Posts

Showing posts from January, 2023

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவரே!  கலக்கமுற்ற நிலையில் ‘உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன்’ என்று சொல்லிக்கொண்டேன்; ஆனால், நான் உம்மிடம் உதவிக்காக வேண்டினபோது, நீர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தீர். திருப்பாடல் 31-22 சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவரே ! உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி!மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்!  திருப்பாடல் 31(19-20) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்; ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்; ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார். திருப்பாடல் 31-23 சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  A Part -Time Christian cannot defeat Full-Time Devil. உங்கள் எதிரியான அலகை, கர்ச்சிக்கும் சிங்கம்போல் யாரை விழுங்கலாமெனத் தேடித் திரிகிறது.விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாய், அதை எதிர்த்து நில்லுங்கள்; 1பேதுரு 5-8. முழு நேரம் வேலைசெய்யும் பசாசை 😈 பகுதிநேர கிறிஸ்தவனால் வெற்றிப்பெற முடியாது. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
நீர் உம் தவற்றை உணர மறுக்கும்போது, கடவுள் உம் கருத்துக்கேற்ப கைம்மாறு வழங்கவேண்டுமா? நீர் தான் இதைத் தீர்மானிக்க வேண்டும்;  யோபு 34-33. சேசுவுக்கே புகழ்! தேவமதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உண்மையான பக்தியின் விளக்கம் -3

Image
  நெருப்புக் கோழி பறப்பதில்லை. வீட்டுக் கோழி மிகவும் சிரமப்பட்டுத் தரையை ஒட்டித்தான் பறக்கும். ஆனால் கழுகுகளும், புறாக்களும் குருவிகளும் மிக்க விரைவாக அடிக்கடி வானுயரப் பறக்கும். இவ்வாறே பாவிகள் கடவுளை நோக்கிப் பறந்துசெல்ல முடியாது. அவர்கள் உலகத்தையும், உலகத்தைச் சார்ந்தவைகளையுமே எப்பொழுதும் நாடிச் செல்வார்கள். உண்மையான பக்தியை இன்னும் கண்டடையாத நல்லவர்கள் தங்கள் நற்செயல்களால் கடவுளை நோக்கிப் பறந்து செல்ல முயல்வார்கள்  ஆனால் சிரமப்பட்டு, மெதுவாக, அரிதாகத்தான் அவர்களால் பறக்க முடியும். பக்திமான்களோவெனில், எளிதாக அடிக்கடி வானுயரப் பறக்க முடியும்.சுருங்கக் கூறினால், நம்மில் செயலாற்றும் தேவசிநேகத்தின் வேகமும் உக்கிரமுமே பக்தியாகும். அல்லது சுறுசுறுப்பாகவும், ஆவலாகவும் புண்ணியச் செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டும் தேவசிநேகமே பக்தி எனப்படும். கடவுளின் கட்டளைகள் அனைத்தையும் ஒன்றும் விடாமல் கடைப்பிடிக்க நம்மைத் தூண்டுவது தேவ சிநேகமே. கவனமாகவும், ஆர்வத்தோடும் அவற்றைக் கடைப் பிடிக்கத் தூண்டுவது பக்தி. பாகுபாடு எதுவுமின்றிக் கடவுளின் கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பவனே நல்லவனும் பக்திமான...

பொன்மொழிகள்

Image
  கவலை என்பது ஒரு பலவீனம், அதில் இருந்து நம்மில் மிகச் சிலரே முற்றிலும் சுதந்திரமாக இருக்கிறோம். நமது ஆன்மா அமைதியினை இழக்கும் இந்த நயவஞ்சக எதிரிக்கு எதிராக நாம் கவனமாக இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, கடவுள் மீது நம்பிக்கையை வளர்ப்போம், மேலும் அவர் நமக்காக தெரிவுசெய்ததை அனுப்புவதற்குத்  முன்னதாகவே அவருக்கு நன்றி செலுத்துவோம். முத்திப்பேறு பெற்ற சோலனஸ் கேசி Worry is a weakness from which very few of us are entirely free. We must be on guard against this most insidious enemy of our peace of soul. Instead, let us foster confidence in God, and thank him ahead of time for whatever he chooses to send us Bl. Solanus Casey. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உண்மையான பக்தியின் விளக்கம் -2

Image
  வியாதி நீங்கி உடல் நலம் அடைந்து வரும் நோயுற்றவன், தனக்குத் தேவையான அளவு மட்டும் மெதுவாகவும், பொறுமையாகவும் நடப்பான். அவ்வாறே. பாவ வழியை விட்டு விலகி வந்தவன் பக்தி நெறியைக் கண்டடையும் வரையில், மெதுவாகத் திணறி நடத்து தான் கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றுவான். பக்தி நெறியைக் கண்டடைந்த பிறகு, அவன் துள்ளிக் குதித்துப் பாய்ந்து வந்து, கட்டளைகளை ஆவலுடன் கடைப்பிடிப்பான். கட்டளைகளை மட்டுமின்றி நற்செய்தி அறிவுரைகளையும், கடவுள் தரும் ஏவுதல்களையும் கடைப்பிடித்து ஞான வாழ்வில் முன்னேற்றம் அடைவான். அர்ச்.பிரான்ஸிஸ் சலேசியார். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நமது துக்கத்தின் ஆழமே  மகிழ்ச்சியின் உச்சமாகும் - அர்ச். ஜெனிவிவ் The depth of my sorrow is the height of my joy." - St. Genevieve. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உண்மையான பக்தியின் விளக்கம் -அர்ச்.பிரான்ஸிஸ் சலேசியார்

Image
  பக்தியுள்ள ஆன்மாவே, உண்மையான பக்தி கடவுளுக்கு எவ்வளவு விருப்பமானதென்பதை உன் கிறீஸ்தவ விசுவாசம் உனக்குப் போதிப்பதால், பக்திநெறியில் ஒழுக நீ ஆவலாயிருக்கிறாய். ஏதேனும் ஓர் அலுவவைத் தொடங்கும்பொழுது முதன்முதல் ஏற்படும் சிறு பிழைகளைத் தொடக்கத்திலேயே திருத்தாவிடில், பிழைகள் பெருகிப் பெருகி இறுதியில் அவற்றைத் தவிர்க்க முடியாத நிலைமை ஏற்படுவது இயல்பு. ஆகவே பக்தி என்னும் புண்ணியம் என்ன என்பதை முதன்முதல் நீ அறிந்துகொள்ள வேண்டும். உண்மையான பக்தி ஒன்றே ஒன்றுதான்:  போலிப் பக்திகள் எண்ணிலடங்காது. எனவே, உண்மையான பக்தியைப் பகுத்தறி யாமல், முறைகேடான குருட்டு நம்பிக்கைகளில் சிக்கி விட நேர்ந் தால் வீணில் ஏமாற்றமடைவாய்.எத்தனையோ பேர் தத்தம் நாட்டங் களுக்கும் விருப்பங்களுக்கும் தக்கவாறு பக்தியைச் சித்தரித்துக் கொள்கிறார்கள்.  உபவாசமிருந்து பழகியவன், உபவாசம் செய்யும் போது தான் பக்தியுள்ளவன் என்று எண்ணிக்கொள்கிறான். ஆனால் தன் உள்ளத்தில் நிறைந்து கிடக்கும் பழியுணர்ச்சிகளைப் பற்றிக் கவலையற்றவனாகவே இருப்பான்.  உபவாசத்தை நுணுக்கமாக அனுசரிக்கும்பொருட்டு, ஒரு சிறிது தண்ணீர் முதலாய் அருந்த மாட்டா...

பொன்மொழிகள்

Image
  கடவுளுக்கு நாம் முழுமையாகக் கீழ்ப்படிந்து, தீவிரமான அன்பின் மூலம், எல்லா மனித ஞானத்திற்கும் மேலாக உயர வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். தாமஸ் கேம்பிஸ்  God wants us to be completely subject to Him and, through ardent love, to rise above all human wisdom. The Imitation of Christ (by Thomas À Kempis) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 ஆத்துமாக்களைப் இழந்துவிடாமல் பாதுகாக்கும், கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்களுடைய நரம்புகள் ஒவ்வொன்றையும் பசாசு சிரமப்படுத்துகிறான். கடவுளுடன் நாம் இணைந்திருக்க சாத்தானோடு யுத்தம் செய்யும் வேலையை ஒருபோதும் வெறுக்கக்கூடாது.  - அர்ச்.செபஸ்தியார்  வேதசாட்சி | 255 கிபி-288 கிபி  The devil strain every nerve to secure the souls which belong to Christ. We should not grudge our toil in wrestling them from Satan and giving them back to God. - St. Sebastian St. Sebastian Martyr | 255 AD-288 AD. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

நற்கருணையை நாவில்தான் வாங்க வேண்டும் என்பது ஒரு பெரும் முழக்கமாக, பேரியக்கமாக உருப்பெற வேண்டும். வளர வேண்டும்.

