இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா திருஇருதயத்தின் செய்திகள்
என் அருமை மகன்களே என்னுடைய கண்கள் வழியாக நீங்கள் பாருங்கள்.அப்போது தேவ ஆவியின் வல்லமை மிக்க செயலின் கீழ் திருச்சபை தன்னையே உள்ளரங்கமாய் புதுப்பித்துக் கொள்வதில் ஈடுபட்டுள்ளது என்பதை காண்பீர்கள்.
திருச்சபையை சுழந்திருக்கிற குளிர்ந்த அலட்சியத்தாலும் அதைச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிற பெரும் இருளினாலும் இப்புதுப்பித்தல் வெளிப்பார்வைக்கு தெரியவில்லை.தற்சமயம் திருச்சபையானது தன் சுத்திகரிப்பின் மிக வேதனையான சமயத்தைக கடந்துக்கொண்டிருக்கிறது.
தன் அன்னையால் தாங்கப்பட்டு,திருச்சபையானது கல்வாரி யின் கடினப் பாதையில் ஏறிச்சென்று கொண்டிருக்கிறது.அங்கே தன்னுடைய அநேக மகன்களின் நலனுக்காக அது மீண்டும் சிலுவையிலறையப்பட்டுப் பலியாக்கப்படும்.ஆனால் நீங்கள் என்னோடு திருச்சபையின் இருதயத்தினுள் வாருங்கள்.அங்கே என் மாசற்ற இருதயத்தின் வெற்றி ஏற்கனவே அடையப்பெற்றுவிட்டது.
சேசுவுக்கே புகழ் !
தேவமாதவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment