இறைவனின் இறைவார்த்தைகள் 11/06/2019

சீராக்29
இரக்கம் காட்டுவோர் தமக்கு
அடுத்திருப்பவருக்குக்கடன் கொடுக்கின்றனர்;பிறருக்கு உதவி செய்வோர்கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
அடுத்திருப்பவருக்கு அவருடைய
தேவைகளில் கடன் கொடு;உரிய காலத்தில் பிறருடையகடனைத் திருப்பிக்கொடு.சொல் தவறாதே;
அடுத்தவர் மீது நம்பிக்கை வை;
வாங்கின கடனைக்கண்டெடுத்த பொருள்போலப்பலர் கருதுகின்றனர்;தங்களுக்கு உதவியோருக்குத்தொல்லை கொடுக்கின்றனர்.கடன்வாங்கும்வரைகடன் கொடுப்பவரின்
கையை முத்தமிடுவர்;
அடுத்திருப்பவரின் செல்வத்தைப்
பற்றித் தாழ்ந்த குரலில் பேசுவர்;
திருப்பிக் கொடுக்கவேண்டிய
போது காலம் தாழ்த்துவர்;
பொறுப்பற்ற சொற்களைக் கூறுவர்;காலத்தின்மேல் குறை காண்பர்.அவர்கள் கடனைத் திருப்பிக்கொடுக்க முடிந்தாலும்
பாதியைக் கொடுப்பதே அரிது.
அதையும் கண்டெடுத்த பொருள்
என்றே எண்ணிக்கொள்வர்;
இல்லையேல்,கடனைத் திருப்பித் தராமல்ஏமாற்றிவிடுவர்;
இவ்வாறு தாமாகவே
எதிரியை உண்டாக்கிக் கொள்வர்;
சாபத்தையும் வசைமொழியையும்
திருப்பிக் கொடுப்பர்;
மாண்புக்குப் பதிலாக
இகழ்ச்சியைத் தருவர்.

நீங்கள் கொடுக்காமல் ஏமாற்றுவது  கடனை மட்டும் அல்ல உங்கள் நம்பிக்கையையுமே.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!