Posts

Showing posts from March, 2024

ஈஸ்டர்‌ வாழ்த்துக்கள்

Image
  கடவுள் மனித அவதாரம் எடுக்காமல், கடவுளாக மட்டுமே  இருந்திருந்தால் நம்மை மனிதர்களாகப் படைத்ததற்காகவும், சுவாசிக்க காற்றும், உண்ண உனவும்,பூலோகம் முழுவதையும் ஆளும் அதிகாரத்தை மனிதர்களுக்கு தந்தற்க்காகவே கடவுளை நேசிக்கவும், அன்பு செய்யவும் நாம் கடமைப்பட்டிருகின்றோம். ஆனால் கடவுள் நமது கற்பனைக்கு எட்டாத வகையில் மனித அவதாரம் எடுத்து,நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய பாடுகள்பட்டு,கொடூரமாக மரித்து, உயிர்த்துள்ளார் என்ற தெய்வீக இரகசியங்களை அறிந்த கத்தோலிக்கர்களாகிய நாம் ஒவ்வொருவரும்,பாவங்களை முழுவதுமாக தவிர்த்து, புண்ணியங்களை செய்வது, நமது கட்டாயமாக இருக்கின்றது.கிறிஸ்து மரித்து, திறந்துவைத்துள்ள மோட்சத்திற்குள் நுழைவதே நமது முதன்மையான ஞான அலுவலாக இருக்கின்றது. Happy Easter. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரிசுத்த கன்னிகையின் வியாகுலப்புலம்பல்கள்

Image
  *பரிசுத்த கன்னிகையின் வியாகுலப்புலம்பல்கள்* கடவுள் மனித காவியத்திலருந்து... "உமது இருதயத்தை ஒரு வாள் ஊடுருவும்" என்று சிமியோன் கூறினார். ஒரு வாளா? அது வாள்களின் ஒரு கூட்டம்! எத்தனை காயங்களை அவர்கள் உம்மீது ஏற்படுத்தினார்கள், மகனே!எத்தனை தடவை நீர் முனகினீர் ! எத்தனை தடவை தசைச்சுரிப்பு வேதனைகளை நீர் அனுபவித்தீர்? எத்தனை இரத்தத்துளிகளை நீர் சிந்தினீர்? அவை ஒவ்வொன்றும் என்னில் ஒரு வாளாக இருந்தன. என்னில் ஊடுருவப்பட்டுள்ள துயர வாள்களின் ஒரு கூட்டத்தினுள் நான் இருக்கிறேன். உம் மீது புண்ணில்லாத ஒரு தோல்பகுதி கூட இல்லை. என்னிலோ துளைக்கப்படாததென்று எதுவுமில்லை. அவை என் மாமிசத்தைக் குத்தித்துளைத்தன, என் இருதயத்தை ஊடுருவின. முட்களின் வளையம் இதோ இருக்கிறது. என்னால் அதை உணர முடிகிறது. அது என் இருதயத்தை நசுக்கி, அதை ஊடுருவுகிற தளைக்கட்டாக இருக்கிறது. ஆணிகளின் துவாரம் இதோ:அவை என் இருதயத்தில் குத்தப்பட்ட மூன்று குத்துவாள்கள்! ஓ! அந்த அடிகள்! அந்த அடிகள்! சர்வேசுரனின் மாமிசத்தின் மீது விழுந்த தேவத் துரோகமான அந்த அடிகளின் காரணமாகப் பரலோகம் நொறுங்கிப் போகாதிருந்தது எப்படி? திரும்பி வாரும், என்...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கத்தோலிக்க திருச்சபை,  அப்போஸ்தலரிடமிருந்தும், பிதாக்களிடமிருந்தும்,பல்வேறு சங்கங்களிலிருந்தும் பெற்றுக்கொண்ட சத்தியங்களுக்கு விரோதமாக யாராவது உங்களுக்குப் பிரசங்கித்தால், அவர்களுக்குச் செவிசாய்க்காதீர்கள். ஏவாள் செய்ததைப் போல, பாம்பின் அறிவுரையைப் பெறாதீர்கள்.    புனித டமாஸ்சீன் அருளப்பர். If any one preach to you something contrary to what the Holy Catholic Church has received from the holy Apostles and fathers and councils, do not heed him. Do not receive the serpent's counsel, as Eve did, to whom it was death."  - St. John Damascene. இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பாவத்தை கைவிட விரும்பும் ஆன்மாக்களையும், அருள் நிலையில் உள்ளவர்களையும் மட்டுமே பிசாசு சோதிக்கிறது.  மற்றவர்கள் அவனுக்கே உரியவர்கள்: அவன் அவர்களைச் சோதிக்க வேண்டிய அவசியமில்லை.  - புனித ஜான் மரிய வியானி. The devil only tempts those souls that wish to abandon sin and those that are in a state of grace. The others belong to him: he has no need to tempt them. - St. John Vianney. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பர்  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
புனித சூசையரப்பரின் புனிதத்தை மதிப்பிடுவதற்கு, இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு தந்தையின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக அவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதே போதுமானது."   - புனித அல்போன்சஸ் In order to assess the sanctity of Saint Joseph, it would be sufficient to know that he was elected by God in order to fulfill the duties of a father towards Jesus Christ."  - St. Alphonsus. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஆன்மாவின் உயிர் மூச்சு செபம்;  செபம்  இல்லாமல் புனித வாழ்க்கை (பாவம் செய்யாத) சாத்தியமற்றது."  - புனித அன்னை தெரசா “Prayer is the breath of life to our soul; holiness is impossible without it.” -St Teresa of Calcutta. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பிரபஞ்சத்தின் அரசரும், ஆண்டவருமான தேவ திருச்சுதன், மனிதன் தன் பாவத்தால் நித்திய மரணத்திற்கு தகுதி பெற்று விட்டதையும், தன்னை தானே இரட்சித்துக்கொள்ள வல்லமையற்றிருப்பதையும் கண்டு,அவனை மீட்டு இரட்சிக்கும் பொறுப்பைத் தம் மீது சுமந்துக்கொண்டார். அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மனத்தைரியத்துடன் பாவசங்கீர்த்தனம் செய்ய போங்கள்.