Image
“நற்கருணையில் மெய்யாகவே இயேசு ஜீவிக்கிறார், என்ற நம்பிக்கை கிறிஸ்த்துவத்தின் உன்னதமான உண்மை. குருவானவர் வசிகரம் செய்யும் அப்பமும் இரசமும், மகத்தான விதமாக இயேசுவின் திருஉடலும் இரத்தமுமாக மாறுகிறது. இயேசுவே இம்மாற்றத்தைக் கொண்டு வருகிறார். இதில் குருவானவர் ஒரு கருவிதான்." என்கிறார் தந்தை ரெஜிஸ் ஸ்கேலன். இவர் அன்னை தெரேசா சபையினரின் ஆன்ம குரு- இயேசுவின் திரு உடலும் திரு இரத்தமும்தான் நற்கருணை என்பதால், அவர்கு தக்க வணக்கமும் மரியாதையும் செலுத்தப்பட வேண்டும். தொடக்க காலத்தில், நற்கருணை கையில்தான் வழங்கப்பட்டது. வேத கலாபனையின் காலத்தில், சிறைப்பட்டோருக்கும், நோயுற்றோருக்கும், மறைந்து வாழ்ந்த திருச்சபைக்கும் நற்கருணை வழங்கப்பட வேண்டுமென்பதால், தகுதி வாய்ந்த திருத்தொண்டர்கள் இந்த சேவையில் பங்கு கொண்டனர். நான்காம் நூற்றாண்டில், கிறிஸ்த்து இறைமகனல்ல என்ற “தவறான பிரச்சாரத்தை திருச்சபையின் எதிரிகள் மேற் கொண்டனர், ஆதலால் நற்கருணையைக் கையில் வாங்குவது தவறல்ல என்று போதிக்கலாயினர். இதனால் பல தவறுகள் நிகழ்ந்தன. சிலர் நற்கருணையைக் கையில் பெற்றுக் கொண்டு, அதை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். சாத்தானின...

