயர்குடிப் பிறந்தவனாய் இருந்தாலும் சரி,எளியவனாய் இருந்தாலும் சரி,கடவுளுக்கு பயப்படுவது எல்லாருக்கும் மகிமை. சீராக் 11-25 சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உங்கள் வேலை அல்லது நேரத்தின்படி அல்ல, நீங்கள் செலுத்தும் அன்பின்(இறையன்பு,சுய அன்பு,பிறரன்பு) அளவின்படியே உங்களுக்கான வெகுமதி அளிக்கப்படுகிறது. சியானாவின் புனித கேத்தரின் You are rewarded not according to your work or your time but according to the measure of your love. St. Catherine of Siena. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

Image
உத்தரிக்கும் ஆன்மாக்களின் புதுமைகள். *பலிப்பீடத்தின் முன்பு குறுக்கும் நெடுக்குமாக பலமுறை நடந்த போது நற்கருணை நாதருக்கு மரியாதை செலுத்த தவறியதற்க்காக இப்போது உத்தரிக்கும் ஸ்தலத்தில் வேதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றேன்.* என்று புனித பியோவிடம் உதவிக்கேட்ட உத்தரிகும் ஆன்மா. ஒருமுறை புனித பியோ ஆலயத்தில் அமர்ந்து செபித்துக் கொண்டிருந்தார் துகில் அசையும் குரல் கேட்டுத் திரும்பிய போது. ஒரு இளவயது துறவி பலிப்பீடத்தில் நிற்பதைக் கண்டார் அந்தத் துறவி அங்கு மெழுகுத்திரிகளை ஒழுங்குப்படுத்தி பூச்செடிகளை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார் பலிப்பீடத்தைப் பராமரிக்கும் பொறுப்பைப் பெற்றிருந்த அருட்தந்தை லியோன் எனக் கருதி பியோ அவரருகில் சென்று அருட்தந்தை லியோன் அவர்களே இது உணவு வேளை போய் உணவருந்துங்கள் பலிப்பீடத்தைச் சுத்தம் செய்து ஒழுங்குப்படுத்தும் தருணம் அல்ல இது" என்று கூறிய போது,   "நான் தந்தை லியோன் அல்ல" என்ற குரல் கேட்டது. "அவ்வாறெனில் நீங்கள் யார்?" என பியோ கேட்ட கேள்விக்கு. இங்கு முதல்நிலை துறவறப் பயிற்சி மேற்கொண்டிருந்த குருமட மாணவன் நான் .இங்கு இருந்தபோதுப்பீடத்தைச் சுத...

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  தீநெறியாளனான மனிதனுக்குத் தீமைகளில் வெற்றி உண்டு.ஆனால்,அந்த வெற்றியே அவனுக்குக் கேடாகிறது. சீராக் 20-9 சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  "நாம் சோர்ந்துவிடாமல் ஜெபிக்க வேண்டும், ஏனென்றால் மனிதகுலத்தின் இரட்சிப்பு பொருளுக்கான வெற்றியைச் சார்ந்தது அல்ல; புத்தியை மழுங்கடிக்கும் விஞ்ஞானங்களிலும் அல்ல.  ஆயுதங்கள் மற்றும் மனித தொழில்களை சார்ந்தது அல்ல, மாறாக அது இயேசுவை மட்டுமே சார்ந்துள்ளது. – புனித பிரான்சிஸ் சேவியர் கப்ரினி. “We must pray without tiring, for the salvation of mankind does not depend on material success; nor on sciences that cloud the intellect. Neither does it depend on arms and human industries, but on Jesus alone.” – St. Frances Xavier Cabrini. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  எல்லாவற்றிலும் தைரியமாக இருக்க பழகுங்கள், இருளை விரட்டுங்கள், ஒளியைப் பரப்புங்கள். உங்கள் பலவீனத்தைப் பார்க்காதீர்கள், ஏனெனில் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவால் உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதை உணருங்கள். – சியானாவின் புனித கேத்தரின். “Start being brave about everything, driving out darkness and spreading light as well. Don’t look at your weakness, but realize that in Christ crucified you can do everything.” – St. Catherine of Siena  சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  நீங்கள் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாயும், தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடற்றவர்களாயும் இருக்க வேண்டும் என விழைகிறேன்.  உரோமையர் 16:19 சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 தன்னை நம்புகிறவன் தொலைந்து போவான். கடவுளை நம்புகிறவன் எல்லாவற்றையும் செய்து முடிப்பான். புனித அல்போன்சஸ் லிகுயோரியார் He who trusts in himself is lost. He who trusts in God can do all things.  St. Alphonsus Liguori  சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  எல்லாத் தீமைகளும் கெட்டுப்போன நன்மைகளே!  கெட்டுப்போன பழம் அழுகுவதற்கு முன்பு  நல்லதாகவே  இருக்கின்றது.  தீமை சுயமாக இல்லாமல்,  நன்மையை திண்ணும் ஒரு ஒட்டுண்ணி. All badness is spoiled goodness. A bad apple is a good apple that became rotten. Because evil has no capital of its own, it is a parasite that feeds on goodness. Bishop Fulton sheen. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  மாசற்றவராய் நடப்போரே!நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுபவர்;தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்; திருப்பாடல் 15(2-4) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவரைத் தீமையினின்று விலகச் செய்யும்.  நீதிமொழிகள் 16:6 Through love and faithfulness sin is atoned for; through the fear of the Lord evil is avoided. Proverbs 16:6 சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே  வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உங்கள் மரணத்திற்குப் பிறகு மக்கள் உங்களை எவ்வளவு விரைவாக மறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால், உங்கள் வாழ்க்கையில் கடவுளைத் தவிர வேறு யாரையும் நீங்கள் மகிழ்விக்க  தேடிச்செல்ல மாட்டீர்கள்."  -அர்ச் ஜான் கிறிசோஸ்டம். If you knew how quickly people would forget about you after your death, you will not seek in your life to please anyone but God." -Saint John Chrysostom. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  அனைவருடனும் சமாதானமாய் இருக்க முயலுங்கள்; தூய்மையை நாடுங்கள். தூய்மையின்றி எவரும் ஆண்டவரைக் காணமாட்டார். எபிரேயர்(12-14). சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும். இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். திருப்பாடல்கள் 112(1-4). சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும். மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.”பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால்,தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?-விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். லூக்கா18(1-8). சேசுவுக்கே ...

செய்த பாவங்களுக்கு பரிகாரம் அவசியம்.

Image
  செய்த பாவங்களுக்கு பரிகாரம் அவசியம்.  பாவம் என்பது மனிதன் கடவுளின் கட்டளையை மீறுவதே. மனிதன் தன் உதடுகளால் இல்லையென்றாலும், தன் செயல்களைக் கொண்டு கடவுளிடம்: "நீர் எனக்கு ஒரு பொருட்டல்ல, நீர் இருப்பதும் இல்லாததும் எனக்கு ஒன்றுதான்; என் சொந்த விருப்பமே என் கடவுள்: அந்தப் பெண்ணையும், இந்தச் சொத்தையும் அந்த உலக இன்பத்தையும் போல நீர் எனக்குப் பிரியமானவராக இல்லை" என்று செயலில் வெளிப்படுத்துவதே. ஒவ்வொரு பாவமும் கடவுளின் சட்டத்திற்கு எதிராக அனுபவிக்கப்பட்ட ஒரு முறையற்ற இன்பத்தில் அடங்கியிருக்கிறது. பாவத்தில் கடவுளின் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஓர் இன்பமும், கடவுளின் சட்டத்தை மீறியதால் அவருக்கு ஏற்படும் நிந்தை அவமானமும் இருக்கிறது. எனவே, பாவப் பரிகாரத்தில், அந்த முறையற்ற இன்பத்திற்கு எதிராக ஒரு துன்பத்தை ஏற்றுக்கொள்வதும், அந்தத் துன்பத்தைக் கடவுளின் மகிமைக்காக மனப்பூர்வமாகவும், அமைந்த மனதோடும் ஏற்றுக்கொள்வதில் அடங்கியிருக்கிறது. உதாரணமாக அமைந்த மனதோடு நமக்கு வரும் நோய்களையும் உடல் வலிகளையும் கடவுளை நினைத்து நாம் செய்த பாவங்களுக்கு தண்டனையாக ஏற்றுக்கொள்வது ஒரு நல்ல பாவ பரிகாரம். நமக்க...

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  நிலையில்லாதச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல்,நமது இன்பத்துக்காக எல்லாவற்றையும் ஏராளமாக அளிக்கும் கடவுளில் மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும். 1தீமோத்தேயு 6-17 சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திவ்விய நற்கருணை ஆண்டவருக்கு உரிய மரியாதை எப்போது தரப்போகிறோம்??

  திவ்விய நற்கருணை ஆண்டவரை வெளியரங்கமாக மரியாதையற்ற முறையில் பெற்றுக்கொள்வதை பற்றிய கேள்வி உள்ளது. ... நவீன முறையில் திவ்விய நற்கருணை ஆண்டவரை நேரடியாக கரங்களில் பெறுவது மிகவும் அபாயமானது ஏனெனில் இது கிறிஸ்துவை, அற்பமானவராக மிகபெரிய அளவில் அம்பலப்படுத்தப்படுகிறது. ஆயர் .அத்தனாசியஸ் ஸ்னைடர் There is ...the question of objectively irreverent reception of holy communion.the so-called new , modern manner of receiving holy communion directly into the hand is very serious because it exposes Christ to an enormous banality. Bishop Athanasius schneider. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானத்துடன் வாழுங்கள். உரோமையர் 12:18 சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  பிறந்த பொழுது நாம் ஒன்றையும் கொண்டு வரவில்லை.இறக்கும் பொழுது எதையும் எடுத்துச் செல்லவும் முடியாது.எனவே உணவு,உடையோடு மனநிறைவுகொள்வோம். செல்வம் சேர்க்க விரும்புகிறவன் சோதனைகளில் வீழ்கிறான்.பசாசின் 😈 வலையில் சிக்குகிறான்.தீமை விளைவிக்கும் மதிகேடான பல்வேறு ஆசைகளில் அமிழ்ந்து விடுகிறான்.இவையோ அவனை கேட்டிலும் அழிவிலும் ஆமிழ்த்திவிடும்.பண ஆசைத்தான் எல்லாத் தீமைகளுக்கும் வேர்.இந்த ஆசையால் தான் சிலர் விசுவாசத்தினின்று தவறிபோய் தங்களையே ஊடுருவக் குத்திக்கொள்வது போல் பல துன்பங்களை தங்கள் மேல் வருவித்துக் கொண்டார்கள். 1தீமோத்தேயு 6(7-10) சேசுவுக்கே புகழ்! தேவ மாதா வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  பிறந்த பொழுது நாம் ஒன்றையும் கொண்டு வரவில்லை.இறக்கும் பொழுது எதையும் எடுத்துச் செல்லவும் முடியாது.எனவே உணவு,உடையோடு மனநிறைவுகொள்வோம். செல்வம் சேர்க்க விரும்புகிறவன் சோதனைகளில் வீழ்கிறான்.பசாசின் 😈 வலையில் சிக்குகிறான்.தீமை விளைவிக்கும் மதிகேடான பல்வேறு ஆசைகளில் அமிழ்ந்து விடுகிறான்.இவையோ அவனை கேட்டிலும் அழிவிலும் ஆமிழ்த்திவிடும்.பண ஆசைத்தான் எல்லாத் தீமைகளுக்கும் வேர்.இந்த ஆசையால் தான் சிலர் விசுவாசத்தினின்று தவறிபோய் தங்களையே ஊடுருவக் குத்திக்கொள்வது போல் பல துன்பங்களை தஙகள் மேல் வருவித்துக் கொண்டார்கள். 1தீமோத்தேயு 6(7-10) சேசுவுக்கே புகழ்! தேவ மாதா வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை. அவை சிறிது காலம்தான் நீடிக்கும். ஆனால் அவை ஈடு இணையற்ற மாட்சியை விழைவிக்கின்றன. அம்மாட்சி எள்றென்றும் நிலைத்திருக்கும். 2 கொரிந்தியர் 4:17 சேசுவுக்கே புகழ் !  தேவ மாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  நற்செயல்களைச் செய்வதில் எல்லாவகையிலும் நீயே முன்மாதிரியாய் இரு நாணயத்தோடும் கண்ணியத்தோடும் கற்றுக்கொடு.யாரும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத நலந்தரும் வார்த்தைகளைப் பேசு. அப்பொழுது எதிரிகள் நம்மைப்பற்றித் தீயன பேச எதுவுமின்றி வெட்கிப் போவார்கள் தீத்து2(7-8) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

St.Mother Teresa's Speech

 St.Mother Teresa used her Nobel Peace Prize Acceptance speech in 1979 to shed light on violence against the preborn. Abortion is a Murder.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
துன்பங்களும் சிலுவைகளும் தன்னுள் இனிய  கனியைக் கொண்டிருக்கும் கடினமான மேலோடு ஆகும். அர்ச்.அர்னால்ட் ஜேன்யஸ்யன். சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தரிக்கும் ஸ்தல ஆன்மாக்களின் புதுமைகள்

Image
  உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களின் புதுமைகள்-52 7-ம் புதுமை பிறர் பாவத்தில் விழக் காரணமாயிருந்த ஆத்துமங்கள் பெறும் கொடிய தண்டனை ஸ்பெயின் நாட்டில் ஒரு கிறிஸ்தவன் ஓவியம் வரைவதில் கெட்டிக்காரனாயிருந்தான். அவன் வாலிபனாய் இருந்தபோது காம உணர்ச்சியைத் தூண்டும் வகையில் ஒருமுறை ஓர் ஓவியம் வரைந்தான். வெட்கப்பட்ட பலர் இந்தப் படத்தை பார்க்கக்கூடத் துணியவில்லை. அதை ஒரு பிரபு விலைக்கு வாங்கித் தன் மாளிகையில் வைத்தான். அதைக் கண்ட சிலர் மோக பாவத்தைக் கட்டிக் கொண்டவர்களாய் சில முறை பாவத்திலும் விழுந்தார்கள். இப்படி அடுத்தவரின் உணர்ச்சியைத் தூண்டுமளவுக்கு ஓவியம் வரைந்தவனுக்கு முதிய வயதில்தான் நல்ல புத்தி வந்தது. இத்தகு படத்தை வரைந்ததால் மிகவும் மனஸ்தாபப்பட்டு தான் செய்த பாவத்துக்குப் பரிகாரமாக செபித்தல் முதலான புண்ணிய காரியங்களைச் செய்தான். அத்தகைய படத்தை மறுபடியும் வரையாமல் தேவமாதா மற்றும் புனிதர்கள் பலரின் படத்தை வரையலானான். இப்படங்களைப் பார்த்த அநேகருக்கு பக்தி ஏற்படலாயிற்று. இறுதியில் ஒரு நாள் அந்த ஓவியன் நல்ல மரணமடைந்தான். அவன் இறந்து சில நாட்கள் ஆயின. ஒரு நாள் புனித தெரேசா சபையைச் சார்ந்த குருவான...

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  எச்சரிக்கையாயிருங்கள். " உன் சகோதரன் குற்றம் செய்தால் அவனைக் கடிந்துகொள். மனம் வருத்தினால் அவனை மன்னித்துவிடு.அவன் ஒரு நாளில் ஏழு முறை உனக்கெதிராகக் குற்றம் செய்து, ஏழு முறையும் உன்னிடம் திரும்பி வந்து, 'நான் மனம் வருந்துகிறேன்' என்றால், அவனை மன்னித்துவிடு" என்றார் இயேசு. லூக்கா 17(3-4) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

  இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “பாவச்சோதனை வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு!அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வதைவிட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஒரு எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது..எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். லூக்கா17(1-3). சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையபபரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தரிக்கும் ஸ்தல ஆன்மாக்களின் புதுமைகள்

