கிறிஸ்து நாதர் அனுசாரம்
தந்திர சோதனைகள் மனிதனுக்கு சங்கடமும் கஷ்டமுமாயிருந்த போதிலும் பலமுறை அவைகள் அவனுக்கு வெகு பிரயோசனமாயிருக்கின்றன.எப்படியெனில் அவைகளால் அவன் தாழ்த்தப்படுகிறான்.சுத்திகரிக்கப்படுகிறான்.நல்லுணர்ச்சியடைகிறான்.அர்ச்சிஷ்டவர்களெல்லாரும் பல உபத்திரவ இடுக்கண்களையும் தந்திர சோதனைகளையும் அனுபவித்து புண்ணியத்தில் விருத்தியடைந்தார்கள்.தந்திர சோதனைகளை எதிர்த்துப் போராடக் கூடாமற் போனவர்களோ பாவிகளாகி கெட்டு போனார்கள்.தந்திரங்களாவது துன்பங்களாவது இல்லாத அவ்வளவு பரிசுத்த சந்தியாசச் சபையும் கிடையாது.அவ்வளவு பத்திரமான ஒளிப்பிடமுங்கிடையாது.
கிறிஸ்து நாதர் அனுசாரம் 13-2
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment