இறைவனின் இறைவார்த்தைகள் 24/07/2019
நம்மைப் பாதுகாக்கும் இறைவன்
திருப்பாடல் 91(1-3)
இறைவனினன் பாதுகாப்பில்
வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர்.ஆண்டவரை நோக்கி, “நீரே என் புகலிடம்; என் அரண்;நான் நம்பியிருக்கும் இறைவன்”என்று உரைப்பார்.
ஏனெனில், ஆண்டவர் உம்மை
வேடரின் கண்ணியினின்றும்
கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார்.
இறைவனின் பாதுகாப்பில்,நிழலில், அரவணைப்பில் வாழும் மனிதர்கள் இறைவனே வாழ்க்கை என்று வாழும்போது ,இறைவனே அவர்களை அரணாக பாதுகாகின்றார்.அவர்களை எதிர் வினைகளின் சுழ்ச்சியிலும், மனிதனின் நயவஞ்சக சதியிலிருந்தும் ,தீயசக்திகளின் கண்ணயிலிருந்தும்,உடலை வருத்தி உயிரை எடுக்கும் நோய்களிலிருந்தும் தப்புவிப்பார்.
Comments
Post a Comment