புனித ஸ்நாபக அருளப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

 




உண்மைக்கு சான்று பகர்வதே பணியாக கொண்டவரே ! 

அரசனாக இருந்தாலும் ஒரு மனைவி தான் வைத்திருக்க வேண்டும் என்ற ஆண்டவரின் கட்டளையை துணிந்து அறிவித்தவரே ! 

கருவிலேயே அர்ச்சிக்கப்பட்டவரே !


மெசியாவின் பிறப்பையும் இறைப்பையும்

முன் அறிவித்தவரே !

பெண்களிடம் பிறந்தவர்களுள் தலைசிறந்தவரே ! 

கிறிஸ்துவின் கல்வாரி திருஇரத்தத்தின் பேறுபலனை முன்னதாக பெற்றவரே !


மீட்பருக்கே ஞானஸ்நானம் வழங்க தகதியற்றவன் என்றவரே !

மீட்பர் வளர வேண்டும் நானோ குறைய வேண்டும் என்றவரே !

உண்மைக்காவும், நீதிக்காகவும் தலையையே தந்தவரே !

புனித ஸ்நாப அருளப்பரே !


பொய்கள் அதிகரித்து,கிறிஸ்துவின்

உண்மைகள் மறுக்கப்படும்

இக்காலக்கட்டத்தில்,

நாங்கள் துன்பங்களுக்கு அஞ்சாமல் 

உண்மையின்‌ குரலுக்கு என்றும் செவிக்கொடுக்கவும், சான்று பகிரவும் எங்களுக்காக மீட்பர் இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடும்..

புனித ஸ்நாபக அருளப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆமேன்.





Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!