தேவ ஞானத்திற்க்கு முன் அற்ப மனித அறிவு வெறும் பூச்சியமே
மனிதன் கடவுளை மறந்துவிட்டு தன்னுடைய கைம்மண்ணளவு அறிவைக் கொண்டே அவன் எல்லாவற்றையும் பார்க்கிறான்.அப்போது அர்ச்சிஷ்டவர்கள் முட்டாள்களாகவும்,வேதசாட்சிகள் மதவெறியர்களாகவும், துறவிகள்,ஊமைகளாகவும் தோன்றுகிறார்கள்.
பாவசங்கீர்தனம் குருக்களின் கண்டுப்பிடிப்பாகவும்,திவ்விய நற்கருணை அஞ்ஞானத்தின் அடையாளமாகவும்,மோட்சம் குழந்தைத்தனமான கற்பனையாகவும்,சத்தியம் கற்பனைத் தோற்றமாகவும் தோன்றுகின்றன.மிக அதிகமான காரியங்களை அறிந்திருப்பது நல்லதுதான் ஆனாலும் தேவ ஞானத்திற்க்கு முன் தன் அற்ப மனித அறிவு வெறும் பூச்சியமே என்பதைத் தன் மரண வேளையில்தான் ஒருவன் கண்டுகொள்வான் என்றால் அது எவ்வளவு பரிதாபமானது .
ஆயர் புல்டன் சீன்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment