Posts

Showing posts from July, 2023

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
அமலோற்பவ அன்னைக்கு  தன்னையே அர்ப்பணித்த ஒரு ஆன்மாவை, பிசாசினால் எந்த வகையிலும் தீங்கு செய்ய முடிவதில்லை.  -புனித மாக்சிமிலியன் கோல்பே "If a soul dedicates itself to the Immaculata, the devil will not be able to harm it in any way." -Saint Maximilian Kolbe. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உலகில் மிக மோசமான விஷயம் பாவம் அல்ல. மோசமான விஷயம் பாவத்தை மறுப்பதே. முத்தி.பேராயர் புல்டன் ஷீன். The worst thing in the world is not sin. The worst thing in the world is the denial of sin. Bl.Fulton Sheen. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
   உத்தரிக்கும் ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களுக்காக எப்பொழுதும் தேவமாதாவிடம் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுளின் சிம்மாசனத்திற்கு இந்த ஆன்மாக்களை கொண்டு வரவும், நீங்கள் பிரார்த்தனை செய்யும் ஆன்மாக்களை உடனடியாக விடுவிக்கவும்  தேவமாதா உங்கள் பிரார்த்தனைக்காக காத்திருக்கிறார்."  - புனித லியோனார்ட் Always pray to the Blessed Virgin for the Souls in Purgatory. Our Lady awaits your prayer to bring her to the Throne of God and immediately free the souls for whom you pray." - St. Leonard of Port Maurice சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுள் எப்போதும் நம்மைப் பாதுகாத்து வருகிறார், பசாசு தான் விரும்பிய அனைத்தையும் செய்ய முடிந்தால், பூமியில் ஒரு மனிதன் கூட இருக்க மாட்டான்"  புனித அகஸ்டின். "God is always protecting us, if the Devil could do everything he wanted, there would not remain a single human being on earth"  St. Augustine சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பசாசு பாவிகளை  திறந்த கண்களுடன் நரகத்திற்கு கொண்டு செல்வதில்லை:நாம் செய்த பாவங்களின் தீமையினால் முதலில் நம் கண்களை குருடாக்குகிறான்.  நாம் செய்யும் ஒவ்வொரு பாவத்தினாலும், கடவுளைப் காயப்படுத்துகின்றோம் அதனால் நமக்கு நாமே கொண்டு வரும் பேரழிவை அறியமுடியாத நிலையிலேயே பாவிகளை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறான். புனித அல்போன்சஸ் லிகோரியார். The devil does not bring sinners to hell with their eyes open: he first blinds them with the malice of their own sins. Before we fall into sin, the enemy labours to blind us, that we may not see the evil we do and the ruin we bring upon ourselves by offending God.   St. Alphonsus Liguori . சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதைர்களின் பொன்மொழிகள்

Image
  உங்கள் முழு வாழ்க்கையையும்  உலகிற்கு கொடுத்தால், உலகம் உங்களுக்கு ஒரு கல்லறையைக் கொடுக்கும்; ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை விண்ணகத்திற்குக் கொடுத்தால், சொர்க்கம் உங்களுக்கு ஒரு சிம்மாசனத்தைக் கொடுக்கும்."  அர்ச் எப்ரைம்  If you give all your life to the earth, the earth will give you a tomb; But if you give your life to heaven, heaven will give you a throne. " St. Ephraim the Syrian. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நமது உண்மையான விசுவாசம் பல வெளிப்படையான சான்றுகளால் நிறுவப்பட்டுள்ளது, அதை ஏற்றுக்கொள்ளாதவர் முட்டாள் என்றே  அழைக்கப்படுவார்.  புனித. அல்போன்ஸ் மரியா லிகோரியார். He truth of our faith is established by so many manifest proofs that he who does not embrace it can only be called a fool. —St. Alphonsus MariaLiguorii. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  எதிரி திருச்சபைக்கு வெளியே இருக்கும் நாளில் நான் வாழ்ந்ததற்க்காக  கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.ஆனால், எதிரிகள் திருச்சபைக்கு வெளியேயும், உள்ளேயும் இருக்கும் ஒரு நாளை நான் எதிர்பார்க்கிறேன்.இந்தச் சண்டையில் சிக்கப்போகும் விசுவாசிகளுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்."  அர்ச்.ஜான் ஹென்றி நியூமன் (1801-1890) I thank God that I live in a day when the enemy is outside the Church, and I know where he is, and what he is up to. But, I foresee a day when the enemy will be both outside and inside the Church ... and, I pray for the poor faithful who will be caught in the crossfire." St.John Henry Newman (1801-1890) . சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கர்த்தர் கற்பித்த செபத்தில் நாம் செய்யும் பிழை என்ன ?

