Posts

Showing posts from November, 2019

உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்

Image
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம். உதவி செய்பவர்கள்தான் உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்கள். ஆஸ்திரியா நாட்டில் படை வீரனொருவன் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் பேரில் வெகு அக்கறையும் இரக்கமும் கொண்டிருந்தான்.அதன் பொருட்டு அந்த ஆன்மாக்கள் மீட்பு பெற தர்மங்கள் செய்தான் கல்லறைகளை காணும்போதெலலாம்  அவன் செபிக்க  தவறியதில்லை. ஒரு நாள் அவ்வீரன் தனிமையில் வேறு ஊருக்கு பயணம் போகையில் வழியில் கண்ட பகைவர்கள் அவனை கொல்லத் துரத்தினார். பயந்த வீரன் வேகமாக ஓட வழியில் ஒரு கல்லறைத் தோட்டம் தெரிந்தது.கல்லறைகள் கண்டால் வழக்கமாக செபிக்கும் அவன் இப்போது யோசிக்கலானான்.."கல்லறை முன் நின்று நான் செபித்தால் துரத்த வரும் பகைவர்கள் என்னை பிடித்து கொன்று போடுவர்.ஆயினும் இந்த ஆன்மாக்களுக்காக செபிக்கிமால் என்னால் இருக்கவும் முடியாது.என்ன நேர்ந்தாலும் சரி உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களை நம்பி இங்கையே நின்று செபிப்பேன்".என்று தீர்மானித்தவனாய் செபிக்கத் தொடங்கினான்.               இப்படி அவன் கண்மூடி உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக செபித்துக்கொணடிருக்கும் போது பகைவர...

உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்

Image
உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாவின் தண்டனையை குறைக்க 10 வழிகள் 1.திருப்பலி ஒப்புக்கொடுத்தல் 2.திருப்பலி காணுதல் 3.தானதர்மம் செய்தல் 4.ஒருசந்தி,சுத்தபோசனம் 5,தபசு செய்தல் 6.பரிபூரண பலன்கள் 7.தனிபலன்கள் 8.உத்தரிக்கிற ஸ்தலம் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவது 9.சிலுவைபாதை செய்வத 10.செபமாலை செபிப்பது. குடும்பத்தில் இறந்தவர்களுக்காகவும்,மரித்த நண்பர்களுக்காகவும் இந்த வழிகளை பக்தியோடு பின்பற்றுங்கள் உத்தரிக்கற ஆன்மாக்களின் விடுதலையும் தண்டனை குறைப்பும் நமது விசுவாச பக்தியிலையே உள்ளது என்பதை உணருங்கள்.நாம் இப்போது செபித்து உத்தரிக்கிற ஆன்மாக்களின் விடுதலைக்கு உதவி செய்யாவிட்டால் நாம் இறந்த பிறகு உதவியற்றவர்களாய் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனையடைவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திருச்சபை நவம்பர் மாதம் முழுவதும் உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுத்து செபிக்க அழைக்கிறது என்றால் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து திருச்சபையின் அழைப்பை ஏற்று நவம்பர் 2 ஆம் தேதி /நவம்பர் மாதம் மட்டும் செபித்து முடித்துவிடாமல் நமது வாழ்க்கை முடியும்வரை உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக சிறப்ப...

