Posts

Showing posts from December, 2024

கற்புள்ள குடும்ப வாழ்க்கை சம்மனசுக்களால் காக்கப்படுகின்றது.

Image
  திருமணமான தம்பதியர்களின் கற்புள்ள குடும்ப வாழ்க்கை சம்மனசுக்களால் காக்கப்படுகின்றது.இக்குடும்பத்திலிருந்து நல்ல குழந்தைகள் வருகிறார்கள்.தங்கள் பெற்றொரின் புண்ணியங்களைத் தங்கள் வாழ்க்கையின் சட்டமாக இக்குழந்தைகள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இப்போதோ குழந்தைகள் வேண்டாதவர்கள் ஆகிவிட்டார்கள்.கற்பும் கடைப்பிடிக்க முடியாதாகிவிட்டது.அன்பும் திருமணமும் அவசங்கைப்பட்டுவிட்டன. இயேசு கடவுள் மனித காவியம்.

ஏன் கடவுள், மனிதன் ஆனார்? -2

Image
  *ஏன் கடவுள், மனிதன் ஆனார்? -2* கடவுளுக்கு நேர்ச்சையாக, காணிக்கையாக,நன்றியாக ஆடு,மாடு,கோழிகளை பலிக்கொடுப்பது ஆதிமுதல் இருந்த வந்த மனித பக்தி முயற்சியின் வெளிப்பாடாக இருக்கின்றது. ஆனால் முதல் மனிதன் முதல் கடைசி மனிதன் வரை செய்த பாவங்கள்,இனிச் செய்யபோகின்ற பாவங்களால் நோகடிக்கப்பட்ட கடவுளை ஆறுதல்படுத்தவும்,கடவுளின் கோபத்தை தனிப்பதற்காகவும்,ஒட்டு மொத்த மனித குலம் செய்த பாவத்திற்கு ஈடாக பரிகாரம் செய்வதற்காகவும், ஒரு பரிசுத்த பலி தேவைப்படுகின்றது. மனித குலம் பரிசுத்தத்தை இழந்துபோனதால், கடவுள் மனுகுலத்தை மீட்பதற்கு கடவுள் என்ற நிலையில் இல்லாமல் மனித பலியை  நிறைவேற்ற  கடவுளே கன்னி மரியாயிடம் மனிதனாக பிறந்தார்.ஏனெனில் கடவுள் அரூபியாக இருப்பதால் அவரை பலிக்கொடுக்க இயலாது.காயப்படுத்த சரீரமும், பாவ பரிகாரமாக சிந்துவதற்கு இரத்தமும், கொடூரமான உயிரைதந்து மீட்க பரிசுத்த மனிதபலி தேவைப்படுகின்றது. எனவே *கடவுளின் மனித அவதாரமும் கட்டாயாமகின்றது.* பரிசுத்த பரம திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய *கடவுளே மனித அவதாரம் எடுத்தார்.* ஒவ்வொரு மனிதனின் பாவத்திற்கு பரிகாரமாக ஆட்டுகுட்டிப்போல தன்னையே பலியா...

ஏன் கடவுள், மனிதன் ஆனார்?

