இறைவனின் இறைவார்த்தைகள் 27/06/2019
லூக்கா 15(3-7)
அக்காலத்தில் இயேசு பரிசேயர்களுக்கு இந்த உண்மையைப் சொன்னார் உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக்கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார்.
அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.''
நண்பர்களே ! பாவ வாழக்கையிலிருந்து மனம் திரும்புங்கள் கல் மனம் படைத்தவர்களே ஒழுக்கம் கெட்ட வாழ்க்கையிலிருந்து ஒடுவிடுங்கள்,போதும் நெறிகெட்ட வாழ்க்கை ,சிந்தியுங்கள் மனம் மாறி உங்களை படைத்தவரிடம் செல்லும் நாள் இறைவன் மகிழ்ந்து கட்டி அனைத்து வரவேற்க்கும் நாளே!
இயேசுவிற்கே புகழ்!அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!
Comments
Post a Comment