உத்தரிக்கிற ஆன்மாக்கள் புதுமைகள்

Image
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம். பிறர் நமக்கு செய்த தீமைகளை மன்னித்து நன்மை செய்யும் புண்ணியத்தை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாவுக்கு ஒப்புக்கொடுத்தால் ஏற்படும் பெரும் நன்மை. பொலோஞா என்ற நகரத்தில் உயர் குடியில் பிறந்த விதவைப் பெண் ஒருத்தி இருந்தாள்.அவளுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான்.அந்தத் தாய் தன் மகன் மேல் அளவற்ற பாசம் வைத்திருந்தாள்.ஒரு நாள் அந்த இளைஞன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது,கோபமும்,முரட்டுத்தனமும் கொண்ட படைவீரனொருவன் அவ்வழியே வந்து விளையாடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இடையூறு செய்தான். அப்பிள்ளைகளில் விதவை தாயின் மகன் கோபக்காரனாக இருந்ததால் அந்த வீரன் மேல் கோபம் கொண்டு அவனை திட்டினான்.மிகுந்த சினம் கொண்ட வீரன் தன் கையிலிருந்த ஆயுதத்தால் அவனைக் குத்த அந்த இளைஞனும் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.அவன் இறந்ததை கண்டு அஞ்சிய வீரன் தான் காவலர்களிடம் அகபட்டுக் கொள்வோமே என்ற பயத்துடன் தப்பிப்பதற்க்காக இரத்தம் தோய்ந்த ஆயுதத்துடன் விதவை தாயின் வீட்டினுள் நுழைந்தான்.அப்பெண்தான் ,தன்னால் கொல்லப்பட்டவனின் தாய் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.தன்னிடம் அடைக்கலம் தேடி வந்திருக்கும...

உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம் 19/011/2019

Image
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம். பூமியில் இருக்கிற துயரங்களை விட கடுமையான வேதனைகளைவிட உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பினால் ஏற்படும் வேதனை மிகக் கொடியது என்கிறார் புனித அகுஸ்தினார். ஆஸ்திரியா நாட்டில் ஒரு மடத்தில் இருந்த இரண்டு குருக்கள் தங்களுக்குள்ளே வெகு நட்பாயிருந்து பல புண்ணிய காரியங்களை செய்து புனிதர்களை போலவே வாழ்ந்தனர்.இவ்விருவரில் ஒருவர் ஒருநாள் நோய்வாய்ப்பட்டு அவதிப்படும் நேரம்.அவருடைய காவல் சம்மனசு அவருக்கு தோன்றி "அவர் சற்று நேரத்தில் இறந்து போவது மட்டுமல்லாமல்,அவருடைய அற்பப் பாவங்களுக்கு தண்டனை பெற உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் வாடும் போது அவருக்காக வேறு ஒரு குருவானவர் திருப்பலி ஒப்புக்கொடுக்கும்வரை உத்தரிக்கிற ஸ்தலத்து துன்பம் தொடரும் என்றும் திருப்பலி ஒப்புக்கொடுத்த பிறகு அவர் மோட்சத்துககு போய்விடுவார் என்றும் கூறி மறைந்தார். படுக்கையில் இறந்த குருவானவர் தன் நண்பராயிருக்கும் குருவானவரை வரவழைத்து நடந்த நிகழ்ச்சியை கூறி தாம் இறந்தவுடன் தாமதமின்றி உடனே ஒரு திருப்பலி நிறைவேற்றி தன் ஆன்மாவுக்காக ஒப்புக்கொடுக்கும்படி வேண்டினார்.நண்பர் குருவானவரும்  சம்மதித்தார்...

