நோயில் பூசுதலும்,திருப்பலியும் கொரோனா நோயாளிகளுக்கு மறுக்கப்படுவது நியாயமா ? அன்பு ஆயர்களே குருக்களே! கொரோனா நோயாளிகளை மருத்துவர்களே தகுந்த முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகளுடன் குணப்படுத்த முயற்சிக்கும் போது.ஆன்மாவிற்கு தேவையான அவஸ்தை பூசுதல் எனும் திருவருட் சாதனத்தை நிறைவேற்றுவதில் ஏன் தங்களுக்கு இன்னும் தயக்கம்? மருத்துவர்களும் மனிதர்கள் தானே, உடல் அழியக்கூடாது என்கிற அவர்களுக்கு உள்ள ஆவல் ,ஆன்மா அழியக்கூடாது என்கிற நமது மீட்பரின் தாகம் அபிஷேகம் செய்யப்பட்ட தங்களுக்கு இல்லாமல் போனது ஏன் ? கொரோனா நோயால் இறந்த சடலங்களை துப்புரவு பணியாளர்களே தகுந்த முன்னெச்சரிக்கை நடவெடிக்கையுடன் Pack செய்துதரும் போது இறந்தவர்களுக்காக ஒரு பூசை வைப்பதில் ஏன் தங்களுக்கு அச்சம்?துப்புரவு பணியாளர்களும் மனிதர்கள் தானே நோய்பரவக்கூடாது என அவர்களே தகுந்த முறையில் சடலத்தை மூடி சவப்பெட்டியில் ஆணிகள் அடித்து தரும்போது பெட்டிக்குள் உள்ள சடலத்துக்கூட ஏன் தங்களால் ஒரு திருப்பலி நிறைவேற்ற மனம்வரவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு வாக்களிக்கும் உரிமையை நமது அரசாங்கம் செய்து தருகிறது.ஆனால் அதைவிட முக்கியமான கொரோன...