Image
  *மனத்தைரியத்துடன் பாவசங்கீர்த்தனம் செய்ய போங்கள்* கடைசியாக எப்பொழுது நீங்கள் பாவசங்கீர்த்தனம் செய்தீர்கள்? எல்லாரும் சற்று அதை பற்றி சிந்தித்து பாப்போம். இரண்டு நாட்களுக்கு முன்பு? , இரண்டு வாரங்களுக்கு முன்பு? , இரண்டு வருடங்களுக்கு முன்பு? இருபது வருடங்களுக்கு முன்பு? நாற்பது வருடங்களுக்கு முன்பு? ஒவ்வொருவரும் உங்கள் மனசாட்சியை தட்டி கேளுங்கள். எப்போது நான் கடைசியாக பாவசங்கீர்த்தனம் செய்தேன்? இன்னொரு நாளை கடந்து விடாமல், தயவுசெய்து குருவிடம் செல்லுங்கள். அங்கு *இயேசுவே குருவானவர் வடிவில் இருக்கின்றார்.இயேசு குருவானவரை விட நல்லவர். குருவானவர் வடிவிலே இயேசுவே, பாவசங்கீர்த்த பேழையில் உங்களை வரவேற்கின்றார். உங்களை அன்புடன் அவர் வரவேற்கின்றார்.*  மனத்தைரியத்துடன் பாவசங்கீர்த்தனம் செய்ய போங்கள். திருத்தந்தை .பிரான்ஸிஸ். குருக்களிடமே பாவ அறிக்கை செய்து பாவ மன்னிப்பு பெற வேண்டும்.இந்த முறையை ஏற்படுத்தியது இயேசு கிறிஸ்துவே,வேத ஆதாராம் பின்வருமாறு. *பிரிவினை நண்பர்களுக்கு விளக்கம் கொடுக்க தெரியாத வசனங்கள்* "இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அன...