இறைவனின் இறைவார்த்தைகள் 15/06/2019
தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;
மாசற்றவருக்கு எதிராகக்
கையூட்டுப் பெறார்; —இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்.
திருப்பாடல் 15-5
அநியாய வட்டி வாங்கிச் செல்வத்தைப் பெருக்குகிறவரது சொத்து, ஏழைகளுக்கு இரங்குகிறவரைச் சென்றடையும்.
நீதிமொழிகள்28-8
எளியவருக்குத் தீங்கிழைக்காமலும், வட்டிவாங்காமலும், கொடுத்ததற்கு அதிகமாய் வாங்காமலும், என் நீதி நெறிகளைக் கடைப்பிடித்தும், என் நியமங்களின்படி நடந்தும் இருந்தால் — அவன் தன் தந்தையின் குற்றத்திற்காகச் சாக மாட்டான்; அவன் வாழ்வது உறுதி.
எசேக்கியேல் 18:17
நண்பர்களே ! பணத்தை வட்டிக்கு கொடுத்து அதைசேமித்து வைக்காதீர்கள்.ஏழைகளுக்கும் உங்கள் உடன் பிறப்பகளுக்கும்,உறவினர்களுக்கும் உதவி தேவைபடும்போது வட்டி இல்லாமல் பணம் கொடுத்து உதவுங்கள் இறைவனுக்கே கடன் கொடுக்கும் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுங்கள்.ஒரு முறையாவது செய்து தான் பாருங்களேன்!இறைவனின் ஆசீரை நிச்சயம் பெறுவீர்கள்.
இயேசுவிற்கே புகழ்!அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!
Comments
Post a Comment