Image
செசிலியா என்கிற கன்னிகை சேசுநாதர் சிலுவையிலே அனுபவித்த தாகத்திற்கு பரிகாரமாக வெள்ளிக்கிழமைகளில் தண்ணீர்அருந்தாமலிருந்தது கடினமாக ஒறுத்தல் செய்ததால்உத்தரிக்கிற ஸ்தலத்திலே காவல் தூதரின் உதவி இத்தாலியில் செற்செசு என்கிற நகரில் அர்ச், மர்கரீத்தம்மாளுடைய மடத்திலுள்ள கன்னியர்களில் செசிலியா என்கிற கன்னிகை கடின தபசு செய்து கொண்டிருந்தாள். அவள் எவ்வளவுதான் தாகமாய் இருந்தாலும் சேசுநாதர் சிலுவையிலே அனுபவித்த தாகத்திற்கு பரிகாரமாக வெள்ளிக்கிழமைகளில் தண்ணீர் அருந்தாமலிருந்தாள்.இப்படிப்பட்ட புண்ணியத்தை அநேக வருடங்கள் செய்து கொண்டு வந்த இவள் கடைசியிலே அவஸ்தையாய் இருந்து மரணமடைந்தாள். பின்பு அவளுடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் போய் தன்னுடைய அறப் பாவங்களுக்காக நெருப்புக்குள் வெகு வேதனை அனுபவித்தது. அவளுடைய காவல் தூதர் அந்த கன்னிகை உயிரோடு இருக்கும் போது அவளுடைய ஆத்தும சரீரத்திற்கு கணக்கற்ற உபகாரங்களை செய்ததும் தவிர. அவள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே படுகிற வேதனை சீக்கிரமாய் முடியத்தக்கதாக அதிசயமான சகாயத்தைச் செய்தார். அதாவது: அந்த காவல் தூதர் சேசுநாதருடைய சமுகத்திலே நின்று. என் கர்த்தரே. தேவரீர் சிலுவையி...

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  மனிதர் விரும்புவதாலோ உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை; கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது.  உரோமையர் 9:16 Everything depends, not on what human beings want or do, but only on God's mercy. Romans 9:16 சேசுவுக்கே புகழ்!  தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

  இயேசு அவர்களிடம் கூறியது: “நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக் கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும். லூக்கா 16-15. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தரிக்கிறஸ்தலத்தின் ஆன்மாக்களின் நம்மை நோக்கிய கதறல்

Image
  #உத்தரிக்கிற_ஸ்தலத்தின் #ஆன்மாக்களின் நம்மை நோக்கிய கதறல்  by Rev. John Evangelist Zollner, 1884 . "Friend, lend me three loaves."--Luke, 11: 5  "நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாக கொடு"  - லூக்கா 11:5 ஊக்கத்துடன் விடாமல் தொடர்ந்து ஜெபிக்கும் ஜெபத்தின் பலனை காண்பிக்க அன்பின் நமதாண்டவர் மிக ஆறுதலான ஒரு உவமையை காட்டுகிறார்...: "உங்களுள் ஒருவன் தன் நண்பனிடம் நள்ளிரவில் சென்று, " நண்பா, எனக்கு மூன்று அப்பம் கடன்கொடு. ஏனெனில், பயணம்செய்யும் என் நண்பன் ஒருவன் என்னிடம் வந்திருக்கிறான். அவனுக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை " என்று சொல்லுகிறான் . நம்மால் இந்த விண்ணப்பத்தை எளிதாக கற்பனை செய்து பார்க்க முடிகிறது,....  நள்ளிரவு ..... உதவி கேட்க பொருத்தமற்ற நேரம்...  மனைவி பிள்ளைகளுடன் படுத்து ஓய்வெடுக்கும் நண்பர்.... நாம் எதிர்பார்த்தபடியே இவ்வாறு விண்ணப்பத்தை நிராகரிக்கிறார்: " என்னைத் தொந்தரவு செய்யாதே. கதவு பூட்டியாயிற்று. என் குழந்தைகளும் என்னோடு படுக்கையில் உள்ளனர். எழுந்து உனக்குக் கொடுக்க முடியாது " என்று சொல்லுகிறான்.- லூக்கா 11:7 ஆனால்...