உத்தரிக்கிற ஆன்மாக்களின் எச்சரிக்கைகள்

Image
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம். சில ஆன்மாக்கள் இவ்வுலக கடன்கள் தீருமட்டும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் கடுமையான துன்பம் அனுபவிக்கிறார்கள்! ஆஸ்திரியா நாட்டில் அகுஸ்தீன் என்கிற இயேசு சபை குருவானவர் ஒருவர் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் பேரில் மிகவும் இறக்கமுடையவராய் இருந்ததால் ஒரு நாள் அவ்வூரைச் சார்ந்த இறந்த செல்வந்தன் ஒருவன் அவருக்கு தோன்றி உதவ கேட்டுக்கொண்டான்.நான் சில கடன்களைத் தீர்க்க வேண்டும் பலரிடம் கடன் வாங்கி அநேகரை ஏமாற்றினேன்.நகைகளை வாங்கினேன்.திருப்பி கொடுக்க முடிந்தும் கொடுக்காமல் ஏமாற்றினேன்.அதைத் தீர்க்கும் வரை என் உத்தரிக்கிற ஸ்தல வேதனைக்கு முடிவில்லை என்று கூறினான். குருவானவரை மடத்துக்கு வெளியே அழைத்துச்சென்று ஓரிடத்தில் பூமிக்குள் தான் புதைத்து வைத்திருந்த நகையையும்,பணத்தையும் பட்டுவாடா செய்ய வேண்டிய கொடுத்தவர்களின் பட்டியலையும் கொடுத்து கடனை தீர்க்க குருவானவர்தான் உதவ வேண்டும் என கெஞ்சி கூறி மறைந்து போனான்.அப்படியே குருவானவர் கடன் பட்டியலில் குறிந்திருந்தபடி பல கடன்காரகளுக்கும் கடனை திருப்பிச் செலுத்தினார். கடன் தீர்ந்து 8-ஆம் நாள் அந்த ஆன்மா மீண்டும் குருவா...

உத்தரிக்கிற ஆன்மாக்களின் புதுமைகள்

Image
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம். ஆஸ்திரியா நாட்டில் புண்ணியவான் ஒருவன் வாழ்ந்து வந்தான்.ஒரு நாள் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மா ஒன்று அவரிடம் தோன்றி தான் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அனுபவிக்கும் மிகுந்த வேதனை பற்றி விவரித்தது.தன்னை சுற்றிக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவருக்கு காட்டி திவ்விய நற்கருணை ஆண்டவரை உட்கொள்கிறபோது சிலமுறை பக்தியில்லாமல் ,அசட்டை தனத்தோடும்,பராக்கோடும்,பெற்றுக் கொண்ட பாவத்திற்கு தண்டனையாய் தான் இப்போது இப்படி கடுமையான நெருப்பில் வெந்து கொண்டிருப்பதாகவும் தனக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டது. அந்தப் புண்ணியவான் அவன் மீது இரக்கப்பட்டு மிகுந்த பக்தியோடும்,சுறுசுறுப்போடும் பரிசுத்ததனத்தோடும் திவ்விய நற்கருணை வாங்கி அப்புண்ணியத்தை தன்னுடைய ஆன்மாக்காக ஒப்புக்கொடுத்தால் அவனுடைய குற்றம் முழுவதும் தீர்ந்து போகும் என்றும் வேண்டிக் கேட்டுக்கொண்டு மறைந்து போனது. அந்த ஆன்மாவுக்கு உடனே உதவி செய்ய தீர்மானித்த புண்ணியவான் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து திவ்விய நற்கருணை பெற்றுக் கொண்டார். அதன்பின் தியானத்தில் இருக்கும்போது உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மா மறுபடியும் அவனுக்கு தோன்றி மகி...

உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கம் மாதம் 16/11/2019

Image
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம். கிறிஸ்தவர்களே! உங்கள் தாய், தந்தை,கணவன்,மனைவி,பிள்ளைகள், குருக்கள்,கன்னியர்கள்,உயிரோடு வாழும்போது நிறைய புண்ணியங்களை செய்திருப்பதை நீங்கள் அறிந்திருந்தாலும் ,அவர்கள் மரித்த பிறகு நேரே மோட்சத்திற்க்கு போயிருப்பார்கள் என்று நினைக்கூடாது.ஒரு வேளை உத்தரிக்கிறஸ்தலம் போனாலும் அங்கே கொஞ்ச நாட்கள் மட்டுமே இருந்து மோட்ச்சத்திற்க்கு போவார்களென்று முடிவு கட்டவும் கூடாது.இப்படி தவறான எண்ணத்தோடு அந்த ஆன்மாக்களுக்கு திருப்பலி ஒப்புகொடுத்தல்,தர்மம்,ஒருசந்தி,வேண்டுதல்,வழியாக உதவி செய்யாமல் போனால் அவர்கள் வெகு வேதனை அனுபவிப்பார்கள் .ஒருவேளை நீங்கள் புண்ணிய செயல் செய்யும் ஆன்மா உத்தரிக்கிறஸ்தலத்திலே இல்லாதிருந்தால் உங்களால் குறிப்பிடப்படும் மற்ற ஆன்மாக்களுக்குப் போய் சேரும். இறந்து போன இவர் பூமியில் வாழும்போது அவர்களிடம் ஒரு பாவத்தையும் காணவில்லையே ,அவர்கள் எப்படி மோட்சம் போகாமல் இருப்பார்கள் என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டாம். பார்வையுள்ளவனும்,பார்வைபற்றவனும் காணாத, காண முடியாதவற்றை நல்ல கண்ணுற்றவன் காண்பான்.அவ்விதமே வாழும்போது தங்களிடத்திலும்,பிறரிடத்தி...

உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கம் மாதம் 14/11/2019

Image
பிரிந்த சபையினரும் ஒருசில கத்தோலிக்கர்களும்,விவிலியத்தில் உத்தரிக்கிற ஸ்தலம் என்ற சொல் இல்லவே இல்லை என்று வாதிடுவார்கள்.விவிலியம் ஆதியிலே வாய்மொழியாகதான் வந்தது.பிறகுதான் எழுதப்பட்டது.கத்தோலிக்க பாரம்பரியத்தில் உத்தரிக்கும் ஸ்தலத்தை பற்றிய படிப்பினை ஆதி முதல் இருந்து வந்துள்ளது. உதாரணமாக பழைய ஏற்பாட்டில் 2 மக்கபேயர் 12:45 கூறுவதாவது :."ஆகவே இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி ,அவர் அவர்களுக்காக பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்."மேலும் லூக்கா 16:1-8 "அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ``செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு, `உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது' என்று அவரிடம் கூறினார். அந்த வீட்டுப் பொறுப்பாளர், `நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப்போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து...

உத்தரிக்கிற ஆன்மாக்களின் எச்சரிக்கைகள்

Image
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம். *அடுத்தவருடைய மோக பார்வை என்மீது விழும்படி என்னை நானே அழகுப்படுத்திக்கொண்டதால் உத்தரிக்கும் ஸ்தலத்திலே கடுமையான வேதனை அனுபவிக்கிறேன்.* ஆண்டவர் புனித பிரிஜித்தம்மாளுக்கு உத்தரிக்கிற ஆன்மாக்கள் பேரில் அதிக பக்தியை ஏற்படுத்த அந்த ஆன்மாக்களை குறித்து பல காட்சிகளை அவருக்கு வெளிப்படுத்தினார் .அவர் ஒருமுறை தியானத்தில் இருந்தபோது  உயர் குடும்பத்தில் பிறந்த ஒர் இளம்பெண் தன் தாயை குறித்து குற்றம் சாட்டி அழுது காட்சி கண்டார். என்னை பெற்ற தாயே உம்மால்தான் நான் இவ்வளவு வேதனைகளை உத்தரிக்கிற ஸ்தலத்தில் அனுபவிக்கிறேன்.நீர் என்மீது அளவற்ற பாசம் வைத்து என் ஆசைகளுக்கெல்லாம் இடம் கொடுத்து என்னை அழகுபடுத்திக் காட்டும் ஆடம்பர பொருட்களையெல்லாம் வாங்க அதிக பணம் செலவழித்தீர்.திருமணம் முதலிய பொது நிகழ்ச்சிகளுக்கு என்னை அடிக்கடி அழைத்து போய் என்னை காட்சி பொருளாக்கினீர்.நான் புண்ணிய வழியில் நடக்க எனக்கு கற்பிக்காமல் பாவச்செயல்களால் என் ஆன்மா மோசமடைய வழிகாட்டினீர்.நல்ல வேளையாக நான் இயேசுநாதர் பட்ட பாடுகளின் பேரில் பக்தியாயிருந்து இறக்கும் தறுவாயில் என் பாவத்திற்க்க...

உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கம் மாதம் 12/11/2019

Image
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம். கிறிஸ்தவர்களே! பூமியில் பெரும் பாவங்களை செய்துவிட்டு உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு சென்று பரிகாரம் தீர்த்துக்கொண்டு மோட்சம் போய் சேரலாம் என்று நீங்கள் கணக்குப் போடுவீர்களேயானால் ,அதை விட பெரிய முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது.ஏனேனில் உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஒரு நிமிட வேதனை பூமியில் ஓராண்டு வேதனைகளுக்குச் சமம். அவரவர் பாவ கணக்கிற்க்கு ஏற்ப்ப நெருப்பின் உத்தரிப்பு கூடக் குறைய இருக்கும்.உத்தரிக்ககற ஸ்தலத்தின் நெருப்பில் கொஞ்ச நேரம் துன்புறுவதைவிட, பூமியில் வாழ்நாள் முழுவதும் துன்பப்படுவது எவ்வளவோ மேலானது என்று பல புனிதர்கள் கூறியுள்ளார்கள். கன்னியாஸ்திரீயாய் வாழ்ந்த புனித மரிய மதலேன் தான் வாழும்போது இறைவனின் கட்டளைப்படியே உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளை கண்ணால் கண்ட அவர் ,உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைகளை பார்க்கும்போது நம் வேதசாட்சிகள் அனுபவித்த துன்பங்களெல்லாம் ஒன்றுமேயில்லை எனத் தோன்றுகிறது. வேதசாட்சிகளின் துன்பங்கள் ஏதேன் தோட்டத்து மகிழ்ச்சியென்றே கூறலாம் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே அந்த தீயில் வெந்து காலவரையற்று,வேதனையுறுவதைவிட பூமியில...

உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கம் மாதம் 11/11/2019

Image
ஆண்டவர் ஏழைகளுக்கு உதவுவதற்கென்றே அநேக மனிதர்களுக்கு செல்வத்தை அளித்திருப்பதைப் போல உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்கு உதவுவதுற்கென்றே பூமியிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு பலவகை புண்ணிய வழிகளை அருளியிருக்கிறார். நல்ல செல்வந்தர்களின் உதவியில்லாவிட்டால் ஏழைகள் துயருறுவதுபோல் உலகிலுள்ள கிறிஸ்தவர்கள் உதவியில்லாவிட்டால் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் நெருப்பிலே மிகவும் வேதனை அனுபவிக்க வேண்டியதிருக்கும். இம்மண்ணுலகில் பல செல்வந்தர்கள் ஏழைகள் மேல் சிறிதளவேனும் இரக்கம் காட்டாதவர்களாய் இருக்கிறார்கள்.அவர்களை போலல்லாமல் நாம் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் மீது பக்தியும் இரக்கமும் ஏற்படுவதற்க்கு வழி தேடுவோம். இறந்த ஆன்மாக்கள் பேரில் இரக்கமாயிருந்து அவர்களுக்காக பூசை கண்டு ஒப்புக்கொடுத்தல் ,செய்யும் தர்மங்களினாலும் வேண்டுதல்களினாலும் நாமும் உதவமுடியும் .இப்படிப்பட்ட உதவிகளால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வாடும் அவர்களுடைய துன்பத்துக்கும் முடிவு வரும். அந்த ஆன்மாக்காளும் நன்றி மறக்கமாட்டார்கள். அந்த ஆன்மாக்காளுக்காக நாம் செய்யும் தர்மங்களாலும் வேண்டுதல்களாலும் அந்த ஆன்மாக்கள் மோட்சம் போனபின் நீங்கள்...

உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கம் மாதம் 09/11/2019

Image
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம். கிறிஸ்தவர்களே ! கர்ப்பத்தை மருந்தினால் கலைப்பதென்பது மிகக் கொடியது பாவம்,ஒரு மனிதனை கொல்வது பெரிய பாவமென்னும்போது ஒரு பாவமும் அறியாத சின்னஞ்சிறு சிசுவை அதன் தாயே கொல்வது என்பது மிகவும் கொடிய பாவம் செயல்.அரசாங்கம் அனுமதிப்பதால்  சர்வசாதாரணமாக குற்ற உணர்வின்றி சிசு கொலை செய்தாலும் இறைவன் முன் குற்றவாளிகளே ,தண்டனைகுறியவர்களே! ஞானஸ்நானம் பெறுவதற்க்கு முன் அதை கருவிலேயே அழிப்பதால் சிசு ஆன்மாவின்  விண்க நுழவை தடைசெய்கிறீர்கள் இது மன்னிக்கமுடியாத பெரும்பாவமாகும். இப்படிப்பட்ட கொடிய மன்னிக்க முடியாத பாவம் செய்பவர்கள் தாங்கள் பயப்படுவதோடு இத்தகைய பாவத்துக்கு உதவியாக இருக்கும் மருத்துவர்களும் அஞ்ச வேண்டும் .சிலர் கருக்கலைப்புக்கு மருந்து கொடுப்பார்கள் சிலர் அம்மருந்து பற்றி தங்களுக்கு தெரியாதென்றாலும் ,தெரிந்தவர்களை அடையாளம் காட்டுவார்கள் .யார் இந்த பாவத்துக்கு சிறு உதவி செய்தாலும் இறைவன் முன் பெரும் குற்றவாளிகளே. சிசு கொலையாளிகளே மனம்வருந்துங்கள் ,மருத்துவத்தை சிசு கொலைக்கு பயன்படுத்தி மருத்துவத்தின் புனிதத்தை இழந்த மருத்துவர்களே மனமாரு...

உத்தரிக்ககும் ஆன்மாக்கள் வணக்கமாதம்

Image
அநேகர் தம் பெற்றோர்கள்,கணவன்,மனைவி, உறவினர்கள் ,நண்பர்கள் இறக்கும்போது அழுது அரற்றுவதோடு சரி,அதன்பின் அவர்களைப் பற்றி நினைப்பது மில்லை , அவர்களின் ஆன்மா நலனுக்காக வேண்டிக் கொள்வது மில்லை.உங்களுடைய அழுகையினால் அந்த ஆன்மாவுக்கு என்ன பயன்? நீங்கள் உண்மையாகவே அவர்களை நேசித்தால், நேசித்திருந்தால் அவர்களிடம் பலனடைந்திருந்தால் கண்ணீரை விட அவர்களுக்காக, அவர்கள் ஆன்ம இளைபாற்றிக்காக பலிபூசை ஒப்புக்கொடுத்து,தான தர்மங்கள் யாருக்கும் தெரியாமல் பலனை இறந்த ஆன்மாவிற்க்கு ஒப்புக்கொடுப்பது ,ஒரு சந்தி சுத்தபோனம் கடைபிடித்தல் செபமாலை சொல்வது இறந்தவர்களுக்கு நாம் செய்யும் கடமை. ஓ ஆதியும் அந்தமும் இல்லாத பரம பிதாவே ,நான் உமது தெய்வீக குமாரன் இயேசுவின் அதிமிக்க விலைமதிக்கப்படாத பரிசுத்த இரத்தத்தைக் கொண்டு இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது திவ்ய பலிப்பூசையின் பரிபூரண பலன்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற அனைத்து பரிசுத்த ஆன்மாக்களுக்காக ஒப்பக்கொடுப்பதோடு எல்லா இடங்களிலும் இருக்கும் பாவிகளுக்காகவும், உலகம் எத்திசையிலிருக்கும் பாவிகளுக்காகவும்,என் வீட்டிலிருக்கும் அனைவருக்காகவும் என் குடும...

உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம்.

