Posts

Showing posts from October, 2023

செபமாலையின் 15 வாக்குறுதிகள் - தேவமாதா

Image
 *செபமாலை வணக்க மாதம்* *செபமாலை செபிப்பவர்களுக்கு மாதாவின் 15 வாக்குறுதிகள்!* நம் பரிசுத்த தேவ மாதா புனித தோமினிக் மற்றும் முத்த.ஆலன் ரோச் வழியாக வாக்களித்த செபமாலையின் 15 வாக்குறுதிகள். 1. செபமாலை செபிப்பவர்கள் எனது மக்கள். எனது ஒரே மகன் இயேசுவின் சகோதர சகோதரிகளாயிருப்பர். 2. செபமாலை செபித்து அதன் வழியாக நீங்கள் கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வீர்கள். 3. செபமாலையின் மீது பக்தியுள்ள ஆன்மாக்களை உத்தரிக்கிற நிலையில் வேதனையினின்று மீட்பேன். 4. செபமாலையை உண்மையுடன் செபிப்பவர் இவ்வுலக வாழ்விலும், இறக்கின்ற வேளையிலும் இறைவனின் ஒளியையும், அவரது திருவருளின் பெருக்கினையும் அடைவர்.இறக்கும் வேளையில் விண்ணகத்தில் தூயோர் துய்க்கும் பேரின்பத்திலும் பங்கு பெறுவர். 5. மறை உண்மைகளை சிந்தித்துப் பக்திப் பற்றுடன் செபமாலை செபிப்பவன் அகால மரணத்திற்கு ஆளாக மாட்டான். இறைவன் அவனைத் தண்டிக்க மாட்டார். அருள் நிலையில் வாழ்ந்து விண்ணக வாழ்விற்குத் தகுதி பெறுவான். 6. செபமாலை செபிப்பவர் பரிசுத்த வாழ்விலும், நற்செயல்களிலும் வளர்வர். செபமாலை உலகப் பற்றுதல்களிலிருந்தும், அதன் நிலையற்ற பொருள்களிலிருந்தும் ஆன்மாவை விடுவ...

15 PROMISES OF THE BLESSED VIRGIN TO CHRISTIANS WHO FAITHFULLY PRAY THE ROSARY.

Image
15 PROMISES OF THE BLESSED VIRGIN TO CHRISTIANS WHO FAITHFULLY PRAY THE ROSARY. 1. Those who faithfully serve me by the recitation of the Rosary shall receive signal graces. 2. I promise my special protection and the greatest graces to all those who shall recite the Rosary. 3. The Rosary shall be a powerful armor against hell. It will destroy vice, decrease sin, and defeat heresies. 4. The recitation of the Rosary will cause virtue and good works to flourish. It will obtain for souls the abundant mercy of God. It will withdraw the hearts of men from the love of the world and its vanities, and will lift them to the desire of eternal things. Oh, that souls would sanctify themselves by this means. 5. The soul which recommends itself to me by the recitation of the Rosary shall not perish. 6. Those who recite my Rosary devoutly, applying themselves to the consideration of its sacred mysteries, shall never be conquered by misfortune. In His justice, God will not chastise them; nor shall they...

பொன்மொழிகள்

Image
 #saynotoabortion கருக்கலைப்புக்கு எதிரான போராட்டம் கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையிலான இறுதிப் போரின் ஒரு பகுதியாகும்."   ராபர்ட் கார்டினல் சாரா The fight against abortion is part of the final battle between God and satan.”  Robert Cardinal Sarah. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஒரே மந்தையும் ஒரே ஆயரும் யோவான் (10-16) Part-3

Image
*பிரிவினை நண்பர்களுக்கு பொருள் தெரியாத வசனங்கள்-3* யோவான்19-26. இயேசு தம் தாயையும் அருகில் நின்ற *தம் அன்புச் சீடரையும்* கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். 19-27.பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். இயேசுவின் சீடருக்கும், அன்பு சீடருக்கும் உள்ள வித்தாயசமே மாதாவை ஏற்றுக்கொள்வதிலே உள்ளது. இயேசுவின் தாயை தனது தாயாக ஏற்றுக்கொள்பவன் இயேசுவின் அன்புசீடன். தனது தாயாக மாதாவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இயேசுவின் அன்பு சீடன் அல்ல. மாதாவை தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளிப்பவர் இயேசுவின் அன்புச் சீடன் .மாதாவை தம் வீட்டிலே ஏற்க்காதவர் இயேசுவின் அன்பு சீடனே அல்ல.  இதுவே வேதம். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஜெபமாலை புதுமைகள் -5

