Posts

Showing posts from July, 2024

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  "ஒரு சிறிய கசிவு பெரிய கப்பலை மூழ்கடிக்கும். ஒரு சிறிய தீப்பொறி  பெரிய நெருப்பை மூட்டும். ஒரு சிறிய அனுமதிக்கப்பட்ட பாவம் அழியாத ஆன்மாவை அழிக்கும்." "A small leak will sink a great ship. A small spark will kindle a great fire. A little allowed sin will ruin an Immortal soul." சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
   நல்லவர்களின் கோழைத்தனத்தால்  தீமையாளர்கள்,பலம் பெறுகின்றனர்.  அர்ச். ஜான் போஸ்கோ. The power of evil men  lives on the cowardice of the good." St. John Bosco. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நீங்கள் தனியாக நின்றாலும், நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதற்காக  துணிந்து நிற்ப்பதற்கு பயப்பட வேண்டாம்."  அர்ச்.ஜோன் ஆஃப் ஆர்க் Do not be afraid to stand up for what you believe in, even if you stand alone.” - St. Joan of Arc. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவசங்கைகளை தவிர்ப்பதற்க்காக கரங்களில் நற்கருணை ஆண்டவரைபெற்றுக்கொள்ள வேண்டாம்.

  திருப்பலியில் வரவு,செலவு அறிக்கை வாசிப்பதாலும்,தனி மனித சாதனைகளை, இறை சந்நிதியில் பாராட்டி,புகழ்ந்து பொன்னாடை அணிவிப்பதாலும் எந்த ஆன்ம பலனையும் இறைமக்கள் ஒருபோதும் பெறமுடியாது. தயவு செய்து நற்கருணையை உங்கள் நாவில் மட்டுமே பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கின்றோம்.*அவசங்கைகளை* தவிர்ப்பதற்க்காக கரங்களில் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டாம்.நாவில் மட்டுமே திவ்விய நற்கருணையை பெற்றுக்கொள்ளவும். இதுப்போன்ற அறிவிப்புக்களே நற்கருணை ஆண்டவர் மீதுள்ள விசுவாசத்தின் வெளிப்பாடு.இந்த அறிவிப்புகளே இந்நாட்களில் ஒவ்வொரு பங்கிலும் அவசியம் தேவை.  நற்கருணை ஆண்டவர் மீதான உண்மை பக்தி அனைத்து குருக்களிடமும்/இறைமக்களிடமும் மீண்டும் திரும்பிடச் தொடர்ந்து செபிப்போம். நல்ல பாவசங்கீர்தனம் செய்து நம் நற்கருணை ஆண்டவரை மண்டியிட்டு நாவில் பெறுவோம்.நற்கருணை அவசங்கைகளை தவிர்ப்போம். Video - புனித பனிமயமாத கொடியேற்றம். சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.  

மரணம் ! முடிவல்ல.

Image
  மரணம் ! முடிவல்ல.  மரணம்  ! பாவத்திலிருந்து மனம் மாறியவர்களுக்கும்,தன் வாழ்நாளில் செய்த அனைத்துப் பாவங்களுக்கு முழுமையான பரிகாரம் செய்தவர்களுக்கு  "மரணம், கிறிஸ்துவுடன் இணைக்கும் பாலம்- மோட்சம்." பாவ வாழ்கையிலிருந்து மனம் மாறினாலும், தன் வாழ்நாட்களில் செய்த பாவத்திற்கு உரிய பரிகாரம் செய்யாதவர்களுக்கு, "மரணம், மோட்சத்திற்கு தேவையான பரிசுத்தத்தை பெற்றுக்கொள்வதற்கு கொடுமையான வேதனையால் தகுதி பெறும் தற்காலிக இடம்- உத்தரிக்கும் ஸ்தலம்." பாவத்திலே நிலைத்திருப்பவர்களுக்கு,இறுதி வரை மனம்‌ மாறாதவர்களுக்கு, "மரணம் ! பசாசுடன் இணைக்கும் பாலம். - முடிவில்லா நரகம்." சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தரியத்திற்கு அதிகமாக பயப்படுகின்றோம்- பசாசின் சாட்சியம்