Image
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கமாதம். கிறிஸ்தவர்களே! அநேகர் இறந்துபோன தங்கள் தாய் தந்தையர்,கணவன்,மனைவி,சகோதர,சகோதரிகளை குறித்து ஒரு வருடத்தில் ஒரு பலி பூசை செய்வித்து,அவர்கள் பிறந்தநாளில் பிச்சைக்கார்களுக்கு சோறு கொடுத்து போதுமென்று அசட்டையாய் இருப்பார்கள். ஒரு சமயம் இறந்தவர்களின் பிள்ளைகள் கனமான நெருப்பு பிடித்து அவர்களைச் சுற்றி அழுது துடிக்கும்போது ஒரே ஒரு குடம் தண்ணீர் தெளித்தால் போதுமா? அல்லது நிறைய தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைக்க முற்படுவார்களா?சற்று சிந்தியுங்கள்.தாய்,தந்தை மற்றும் இறந்த ஆன்மாக்களை பற்றி கவலைப்படாமல் நன்றி கெட்டதனமாய் வருடத்தில் ஒரு    பலிப்பூசை மற்றும் பிச்சைக்கார்களுக்கு ஒரு நாளைக்கு சோறு போட்டால் போதுமா? கிறிஸ்தவர்களே !சற்றே சிந்தியுங்கள்.உங்கள் கடமையைச் செய்யுங்கள் ன.தினமும் ஞானத்தண்ணீராகிய அநேக தர்மங்கள்,திவ்விய பலிபூசை கண்டு,செபமாலை சொல்லி அவர்கள் ஆன்மாக்களுக்கு உதவி செய்ய வேண்டியது அவசியம்.அப்பொழுதுதான் உங்கள் பிள்ளைகளும் உங்களுக்கு உதவுவார்கள். ஓ ஆதியும் அந்தமும் இல்லாத பரம பிதாவே ,நான் உமது தெய்வீக குமாரன் இயேசுவின் அதிமிக்க விலைமதிக்கப்...

உத்தரிக்கும் ஸ்தலத்து ஆன்மாக்கள்

Image
உத்தரிக்கும் ஸ்தலத்து ஆன்மாக்கள் : நம்முடைய ஜெபத்திற்காக மட்டுமே (திருப்பலி, ஜெபமாலை ஒப்புக்கொடுத்தல்) காத்திருக்கும் பரிதாபத்திற்குரியவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள். “ என் மீது இரக்கமாயிருங்கள். நண்பர்களே, நீங்களாவது என் மீது இரக்கமாயிருங்கள். எனெனில் ஆண்டவரின் கரம் என்மீது பாரமாக உள்ளது “ இதுதான் உத்தரிக்கிற ஆன்மாக்கள் இப்பூவுலகில் வாழும் தங்களது சகோதர்களிடம் உதவியை வேண்டி மன்றாடும் உள்ளத்தை நொறுக்கும் செபமாக உள்ளது. அந்தோ! பலரும் இச்செபத்திற்கு செவிமடுப்பதில்லை. சில பக்தியான கிறிஸ்தவர்களே, இரக்கமின்றி உத்தரிக்கிற ஆன்மாக்களை புறக்கனிப்பது புதிராக உள்ளது. இது இவர்கள் உத்தரிக்கிற ஸ்தலம் இருப்பது பற்றி ஏறக்குறைய நம்பிக்கையின்றி இருப்பதையும் முழுமையாக இக்கருத்தில் தெளிவில்லாமல் இருப்பதையும் காட்டுகிறது. உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக இவர்கள் பலி பூசை ஒப்புக்கொடுக்காமல், நாட்கள், வாரங்கள், ஏன் பல மாதங்கள் கூட கடந்து போகிறது.அரிதாக இவர்களுக்காக ஜெபிக்கிறார்கள்.அரிதாகத்தான் நினைக்கின்றார்கள். பரிதாபமான உத்தரிப்பு நிலையில் ஆன்மாக்கள் அக்னிபடுக்கையில் சொல்லொண்ணா வாதைகளில் ...