Image
 *ஏன் கடவுள், மனிதன் ஆனார்?* பாவம் கொடியது, அப்பாவத்தால் நீதியுள்ள தேவனுக்கு ஏற்படும் காயமும் நிந்தையும் கொடியது. தேவநீதியோ அளவற்றது. அதற்கு ஏற்பட்ட பங்கம் நீங்க வேண்டுமானால், அதற்கு உரிய பரிகாரமும் அளவற்றதாயிருக்க வேண்டும். அற்ப மனிதனர்களாகிய நமக்கு அத்தகைய பரிகாரத்தைச் செய்ய வல்லமையில்லை! அதனால் தான் பரிசுத்த பரம திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய கடவுள், நமக்காக இப்பரிகாரத்தைச் செய்ய முன் வந்தார்.  ஈன மனிதர்களாகிய நம் மனுஷீகம் தெய்வீகப் பேரின்பக் கடவுளின் தெய்வீகத்தில் அடங்கி, நித்திய சமாதான நிலையை அடைவதையே நாம் பரலோகப் பேரின்பம் என்கிறோம். அதாவது ஒரு விதத்தில் மனுஷீகம் தெய்வீகத்தில் பங்கடைய வேண்டும். இந்த உரிமையை மனிதர்களுக்குத் தர விரும்பிய தெய்வீகம் நமது மனுஷீகத்தோடு கலந்து கொள்ள விரும்பியது. மனிதன் தானாக மேலேறி தெய்வீகத்தோடு சமாதானமடைய முடியாது என்பதால், தேவனே கீழிறங்கி மனிதன் ஆனார்; மனுஷீகத்தை உயர்த்திப் புனிதப்படுத்தினார்; அதன் மீது தெய்வீக வரப்பிரசாதத்தைப் பொழிந்தார்; அதைத் தெய்வீகத்தில் பங்கடையவும் வைத்தார். இதற்காகத்தான் கடவுள் மனிதனானார். இந்த உண்மையை அறிந்த...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இயேசு இல்லாமல் உலகம் உங்களுக்கு என்ன வழங்க முடியும்? இயேசு இல்லாமல் இருப்பது நரக வேதனையானது; இயேசுவோடு இருப்பது பரலோகத்தின் இனிமையை அறிவதாகும். இயேசு உங்களோடு இருந்தால், எந்த எதிரியும் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாது. இயேசுவைக் கண்டடைகிறவன், வளமான பொக்கிஷத்தைக் கண்டடைகிறான், இயேசுவை இழந்தவன் முழு உலகத்தையும் இழக்கிறான். தாமஸ் கெம்பீஸ் What can the world offer you, without Jesus? To be without Jesus is hell most grievous; to be with Jesus is to know the sweetness of heaven. If Jesus is with you, no enemy can harm you. Whoever finds Jesus, finds a rich treasure, He who loses Jesus, loses the whole world. Thomas kempis. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  என் கண்ணாடி மாதாவாக இருக்க வேண்டும். நான் அவளுடைய மகள் என்பதால், நான் அவளைப் போலவே இருக்க வேண்டும், அதனால் நான் இயேசுவைப் போல இருப்பேன்.  ஆண்டிஸின் புனித தெரசா. My mirror must be Mary. Since I am her daughter, I must look like her, and thus I will look like Jesus.” Saint Teresa of the Andes. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
ஒரு ஆன்மீக வீரன் அச்சமற்ற இதயத்துடனும், தலை நிமிர்ந்து சோதனையை எதிர்ப்பதைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பிசாசு😈 தைரியத்தையும் சக்தியையும் முழுவதுமாக இழந்துவிடுகிறான்.   -புனித. இக்னேஷியஸ் Usually the devil totally loses courage and power every time he sees a spiritual athlete resist temptations with a fearless heart and a head held high.   -St. Ignatius. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இந்த பூமி நாம் புண்ணியத்தைப் பெறக்கூடிய இடம்; எனவே அது ஓய்வெடுக்கும் இடம் அல்ல, உழைப்பு மற்றும் துன்பங்கள் நிறைந்த இடம்; பொறுமையின் மூலம் நாம் மோட்சத்தின் மகிமையைப் பெறுவதற்காகக் கடவுள் நம்மை இங்கு வாழ வைக்கிறார்.   -புனித. அல்போன்சஸ் This earth is a place where we can gain merit; therefore it is not a place of rest, but of labours and sufferings; and it is for this end that God makes us live here, that by patience we may obtain the glory of paradise.  -St. Alphonsus. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  "அன்னை மரியாவிடம் உண்மை பக்தி கொண்டவர்கள் அந்திக்கிறிஸ்துவை தோற்கடிக்கும் கருவியாக இருப்பார்கள்."  - புனித லூயிஸ் மரிய  மான்ட்ஃபோர்ட் - "Those who are specially devoted to Mary will be instrumental in defeating the Antichrist." - St. Louis de Montfort . இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தன்னைத் தாழ்த்திக்கொள்ளாத எந்த மனிதனும்  பெரிதாக எதையும் கண்டு பிடிக்க முடியாது. பேராயர் புல்டன் ஸீன். No man discovers anything big if he does not make himself small. Bishop fultonsheen. இயேசுவுககே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
திருச்சபையை ஒருபோதும் வீழ்த்த முடியாது. உண்மையில் அது துன்புறுத்தலால் வளர்கிறது, அதைத் தாக்குபவர்கள் அழிக்கப்படுகிறார்கள்.   -புனித. தாமஸ் அக்வினாஸ் The Church can never be brought down. Indeed it grows under persecution, and those who attack it are destroyed.  -St. Thomas Aquinas. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பூமி மனிதனின் பயிற்சி மைதானம், மோட்சமே அவனது கிரீடம். புனித. அம்புரோஸ் Earth is man's training ground, heaven his crown. -St. Ambrose. சேசுவுககே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.