இறைவனின் இறைவார்த்தைகள் 14/06/2019
மத்தேயு 5(37-30)
விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.✠
ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.✠
உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.
நண்பர்களே! தீமையின் கவர்ச்சி நன்மையை மறைத்து விடுகிறது.தீய இச்சை எண்ணங்கள் மாசற்ற மனதை கெடுத்துவிடுகிறது.தவறு செய்யலாம் என்ற எண்ணம் மனதில் தோன்றுவதே தவறின் அடிப்படை எனவே அங்கே அதனை வேரறுக்க வேண்டும்.ஆன்மீக உதவியோடு வெல்ல வேண்டும்.
Comments
Post a Comment