புனிதர்களின் பொன்மொழிகள்
ஒருவன் கடவுளை நோகச்செய்யக் கூடாது என்று கருதி பாவத்தையும், பாவசந்தர்ப்பத்தையும் திட்டமாக விட்டுவிடும் தன்மையே *தெய்வபயமாகும்*.
தெய்வபயம் நம்மிடத்தில் நீடிப்பதற்கு பாவசந்தர்ப்பத்தை விலக்குவதில் உறுதியாக இருக்கவேண்டும். உதாரணமாக கெட்ட புத்தகத்தையோ, திரைப்படத்தையோ, கெட்ட நண்பனையோ நெருங்கமாட்டேன் என்று அவைகளிலிருந்து ஒதுங்கும் பழக்கத்தை திட மனதுடன் இருந்தால் மட்டுமே அவனிடம் *தெய்வபயம் நீடிக்கும்*.
இப்படிப்பட்ட பாவ சந்தர்ப்பங்கள்,முன்பு நம்முடைய பாவத்துக்குக் காரணமாயிருந்தன.ஆனால் அவைகளை விலக்கி விடும் திடமனம் ஏற்பட்டிருந்தால் மட்டுமே பாவ சந்தர்ப்பங்கள் இப்பொழுது நமக்கு தெய்வபயம் என்னும் *புண்ணிய சந்தரப்பங்களாக மாறும்*.
அர்ச.அவிலா தெரசம்மாள்.
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க!

Comments
Post a Comment