Posts

Showing posts from January, 2025

ஏன் கடவுள், மனிதன் ஆனார்? -3

Image
  கடவுள், மனிதர்களை பொய் சொல்லாதே,கொலை செய்யாதே, திருடாதே,மோகம் பாவம் செய்யாதே என்று பல்வேறு கட்டளைகளை தந்து அதன்படியே மனிதர்கள் ஒழுக்கமாக வாழ வேண்டும் என வெறும் கட்டளைகளை தருகின்ற சர்வாதிகார கடவுளாக இல்லமால் , ஏழைக்குடும்பத்தில் சாதாரண மனிதனாக  கன்னி மரியாயிடம், பரிசுத்த ஆவியினால் பிறந்து வறுமையிலும், இளமையிலும்,கல்வாரி பாடுகளிலும் எந்த பாவமும் செய்யாமல் 33 ஆண்டுகள் பரிசுத்தமாக வாழ்ந்து, தனது உயிரையே பலியாகத்தந்து ஒட்டு மொத்த மனுகுலத்தையும் பாவத்திலிருந்து மீட்டார் இயேசு.வாழும்போது மனிதர்கள் ஒவ்வொவரும் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நம் மரணத்திற்கு பிறகு மோட்சம் அல்லது நரகம் என்கிற  தீர்ப்பை வழங்குகின்ற அதிகாரத்தை, பரிசுத்தமாக  வாழ்ந்த மனித அவதாரத்தினாலேயே, நீதி தவறாத தந்தையாம் கடவுளிடமிருந்து பெற்றார் இயேசு.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இயேசுவின் திருநாமத்தை  உச்சரிக்கும்போது ஒவ்வொரு முறையும் உங்கள் தலையை வணங்கி, அவருடைய புனித நாமத்தை உச்சரிக்கவும்."  - புனித பெர்னார்டின் "Whenever you hear the Holy Name of Jesus pronounced, bow your head; do so likewise every time you say His Sacred Name."  - St. Bernardine. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Happy New year 2025

Image
 2025 மகிழ்ச்சியும்,ஒற்றுமையும், சமாதானமும்,அன்பும், நிறைந்த ஆண்டாக நம் சமுதாயத்திலும்,வீட்டிலும் நிறைவாய் அமைய.. உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல்  உனக்கு அடுத்திருப்பவர் மீதும்  அன்புகூர்வாயாக. மாற்கு12(30-31). புத்தாண்டு வாழ்த்துக்கள். You shall love the Lord your God with all your heart, and with all your soul, and with all your mind, and with all your strength. The second is this, 'You shall love your neighbor as yourself.' There is no other commandment greater than these".  Mark 12:30-31 Happy new year 2025 சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.