Image
  1978 ல் செபமாலை ஒரு கல்லூரிமாணவியை தொடர்கொலைகாரனிடமிருந்து காப்பாற்றியது. ஜனவரி 15 , 1978 , அதிகாலை 3:00 மணியளவில், இளம்பெண்களை தொடர்ச்சியாக கொலைகள் செய்து வந்த டெட் பண்டி என்னும் கொலைகாரன் புளோரிடா மாநில பல்கலைக்கழக சி ஒமேகா மகளிர்விடுதியில் இருமாணவிகளை கொலைசெய்துவிட்டு மேலும் கண்ணில் படும் மாணவிகளை கொலை செய்யும் எண்ணத்துடன் அடுத்த அறைகளுக்கு போனான். பந்துமட்டையை ஆயுதமாக எடுத்துக்கொண்டு மூன்றாவது மாணவியின் அறைக்கு சென்றபோது, அம்மாணவி தனது கைகளில் செபமாலையை இருக்கபற்றிக்கொண்டு உறங்குவதைக் கண்டதும் ஆயுதத்தை கீழே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டான். இச்சம்பவங்களுக்குபிறகு, அந்த மாணவி விசாரணையின் போது அதிகாரிகளிடம், தான் தனது பாட்டிக்கு கல்லூரியில் சேருவதற்கு முன்னர் ஒவ்வொருநாள் இரவும் மறக்காமல் அவளது பாதுகாப்பிற்காக செபமாலை செபிப்பதாக வாக்குறுதி அளித்திருந்ததாகவும், சில சமயங்களில் செபமாலை செபிக்கும்போது அப்படியே உறங்கிப் போய்விடுவதாகவும் கூறினாள். அந்த இரவிலும் தான் செபித்துக்கொண்டிருக்கும் போதே செபமாலையை கைகளில் பிடித்துக்கொண்டே உறங்கிவிட்டதாகவும் அந்த சமயத்தில் தான் கொலைகாரன் அவள...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  திருச்சபையின் அங்கீகாரம் பெற்ற பக்தி முயற்சிகளில் ஜெபமாலையை போல் இவ்வளவு அதிக அற்புதங்களை வேறெந்த பக்தி முயற்சியும் நிகழ்த்தவில்லை"  -திருதந்தை 9-ஆம் பத்தி நாதர். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஜெபமாலை புதுமைகள் -4

Image
ஜெபமாலை புதுமைகள் - 4 *1986-ல் நமது தேவதாயின் செபமாலை பிலிப்பைன்சின் சர்வாதிகார மார்கோஸ் ஆட்சியை வீழ்த்தியது.* பிலிப்பைன்சின் மக்கள் ஏழ்மையிலும் பசியிலும் வாடும்போது, நாட்டின் குடியரசுத்தலைவர் மார்க்கோசும் அவரது மனைவி இமெல்டாவும் ஊதாரித்தனமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்தநாள்களில் மக்கள் பல்வேறு விதமாக இமெல்டாவின் சொகுசு வாழ்க்கை குறித்து கருத்துத்துக்கள் தெரிவித்து வந்தனர். மக்கள் தங்களுக்கு புதிய குடியரசுத்தலைவராக திரு. பெனிக்னோ அகுயினோ (நினோய்) அவர்களை தேர்ந்தெடுக்க விரும்பினர். ஆனால் அவர், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரின் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலைக்குப்பிறகு நினோய் அவர்களின் மனைவி திருமதி கோரோஸன் "கோரி" அகுயினோ மார்க்கோசின் ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தார். மக்கள், கோரி அவர்களை குடியரசுத்தலைவராக வேண்டுமென்று வலியுறுத்தி ஒரு லட்சம் கையெழுத்துக்களை சேகரித்து அவரிடம் ஒப்படைத்தனர்.  பெப்ரவரி 7, 1986 அன்று நடந்த தேர்தல், வன்முறைகளால் இரத்தக்களரி படிந்து மோசடியில் முடிந்தது. குடியரசுத்தலைவர் மார்க்கோசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்...

