இறைவனின் இறைவார்த்தைகள் 29/06/2019
எபேசியர் 6:8
அடிமையாயினும் உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுவர். இது உங்களுக்குத் தெரியும் அன்றோ!
நண்பர்களே ! ஏழையாக இருந்தாலும் பணக்காரராக வாழ்ந்தாலும் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்.மா விதை விதைத்தால் அரளி மரம் முளைக்குமோ? அல்லது அரளி விதையை விதைத்தால் மா மரம் முளைக்குமோ? நன்மையை வாழும் காலம் முழுவதும் கொடுத்தீர்களென்றால் நன்மைகளையே பெற்றுக்கொள்ளவீர்கள்.ஒரு போதும் தீமை நெருங்காது ,உங்கள் உறவுகளுக்கும் ,தெரிந்தவர்களுக்கும் நன்மை செய்வதைவிட உங்களுக்கு தெரியாத ஏழை எளியவர்களுக்கும் ,ஆதவற்றோற்க்கும் ,உங்களோடு விரோதமாய் இருப்பவர்களுக்கும் எதிர்பார்ப்பு இல்லாமல் ,அகமகிழ்ந்து நன்மை செய்யுங்கள் நன்மையே பெறுவீர்கள். நன்மை செய்பவர்களிடம் மட்டுமல்ல உங்களை படைத்து கடவுளிடமிருந்தும்.
Comments
Post a Comment