Image
 *நாம் அணியாமல் அலட்சியப்படுத்துகிற  ரூ.10 உத்தரியத்திற்கே பசாசு அஞ்சி நடுங்குகின்றது.55,000 மதிப்புள்ள தங்க நகைக்கு அல்ல.* *பேயோட்டும் சடங்கில் பசாசின் நேரடி சாட்சியம்* வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் இப்பெஸ் என்பவரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம், பரிசுத்த உத்தரியத்திற்குப் பசாசு எந்த அளவுக்குப் பயப்படுகிறது என்று விளக்குகிறது. ஒரு நாள் அவருடைய உத்தரியம் நழுவிக் கீழே விழுந்தது. அவர் அதற்குப் பதிலாக மற்றொரு உத்தரியத்தை அணிய முயற்சித்தபோது, பசாசு அவரை நோக்கி ஊளையிட்டு,*"ஏராளமான ஆத்துமங்களை எங்களிடமிருந்து பிடுங்கிக்கொள்கிற அந்த அங்கியைக் கழற்றி விடு!*"என்று அலறியது. பிரான்சிஸ் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு. பசாசு உண்மையில் எவற்றிற்கு அதிகமாகப் பயப்படுகிறது என்று வெளிப்படுத்துமாறு அதைக் கட்டாயப்படுத்த அது பதிலுக்கு, “*சேசுவின் திருநாமத்திற்கும், மரியாயின் திருநாமத்திற்கும், பரிசுத்த கார்மெல் உத்தரியத்திற்குமே நாங்கள் மிக அதிகமாகப் பயப்படுகிறோம்*." என்றது. இவற்றுடன் பரிசுத்த ஜெபமாலை பக்தியையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். You will understand why the devil works a...

பக்தியுடன் உத்தரியம் அணிந்துக்கொள்வதே மாமரிக்கு பிரயமானது‌.

Image
  *"என் பிள்ளைகளே‌! உத்தரியம் அணிந்துக்கொள்ளுங்கள் " என்ற மாதாவின் அன்பு கட்டளைக்கு கீழ்படியாத மாதாவின் பக்தர்களால் கொண்டாடப்படுவதே கார்மேல் அன்னைத் திருவிழா* மாதாவின் தேரை இழுப்பவர்களுக்கும், பாதை யாத்திரையாக செல்பவர்களுக்கும்,மாதா சொரூபங்களுக்கு புடவை கட்டுபவர்களுக்கும்,தங்க நகை செலுத்துபவர்களுக்கும்,மொட்டை போடுபவர்களுக்கும், நரகம் இல்லை என்ற வாக்குறுதியை நம் மாதா வழங்கவில்லை. *உத்திரியம் அணிந்தவர்களாய் மரிப்பவர்களுக்கே நரகம் இல்லை* என்ற வாக்குறுதியை கார்மேல் மாதா தந்துள்ளார்கள். நாம் விரும்பி செய்யும் பக்திமுயற்சிகளை மாதாவிற்கு செய்வது பாவம் அல்ல, ஆனால் தன் பக்தர்களிடம் மாதா கேட்டுக்கொண்ட பக்தி முயற்சிகளை பின்பற்றாமல் (உத்தரியம் அணியாமல்) நாம் விரும்பி செய்யும், *ஆன்மப்பலன் இல்லாத, காரிய பக்தி முயற்சிகளில் மட்டும் ஈடுப்படுவது மிகப் பெரிய தவறு.* இதனையே, *நமது இரட்சிப்புக்கு / மோட்சம் செல்வதற்கு பயன்படாத, மாதாவின் பக்தி முயற்சிகள் அலகையால் புகுத்தப்பட்ட போலி பக்தி முயற்சிகள்* என புனித லூயிஸ் மரிய மான்ட்போர்ட் பகிரங்கமாக எச்சரிக்கின்றார். மாதா மீதான நம் அன்பின் எ...

நாம் மாதாவின் உண்மை பக்தர்களா ? காரிய பக்தர்களா ?

Image
உத்தரியம் அணிந்தவர்களாய் மரிப்பவர்களுக்கு நரகம் இல்லை. தேவமாதா. அர்ச்.சைமன் ஸ்டாக்கிடம் கூறியது. Whosoever shall die wearing my Scapular shall not suffer the flames of Hell." -Our Lady of Mount Carmel மாதா சொரூபங்ளுக்கு புடவைகள் கட்டுவோம். மாதா கோவிலில் மொட்டை போடுவோம்.- ஆனால் உத்தரியம் மட்டும் அணியமாட்டோம. மாதா கேட்டுக்கொண்ட *ஆன்ம மீட்புக்கான* பக்தி முயற்சிகளை பின்ப்பற்ற மாட்டோம். நாம் விரும்புகின்ற *மீட்பிற்கு அவசியமில்லாத காரியப்பக்தி முயற்சிகளை* விரும்பி செய்வோம். *மீட்புக்கு உதவாத,இரட்சிப்பிற்கு பயன்ப்படாத, மாதா மீதுள்ள  பக்திமுயற்சிகள், அலகையால் புகுத்தப்பட்டவை.*என அர்ச்.லூயிஸ் மரிய மான்ட்போர்ட் எச்சரித்திருந்தாலும் நாம் கேட்கப்போவதில்லை.காரணம் இந்நாட்களில் நரகத்தைப்பற்றி விழிப்புணர்வு இல்லை.பயம் இல்லை.ஏன் நரகமே இல்லை, அலகையே இல்லை என நம் ஆண்டவர் கிறிஸ்துவுக்கு எதிரான நவீன கிறிஸ்தவர்களாகிவிட்டோம். நாம், நரகம் செல்லாமல் ,மோட்சம் செல்லவேண்டுமென்றே கிறிஸ்து கல்வாரியில்  மரித்தார் என்று தெரிந்திருந்தும்,அடிப்படை கத்தோலிக்க விசுவாச சத்தியமான *நரகத்தை*  முழுமையாக இந்நாளில...

தந்தையின் ஆசி குடும்பங்களை நிலை நாட்டும்.

Image
தன் தந்தையை மதிக்கிறவன் பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவான். அவன் வேண்டுதலும் கேட்கப்படும். செயலிலும் சொல்லிலும் பொறுமையிலும் உன் தந்தைக்கு மரியாதை செய். அதனால் உனக்கு அவனுடைய ஆசி கிடைக்கும். அவன் ஆசியும் உன் வாழ்நாள் வரை உன்னோடு இருக்கும். தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலை நாட்டும். சீராக் ஆகமம் 3 - 6/8-9. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க அர்ச். சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  Many measuring the commandments of God by their own weakness, not by the strength of the saints, hold these commands for impossible....But it must be understood that Christ enjoins not impossibilities but perfection. -St. Jerome.  புனிதர்களின் பலத்தையும், முன்மாதிரியை பின்பற்றாமல் பலர் கடவுளின் கட்டளைகளை பின்ப்பற்றுவது சாத்தியமற்றது  என்று  தங்கள் பலவீனத்தால் அளவிடுகிறார்கள்,   ஆனால் கிறிஸ்து சாத்தியமற்றதை அல்ல,சாத்தியமானதையே கட்டளையிடுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  -அர்ச்.  ஜெரோம். சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உங்கள் கையில் எப்போதும் ஒரு புனிதமான புத்தகத்தை வைத்திருக்க முயற்சி செய்யுங்கள், இந்த கேடயத்தின் மூலம் நீங்கள் கெட்ட எண்ணங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.  - அர்ச். ஜெரோம். Endeavor to have always in your hand a pious book, that with this shield you may defend yourself against bad thoughts. — St. Jerome. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தாயின் சாபம்

Image
  தாயின் சாபம் பிள்ளைகளுடைய குடும்பங்களின் அடித்தளத்தைப் பிடுங்கி விடும். தன் தாயை மனம் நோகச் செய்கிறவன் கடவுளால் சபிக்கப்பட்டவன். சீராக் ஆகமம் 3-11/18 . இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தெய்வ பயமுள்ளவன் தாய் தந்தையரை மதிக்கிறான்

Image
  தன் தாயை மதிக்கிறவன் செல்வங்களைச் சேர்த்தவன் போல வாழ்வான். தன் தந்தையை மதிக்கிறவன் பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவான். அவன் வேண்டுதலும் கேட்கப்படும். தெய்வ பயமுள்ளவன் தாய் தந்தையரை மதிக்கிறான்; தன்னைப் பெற்றவர்களுக்குத் தலைவர்களுக்குச் செய்வது போல் ஊழியம் செய்வான். சீராக் ஆகமம் 3(5-8) இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  மனிதர்களுடைய சாதனைகளுக்காக வழிபாட்டு முறைகளில் ஒலிக்கும் கைதட்டல்களால், வழிபாட்டிற்க்கான முதன்மையான நோக்கம் முற்றிலும் மறைந்து, மதப்பொழுதுபோக்காக வழிபாடுகள் மாற்றப்பட்டதற்க்கான  உறுதியான அறிகுறியாகும். திருத்தந்தை பெனடிக்ட் XVI. Wherever applause breaks out in the liturgy because of some human achievement, it is a sure sign that the essence of liturgy has totally disappeared and been replaced by a kind of religious entertainment. Pope Benedict XVI. (The Spirit of the Liturgy) . இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நமக்கு பெரிய நன்மை தராத எதையும் கடவுள் ஒருபோதும் நமக்கு அனுமதிப்பதில்லை.  உங்களைச் சுற்றி வீசும் புயல்கள், கடவுளின் மகிமைக்காகவும், உங்கள் சொந்த தகுதிக்காகவும், பல ஆன்மாக்களின் நன்மைகளாகவும் மாறும்.  - புனித பத்ரே பியோ God will never permit anything to happen to us that is not for our greater good. The storms that are raging around you will turn out to be for God's glory, your own merit, and the good of many souls. - St. Padre Pio. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கடவுளை நேசிப்பவன் செய்யவேண்டியது என்ன ? ?

Image
  கடவுளை நேசிக்கிறவன் தன் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்வதல்லாமலும் அவைகளை விலக்குவான்; ஆதலால் அவன் மன்றாட்டும் கேட்கப்படும். சீராக் ஆகமம் 3:4. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மோட்சத்தில் நாம் சேர்ந்திருக்க முடியாது..!

Image
  *மோட்சத்தில் நாம் சேர்ந்திருக்க முடியாது..!* ஒரு சமயம் பங்குக் குருக்களின் பாதுகாவலரான அர்ச். ஜான் மரிய வியான்னியாரை புராட்டஸ்ட்டாண்ட் மனிதர் ஒருவர் சந்திக்க வந்தார். அவர் பதித மதத்தவர் என்பதை அறியாத புனித குரு, தமது வழக்கம் போல் நமதாண்டவரைப் பற்றியும் அர்ச்சிஷ்டவர்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். சந்திப்பு முடிந்தது. புறப்பட எழுந்த அந்த நபரிடம் அவரது வருகையின் நினைவாக ஒரு சிறு பதக்கத்தை (Medal) வழங்கினார். அதளை பெற்றுக் கொண்ட அந்த புராட்டஸ்டாண்ட் நபர் "தந்தையே, உங்கள் கருத்தின்படி பதிதனான என்னிடம் பதக்கதை கொடுத்துள்ளீர்கனே ஆனால், நாம் ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக இல்லாவிட்டாலும், ஒருநாள் நாம் இருவரும், மோட்சத்தில் இருப்போம் என்று நம்புகிறேன்" என்று கூறினான். உடனே அர்ச்சிஷ்டவர் அந்த மனிதனின் கரத்தைப் பிடித்தவாறு, ஊடுறுவும் பார்வையால் அவரை கூர்ந்து நோக்கி, "ஐயோ! நண்பரே இந்த உலகில் சேர்ந்து ஒரே மதத்தைப் பின்பற்றாதவர்கள் மோட்சத்தில் சேர்ந்திருக்க முடியாது. மரம் எங்கே விழுகிறதோ அந்தப்பக்கம் தான் சாயும். "என்று இரக்கத்தோடு பதிலளித்தார். உடனே "ஆனால், தந்தையே” ...