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  நீங்கள் கடவுளின் ஆலயம் என்பதும், கடவுளின் ஆவி உங்களுள் குடிகொண்டிருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?கடவுளின் ஆலயத்தை எவனாவது அழித்தால், அவனைக் கடவுள் அழித்து விடுவார். ஏனெனில், கடவுளின் ஆலயம் பரிசுத்தமானது. நீங்களே அவ்வாலயம். 1கொரிந்தியர் 3(16-17) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஒவ்வொரு முறை பாவம் செய்யும் போதும், நாம்மை நாமே அழித்துக் கொள்கிறோம். கடவுள் தங்க தகுதியற்ற ஆலயமாகின்றோம்.  ஒவ்வொரு பாவச் சந்தர்ப்பங்களையும் தவிர்த்து பாவம் செய்யாமல் நம்மை நாமே தற்காத்துப் புண்ணியங்களை செய்யும்போதும் கடவுள் தங்குவதற்கு தகுயான ஆலயமாகின்றோம்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
    பாவங்கள் , தீமைகள் மற்றும் மதங்களுக்கு எதிரான கொள்கையில் பற்றுடைய மதவெறியர்களின் போதனைகள் நரகத்தின் வாசலாக இருக்கின்றன. அர்ச். ஜெரோம் The gates of Hell are sins and vices, especially the teachings of heretics."  - St. Jerome. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  உங்களுக்கு நன்மை வராமல் தடுத்தவை நீங்கள் செய்த பாவ அக்கிரமங்களே. எரேமியாஸ் 5-25 your sins have deprived you of good. Jeremiah 5:25 சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பசாசின் பிள்ளைகளாக நமக்குத் தோன்றும் பலர்  கிறிஸ்துவின் சீடர்களாக மாறுவார்கள். அர்ச்.பிரான்சிஸ் அசிசி. Many who seem to us to be the Devil's children will still become Christ's Disciples."  - St. Francis of Assisi. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை; வலிமைவாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும். வெள்ளாண்மை எங்கே மிகுதியோ அங்கே மாட்டின் பலம் வெளியாகின்றது. நீதிமொழிகள்14-4. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  என் அன்பான மகனே, பொறுமையாக இரு, ஏனென்றால் உடலின் பலவீனங்கள் ஆன்மாவின் இரட்சிப்புக்காக இந்த உலகில் கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே பொறுமையுடன் தாங்கும் போது அவை பெரும் தகுதியுடையனவாகும். அர்ச்.பிரான்ஸிஸ் அசிசியார். My dear son, be patient, because the weaknesses of the body are given to us in this world by God for the salvation of the soul. So they are of great merit when they are borne patiently. St. Francis. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  இறைமகனாயிருந்தும், * துன்பங்கள் * வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார். எபிரேயர் 5(8-9) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  கடவுளுடைய பார்வைக்கு மறைந்திருக்கும் படைப்பெதுவும் இல்லை. யாருக்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டுமோ, அவரது கண்ணுக்கு அனைத்தும் வெளிப்படையாகவும் திறந்தவையாகவும் உள்ளன. எபிரேயர் 4-13 சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை இவற்றை உரைப்போம்.வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம்.  தம் புதல்வர்களுக்கு ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கவும், அதனால், அவர்கள் *கடவுள்மீது நம்பிக்கை வைக்கவும், இறைவனின் செயல்களை மறவாதிருக்கவும், அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவுமே.* திருப்பாடல் 78-3,4bc. 6c-7 சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நமது வாழ்வின் இறுதியில் நமக்கு எதிராகப் போராடும் பேய்களுக்கு எதிராக புனித ஜோசப் மிகவும் சக்தி வாய்ந்தவர்.    அர்ச். அல்போன்சஸ் லிகோரியார்   Saint Joseph is most powerful against the demons which fight against us at the end of our lives.”     ~St. Alphonsus de Liguori St.Joseph, patron of a happy death, pray for us! சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  சகோதரரே, உயிருள்ள கடவுளை மறுதலிக்கச் செய்யும் அவிசுவாசமான தீய உள்ளம் உங்களுள் யாருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். எபிரேயர் 3:12. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்,  நம்மால் செய்ய முடியாததை கடவுள் செய்வார்.  அர்ச். ஜான் போஸ்கோ. Do the Best you can, God will Do what we cannot Do.  St.John Bosco. சேசுவுக்கே புகழ்! தேவமாதவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் விருப்பங்கள் எப்போதும் நன்மையே பயக்கும்; எதிர்காலம் பற்றிப் பொல்லார் கொள்ளும் நம்பிக்கை தெய்வ சினத்தையே வருவிக்கும். நீதிமொழிகள் 11-23 சேசுவுக்கே புகழ் தேவமாதாவே வாழ்க! அர்ப்.சூசையப்பரை எங்களுக்காக வேண்டிக்கொள்இளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  கடவுள் ஆள் பார்த்து செயல்படுவதில்லை, எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து, நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். திருத்தூதர்பணி 10(34-35) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும் பிள்ளளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்து கொள்வோம்; 1யோவான்3(17-19). சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 

