இறைவனின் இறைவார்த்தைகள் 18/07/2019
எசாயா 51(12-13)
உங்களுக்கு ஆறுதல் வழங்குபவர்
நானே தான்!மடிந்து போகும் மனிதருக்கும் புல்லென மாயும் மானிடருக்கும் நீ அஞ்சுவது ஏன்?உன்னை உருவாக்கிய ஆண்டவரை நீ ஏன் மறந்துவிட்டாய் ?வானங்களை விரித்துப் பரப்பியவரும்,மண்ணுலகிற்கு அடித்தளமிட்டவரும்அவர் அன்றோ?
உன்னை ஒடுக்கி அழித்துவிட முயன்றவன் சீற்றத்தை முன்னிட்டு
நீ ஏன் எந்நாளும் ஓய்வின்றி நடுங்குகிறாய்?
நண்பர்களே! நமக்கு துணையாகவும்.ஆறுதலாகவும் இருப்பது நம் இறைவனே , அவருக்கு அச்சமடைவது சரியே அதை தவிர்த்து மனிதர்களை பார்த்தும் அவரது ஒடுக்குமுறைகளை பார்த்து அச்சமடைவது வீணே.படைத்தவர் மீது ஆழ்ந்த விசுவாசம் இருந்தால் படைத்தவர் படைத்த மனிதர்கள் நம்மை ஒடுக்கினாலும் இறக்கம் வருமே தவிர அச்சம் வராது.
Comments
Post a Comment