இறைவனின் இறைவார்த்தைகள் 06/07/2019
ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;
'ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். திருப்பாடல்கள் 92:13-15*
நண்பர்களே ! வற்றாத நீரூற்றின் அருகில் வளரும் மரம் நன்கு செழித்து வளர்ந்து கனி தரும் அதுபோல ஆண்டவரின் இல்லத்தில் வளரும் நாம் நன்மையில் வளர்ந்து என்றுமே செழுமையாய் பசுமையாய் வளர்வோம்.ஆண்டவருக்கு சாட்ச்சிகளாக வாழ்வோம்.
இயேசுவிற்கே புகழ்!அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!
Comments
Post a Comment