ஜெபமாலை புதுமைகள் - 3

Image
  ஜெபமாலை புதுமைகள் - 3 1955 ஆம் ஆண்டு செபமாலை பக்தியானது ஆஸ்திரியாவை கம்யூனிஸ்ட் ஆட்சியிலிருந்து விடுவித்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் மூன்று ஆண்டுகள் ஆஸ்திரியா நாடு ரஷ்யா வின் கொடுங்கோலான கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களின் கீழ் கட்டுண்டு கிடந்தது.  அச்சமயத்தில், பெட்ருஸ் என்னும் பெயர் கொண்ட பிரான்சிஸ்கன் சபை குருவானவர், 16 ஆம் நூற்றாண்டில் மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்த கிறிஸ்துவர்களுக்கு மாமரித்தாயின் செபமாலை பக்தியானது துருக்கியர்களுடனான லேபண்டோ என்னுமிடத்தில் நடந்த போரில் எங்கனம் வெற்றியை ஈட்டித்தந்து என்பதனை நினைவு கூர்ந்து ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக செபமாலை சிலுவைப்போரை தொடுத்தார். 70000 மக்கள் ஆஸ்திரியாவினை ரஷ்யாவின் பிடியிலிருந்து மீட்க தினமும் செபமாலை செய்வோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு செபித்து வந்தனர்!!!!!!!!!!     ஆஸ்திரியாவானது மிக முக்கியமான போர் முக்கியத்துவம் வாய்ந்த தளமாகவும் இயற்கை வளம் மிகுந்த நாடாக இருந்தாலும், உலக நாடுகள் யாருமே எதிர்பார்க்காத முறையில் சோவியத் யூனியனானது மே 13 ,1955 நமது பாத்திமா அன்னை முதல் காட்சி கொடுத்...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  துக்கம் நமக்கு வரும்போது, நாம் ஆறுதல்களுக்காக காத்திருக்க வேண்டும், ஆறுதலுக்குப் பிறகு, நாம் மீண்டும் துக்கங்களுக்காக காத்திருக்க வேண்டும்.  புனித ஹிலாரியன் When sorrow comes to us, we must await consolations, but after the consolation, we must again await sorrows.” + St. Hilarion. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஜெபமாலை புதுமைகள் -2

Image
  *ஜெபமாலை புதுமைகள்* இரண்டாம் உலகப்போரின், 6 ஆகஸ்ட் 1945 அன்று அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது நாசகார அணுகுண்டுகளை வீசியது. ஹிரோஷிமாவில் மட்டும் 1,40,௦௦௦ மக்கள் அழிக்கப்பட்டனர் மற்றும் பலர் அணு கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டனர். அணுகுண்டு போடப்பட்ட இடத்திலிருந்து 1 கி மீ தொலைவில் (8 கட்டடங்களுக்கு அடுத்து) ஒரு வீடு மற்றும் கோவில் இருந்தது. அந்த கோவிலானது முழுமையாக சேதமடைந்தது. ஆனால், மிகவும் அதிசயிக்கத்தக்க விதத்தில் வீடும் அதில் இருந்து தினமும் நம்பிக்கையோடு பாத்திமா அன்னையிடம் ஜெபமாலை ஒப்புக்கொடுத்த ஜெர்மனியை சேர்ந்த எட்டு இயேசு சபை குருக்களும் அணுகுண்டு அழிவில் இருந்து பாதுகாக்கப்பட்டனர். இந்த எட்டு இயேசு சபை குருக்களும், போர் வீரர்கள் இல்லை.  ஜெர்மனியும் ஜப்பானும் போரில் நண்பர்களாக இருந்ததால் ஜப்பானில் மறைபரப்பு பணி செய்ய அனுமதிக்கப்பட்டு ஜெர்மனியில் இருந்து வந்து இயேசுவின் போதனைகளை ஜப்பான் மக்களுக்கு தினமும் அறிவித்து வந்தவர்கள். மிகவும் அதிசயிக்கத்தக்க விதத்தில் மிகவும் சிறிய காயங்களுடன், கதிரியக்க பாதிப்புக்கள் எதுவும்  இல்லாமல், பார்வைக்கோ...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மாதாவிடம் விசேஷ பக்தி இல்லாதவர்களின் இரட்சிப்பைப் பற்றி எனக்கு மிகுந்த சந்தேகம் உள்ளது."   - புனித பிரான்சிஸ் போர்கியா "I have great doubts about the salvation of those who do not have special devotion to Mary."  - St. Francis Borgia. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  ஜெபமாலை சிலருக்கு குருட்டாட்டம்,எனக்கோ இதுவே ஞானம்,உலகப்படிப்பினால் மெய்ஞானம் அடையமுடியாது ஆனால் ஜெபமாலையால்  இணையற்ற பலனை பெறமுடியும். விஞ்ஞானி லூயிபாஸ்டர் நூண்ணுயிரியலின் தந்தை. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உண்டாலும், குடித்தாலும், அமர்ந்தாலும், சேவை செய்தாலும், பயணம் செய்தாலும், எதைச் செய்தாலும், 'ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே, கடவுளின் மகனே, பாவியான எனக்கு இரங்கும்' என்று இடையறாது கூறுவது அவசியம்.  - புனித ஜான் கிறிசோஸ்டம் It is necessary for everyone whether eating, drinking, sitting, serving, travelling or doing anything, to unceasingly say 'Lord Jesus Christ, Son of God, have mercy on me a sinner'  - St John Chrysostom சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நற்கருணையை நாவில் பெறுவோம்

Image
  மிகவும் நயவஞ்சகமான கொடூரமான தாக்குதல் நற்கருணை மீதுள்ள நம்பிக்கையை அணைக்க முயற்சிப்பதில், பிழைகளை விதைப்பதன் மூலமும், அதைப் பெறுவதற்கான பொருத்தமற்ற வழியை ஆதரளிப்பதும கர்தினால் சாரா. The most insidious diabolical attack consists in trying to extinguish faith in the Eucharist, sowing errors and favouring an unsuitable manner of receiving it. Cardinal Sarah. திவ்விய நற்கருணை ஆண்டவரை அவமரியாதை செய்ய பசாசு😈 வைக்கும் கண்ணிகளை கண்டறிந்து விலகுவது ஒவ்வொரு கத்தோலிக்கர்களின் கடமை. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஒரே மந்தையும் ஒரே ஆயரும் யோவான் (10-16) Part-2

Image
  *பிரிவினை நண்பர்களுக்கு பொருள் தெரியாத வசனங்கள்-2* விவிலியம் மட்டும் போதும் என்று தவறான கொள்கையை பின்பற்றும் பிரிவினை நண்பர்களுக்கு, வாய்மொழியாக வந்த அப்போஸ்தலிக்க பாரம்பரியமும் அவசியம் என்று பதில் தரும் புனித பவுல்.  வாய்மொழியாக அறிவிக்கப்பட்ட  முறைமைகளையும் பின்பற்றும் ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை. அவைகள் விவிலியத்தில் இல்லாதவை என எதிர்கும் சபைகள் கிறிஸ்துவுக்கு எதிரான போலி சபைகள். அன்பர்களே! எங்கள் *வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ* அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக் கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள்.⒫ 2 தெசலோனிக்கர்2-15. 15 So then, brothers and sisters, stand firm and hold fast to the teachings we passed on to you, *whether by word of mouth or by letter* 2 Thessalonians 2:15 *தெருவுக்கு ஒரு சபை ஆளுக்கொரு கொள்கை* சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கத்தோலிக்க திருச்சபையின் நோக்கம் புனிதர்களை உருவாக்குவதே.  புனித குழந்தை தெரேசம்மாள். THE PURPOSE OF THE CATHOLIC CHURCH IS TO MAKE SAINTS." -ST. THERESE OF LISIEUX. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இந்த உலகில் காணக்கூடிய அனைத்தும் ஒரு வானதூதரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன."  - புனித அகஸ்டின் "Every visible thing in this world is put in the charge of an angel."  - St. Augustine. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.