இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா திருஇருதயத்தின் செய்திகள்-7


 நான் மோட்சத்திலிருந்து வந்து உங்களிடம் கேட்க வந்த செபம்,செபமாலை. அதைக்கொண்டு நீங்கள் என் எதிரியின் சதித்திட்டங்களை திறந்துக்காட்ட முடியும்.அவனுடைய அநேக ஏமாற்றுகளிலிருந்து தப்ப முடியும்.உங்கள் பாதையில் பதிந்துள்ள ஆபத்துகளிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ளமுடியும்.உங்களை அது தீமைகளிலிருந்து காக்கிறது.என்னிடம் அதிக நெருக்கமாய் கொண்டு வருகிறது.உங்கள் வழிகாட்டியாகவும் பாதுகாப்பாகவும் என்னால் இருக்கமுடிகிறது.

கடந்த காலத்திலும் இக்கட்டான சந்தரப்பங்களிலும் நடந்தது போலவே இன்றும் என் சிறு குழந்தைகளே அடிக்கடி செபமாலை சொல்வதினால் உங்களிடமிருந்து எனக்கு வரும் சக்தியைக் கொண்டு திருச்சபையானது வெற்றி சூடும் அன்னையால் தற்காக்கப்படும்.

-தேவமாதா

அருள்நிறை மந்திரத்தின் பெருமை

வெறுப்போர் வாழ்வில் ஆன்மீக வறுமை

மூவொரு இறைவன் அருளிய வார்த்தை

மாமரி அன்னைக்கு பலம் தரும் வார்த்தை

செபமாலை என்பது ஏளனம் அல்ல

ஜெயம் தரும் மாலை உலகை வெல்ல

அன்னையில் துவக்கி ஏசுவில் முடிந்து

அலகையின் தலையை அடித்தே நொருக்கு. 

சேசுவுக்கே புகழ் !

தேவமாதவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!