Image
 கர்த்தர் கற்பித்த செபத்தில் நாம் செய்யும் பிழையை இனியாவது சரிசெய்வோமா? சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நமக்கு வரும் துன்பங்களை நன்றியுடன் ஏற்றுக்கொள்ளும் போது, கடவுள் ! ஒன்று துன்பத்திற்கான காரணங்களை அகற்றுவார் அல்லது பொறுமைக்கான கிரீடங்களை  வெகுமதியாக அளிப்பார்.  -அர்ச். பசில் தி கிரேட் If God sees us accepting our present distress with gratitude, He'll either remove the causes or He'll reward us with the great crowns of patience. -St. Basil the Great சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  கல்வாரி பாடுகளை,கொடூரமான காயங்களை தாங்கிய நம் ஆண்டவர், நாம் விரும்பி செய்யும் ஒரே ஒரு பாவத்தை தாங்க முடியாதவராய் இருக்கிறார்.   நமது பாவத்திற்க்காக கிறிஸ்துவின் திருஇரத்தம் சிந்தப்பட்டுள்ளது.நமது பாவத்திற்கு பரிகாரமாக கடவுளுடைய மகனின் உயிர் விலையாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தும், பாவங்களை தவிர்க்காமல் பாவ சந்தர்ப்பங்களையும் விலக்காமல், தொடர்ந்து பாவ வாழ்க்கையிலே வாழ்வதும்,செய்த பாவங்களுக்கு பாவசங்கீர்தனம் செய்யாமல், பரிகாரமும் செய்யாமல் அலட்சியமாக வாழும் கத்தோலிக்கர்களாகிய நாமே இயேசுவின் திருஇருதயத்தை குத்தி கிழிக்கும் முள்முடிகள். கல்வாரி காயத்தை விட பெருங்காயத்தை ஏற்படுத்தும் பாவிகள். இன்றே மனம் திரும்வுவோம். பாவங்களை தவிர்ப்போம்.செய்த பாவத்திற்கு உரிய பரிகாரங்களையும், புண்ணியங்களையும செய்வோம்.ஆண்டவரின் திரு இருதயத்திற்கு ஆறுதல் அளிக்கும் கததோலிக்கர்களாக மாறுவோம். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளு

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஆசீர்வதிக்கப்பட்ட கன்னித்தாயின் உதவியை புறக்கணிப்பவர் தனது பாவங்களிலே இறந்துவிடுவார். தாயே, உன்னை அழைக்காதவர் ஒருபோதும் பரலோகம் செல்லமாட்டார். மரியாயின் பாதுகாப்பு இல்லாமல் யாரும் இரட்சிக்கப்பட முடியாது."  - அர்ச். போனவென்ச்சர் He who neglects the service of the Blessed Virgin will die in his sins.He who does not invoke thee, O Lady, will never get to Heaven. No one can be saved without the protection of Mary."  - St. Bonaventure. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மாமரி நமது கோரிக்கைகளை எதிர்பார்த்திருக்கும் தாய். நம் தேவைகளை அறிந்து, விரைவாக உதவிக்கு வருபவர்கள். அர்ச். ஜோஸ்மரியா எஸ்க்ரிவா “Mary is a mother who anticipates our requests. Knowing our needs, she comes quickly to our aid." St Josemaría Escriva சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பசாசு ஒரு ஆன்மாவின் எஜமானனாக மாற விரும்பும்போது, அவன் அந்த ஆன்மாவை மரியாயின் மீதுள்ள பக்தியை விட்டுவிட முயற்சிசெய்வான்" புனித அல்போன்சஸ் லிகோரி யாவே கடவுளின் முதல் தீர்க்கதரிசனம். "உனக்கும்(பசாசு) பெண்ணுக்கும்(மாதா), உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்;ஆதியாகமம் 3-15. *மங்கள வார்த்தைகள் முழங்காத குடும்பங்களில் இறை ஆட்சிக்கு வாய்ப்பில்லை.நமது இல்லங்களில் தீமைகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவும், பாவமில்லாமல் மங்களகரமாக நமது வாழ்க்கை அமையவும் இன்றே  குடும்ப ஜெபமாலை செபிக்க ஆரம்பிப்போம்.* When the devil wishes to make himself master of a soul, he seeks to make it give up the devotion to Mary." ~St Alphonsus Liquori I(God) will put enmity between you(devil) and the woman(mother mary), and between your offspring and hers; They will strike at your head, while you strike at their heel. Genesis 3-15 சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  நோயில் பூசுதல் அல்லது அவஸ்தை பூசுதல். எப்பொழுதும் உங்கள் அன்புக்குரியவர்கள் "அவஸ்தை பூசுதல்" என்ற திருவருட்சாதனத்தைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான முன்னேற்பாடுகளோடு தயாராக இருங்கள், அவர்களுக்கு உதவுங்கள். Always make sure your loved ones get the the sacrament of Extreme Unction. Be prepared and help them. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  The struggle is the sign of holiness.A saint is a sinner that keeps trying.  St.Josemaria escriva.  பாவத்திலிருந்து விலக முயற்சி செய்து கொண்டே இருப்பவர்களே புனிதர்கள். போராட்டமே புனிதத்தின் அடையாளம்.  புனித ஜோஸ்மரியா எஸ்க்ரிவா. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதைர்களின் பொன்மொழிகள்

Image
  ஒரு பெண் தன் உடலை அடக்கமான ஆடையால் முக்காடு போடும் போது, அவள் ஆண்களிடம் தன்னை மறைத்துக் கொள்ளவில்லை. மாறாக, அவள் அவர்களுக்கு தனது கண்ணியத்தை வெளிப்படுத்துகிறாள்."  முத்தி.பேராயர் புல்டன் ஷீன். When a woman veils her body in modest clothing, she is not hiding herself from men. On the contrary, she is revealing dignity to them."  Venerable Archbishop Sheen சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நல் உள்ளம் எப்பொழுதும் வலிமையுடன் இருக்கும், அது துன்பப்படும், ஆனால் கண்ணீருடன் தன் அயலாருக்காகவும்,  கடவுளுக்காகவும் தியாகம் செய்வதன் மூலம் ஆறுதலடைகிறது." அர்ச்.பியோ. A good heart is always strong, it suffers, but with tears it is consoled by sacrificing itself for its neighbor and for God." St.Pio சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  கடவுளின் வார்த்தைகளும் அவருடைய விருப்பம் மட்டுமே "நம் வாழ்க்கைக்கு உண்மையிலேயே அவசரமானவை".  -திருதந்தை பெனடிக்ட் XVI. God's words and his will are the only things that are "truly urgent for our lives". -Pope Benedict XVI சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒவ்வொரு குருவானவரையம்  வீழ்த்துவதற்க்காக  பசாசு  போராடுகிறான். குருக்களை விமர்சிக்க வார்த்தைகள் நம்மிடம் இருக்குமானால், அவர்களுக்காக  இரண்டு மடங்கு அதிகமாக ஜெபிக்க வேண்டும்.  - அவிலாவின் புனித தெரசா Behind Each Priest, There is a Demon Fighting For His Fall. If We Have The Language To Criticise Them, We Must Have Twice As Much To Pray For Them.” -St Teresa of Avila. நித்திய குருவாகிய சேசுவே! உமது தாசராகிய குருக்களுக்கு எவரும் தீங்கு செய்யாதபடி அவர்களை உமது இருதயமாகிய தஞ்ச ஸ்தலத்தில் வைத்துக் காப்பாற்றியருளும். அனுதினமும் உமது திருச்சரீரத்தைத் தொட்டு வரும் அபிஷேகம் பெற்ற அவர்கள் கரங்களைக் கறைபடாமல் காப்பாற்றும். விலைமதிக்கப்படாத உமது திரு இரத்தத்தில் தோய்ந்து சிவந்திருக்கும் அவர்களுடைய இதழ்களை நிர்மல சுத்தமாய்க் காத் தருளும். உமது மாட்சிமை பொருந்திய குருத் துவத்தின் உன்னத அட்சரங்களால் முத்திரிக்கப் பெற்ற அவர்கள் இருதயங்கள் உலகப் பற்று இன்றி தூய்மையாயிருக்கச் செய்தருளும். உலகத் தீவினைகள் அவர்களை அணுகாதபடி உமது பரிசுத்த அன்பு அவர்களைச் சூழ்ந்து காக்கும் கேடய...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நற்கருணையில் இயேசுவின் உண்மையான பிரசன்னத்தில் விசுவாசம்  இல்லாமல், திருப்பலியில் உயிர்பலி இருக்க முடியாது.  - திருதந்தை .புனித பவுல் VI Without faith in the Real Presence of Jesus in the Eucharist, there could be no sacrifice of the Mass. —Pope Saint Paul VI சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  ஜெபமாலை உண்மையான கிறிஸ்தவ பரிபூரணத்தை கற்றுக்கொள்வதற்கான பள்ளி.  🕯போப் ஜான் XXIII. The Rosary is a school for learning true Christian perfection.”  🕯Pope John XXIII. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

யார் இந்த புனித மரிய கொரற்றி ?

Image
  புனித மரிய கொரற்றி: கற்பிற்காக தன் இன்னுயிரை 12 வயதில் ஈந்த புனிதை. (1890 -1902 ) *யார் இந்த புனித மரிய கொரற்றி ?* தன்னிடம் தவறாக நடக்க முயன்ற அலெக்ஸாண்டர் என்பவருடைய இச்சை எண்ணத்திற்கு பணிய மறுத்ததால் 15 முறை கத்தியால் துடிக்க துடிக்க குத்துப்பட்ட புனிதை. *ஒவ்வொரு முறை கத்தியால் குத்தும்போதும் வலியால் கத்துவதை விட தனது ஆடைகளை சரிசெய்து, செத்தாலும் கற்புடன் சாகவேண்டும்* என்று 12 வயதிலேயே கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்த புனிதை. நீ செய்வது பாவம் இதற்க்காக நீ நரகத்திற்கு போவாய் என்று அலெக்ஸாண்டரை எச்சரித்த புனிதை,கத்தியால் குத்தப்பட்டு ஒரு நாள் முழுக்க மருத்துவமணையில் மரணத்தோடும், உடல் வேதனையோடும் போராட்டம் நடத்தி, கற்புக்காக தனது உயிரை தந்தவள். தன்னை கொலை செய்த அலெக்ஸாண்டரை மனதார மன்னித்து அவனுடைய கல்மனமாற்றமடைய இறைவனிடம் பரிந்து பேசி, கப்பூச்சியன் சபை துறவியாக மாற்றியப் புனிதை. கத்தியால் குத்தப்படும்போதும் ஆடைகள் விலகுவதை சரிசெய்து கற்பு என்ற பொக்கிஷத்தை பாதுகாத்த புனிதை நமக்கும் நமது தலைமுறைகளுக்கு கற்றுத்தரும் பாடம் என்ன ? 1.இல்லறமோ, துறவறமோ அவரவர் அந்தஸ்திற்கு ஏற்ப கற்பு ஒ...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உங்கள் குழந்தைகளை நேசியுங்கள். அவர்களில் நீங்கள் குழந்தை இயேசுவைக் காணலாம். அவர்களுக்காக அதிகமாக ஜெபியுங்கள், ஒவ்வொரு நாளும் குழந்தைகளை மாதாவின் பாதுகாப்பில் ஒப்படையுங்கள்.  புனித கியானா மொல்லா Love your children. In them you can see Baby Jesus. Pray for them a lot and every day put them under Holy Mary's protection."  St. Gianna Molla. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  திவ்விய நற்கருணை ஆராதனை நடைபெறாத ஆலயம் செத்துப்போன அல்லது நோய்வாய்ப்பட்ட ஆலயமாக இருக்கும். கர்தினால் இராபர்ட் சாரா A parish in which there is no adoration of blessed sacrament is a dead parish or a sick one."  —Robert Cardinal Sarah. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.