அன்னிய பாஷை என்று மக்களை ஏமாற்றும் போலி போதகர்கள்

Image
  தழிழ்தெரிந்தவர்களிடம்,தமிழில் பேசாமல் புரியாத முறையில் கத்தி கூச்சல் போட்டு அன்னிய பாஷை என்று மக்களை ஏமாற்று போலி போதகர்கள் உஷார்...உஷார்.... நிறை உண்மையை நோக்கி வழநடத்திச்செல்பவர் பரிசுத்த ஆவியார்.அந்த உண்மையை புரியாத மொழியில் ,மொழியா அல்ல அல்ல வாய்க்கு வந்ததை உலருதல், கத்தி கூச்சல் போட்டு ஒரு நாளும் பரிசுத்த ஆவி புரியாத முறையில் வெளிப்படுத்தமாட்டார். அசுத்த ஆவி மட்டுமே கத்திக் கூச்சல் போட்டு மக்களை குழப்பும் .இதை அன்னிய பாஷை என்று நம்பும் நம் சகோதர சகோதரிகளை என்ன வென்று சொல்வது. 🙈குடும்பங்களில் குழப்பம் ஏற்படுத்தும்  போலிப்போதகா்கள்🙈        ஆறுமாதங்களுக்குமுன் பக்கத்து ஊரில் நண்பரின் திருமண விழாவிற்கு சென்றிருந்தேன்...        கத்தோலிக்க முறைப்படி திருமணம் இறைவன் திரு அருளால் நடைபெற்றுக் கொண்டிருந்தது...         திருமண திருப்பலி நடைபெரும் போது பெண்கள் அனைவரும் பொதுவாக ஆலயத்தினுள் இருந்து மணமக்களுக்காக ஜெபிப்பது வழக்கம்....       ஆனால் 4,சகோதரிகள் மட்டும் வெளியில் இருந்து பேசிக் கொண்டிருந்தனா்...இவா...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அர்ச்.குழந்தை தெரசம்மாளின் புத்தாண்டு தீர்மானம். மோட்சத்தின் மீது கவனம் இது கடந்த ஆண்டிலிருந்தே தொடரும் தீர்மானம். நான் சொர்க்கத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறேன். கடந்த ஆண்டு நான் சொர்க்கத்தைப் பற்றி அதிகம் படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்திற்கு முன்பு நான் தொடங்கிய புத்தகத்தை மிக விரைவில் முடிக்கவும் மேலும் பரலோகம், உயிர்த்தெழுதல் பற்றிய அறிவு இப்போது என் வாழ்க்கையை எவ்வாறு மாற்றும் என்பதைப் பற்றி அதிகமாக அறிந்துக்கொள்ள தீர்மானித்தேன்.  Focus on Heaven: This is a continuing resolution from last year. I want to learn more about heaven. Last year I began reading more about heaven. I resolve to finish the book I started a while ago very soon, and to continue to learn more about heaven, the resurrection and how knowledge of these things can change my life now. St. Thérèse of Lisieux. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள

Image
  கடவுளோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை. 1யோவான் 3-6. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
இந்த புத்தாண்டில் நான் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க முடிவு செய்கிறேன். இந்த வருடத்தில் எனக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் கடவுளே, நான் என்னை முழுவதுமாக உன்னிடம் விட்டுவிடுகிறேன்"  - புனித ஜெம்மா கல்கானி  During this new year I resolve to begin a new life. I do not know what will happen to me during this year. But I abandon myself entirely to you, my God"  - St. Gemma Galgani. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்ததைகள்

Image
  ஆண்டவர் மேல் விசுவாசம் வைக்கிற எவனும் ஏமாற்றம் அடையான்.அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே.அவரை நோக்கி மன்றாடுவோர் யாவர்க்கும் வள்ளன்மையுடயவர். ஆண்டவருடைய பெயரைச் சொல்லி மன்றாடுபவன் எவராயினும் மீட்பு பெறுவர். உரோமையர் 10(11-13) சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புத்தக வாசிப்பின் அவசியம்

Image
 புத்தாண்டு தீர்மானங்கள்.. புத்தக வாசிப்பானது மனிதனை நல்வழிப்படுத்தும் சிறந்த ஆயுதமாகும். நல்ல நூல்களை சிறந்த நண்பர்கள் என குறிப்பிடுவர். மனிதர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், அறிவினை அள்ளித் தரும் ஆசானாகவும் விளங்கும் வாசிப்புப் பழக்கத்தை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாக மாற்றியமைததால் மிகுந்த நன்மை பயக்கும். தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்த்து சிறுவர்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பது நல்லது. புத்தகங்கள் இல்லாத அறை ஆன்மா இல்லாத உடல் போன்றது. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  புத்தாண்டில் நமக்கு என்ன காத்திருக்கிறது என்பது நம்மில் யாருக்கும் தெரியாது, ஆனால் கடவுளுக்கு தெரியும். அவருடைய சித்தம் நம் பாதைகளை ஏற்கனவே தயார் செய்துவிட்டது; நம் வாழ்வின் ஒவ்வொரு விவரமும் அவருடைய மனதில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடவுள் விரும்பும் அல்லது அனுமதிக்கும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள அல்லது தழுவிக்கொள்ள தயாராக இருப்போம். அருட்தந்தை. கபிரியேல் None of us knows what awaits us in the new year, but God knows. His will has already prepared our paths; every detail of our life is already determined in His mind. Let us be ready to accept, or rather embrace... everything God wishes or permits"  - Fr Gabriel. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.